Quantcast
Channel: அய்யனார் விஸ்வநாத்
Viewing all 133 articles
Browse latest View live

பார்போஸோ வின் குரங்கு

$
0
0

Pirates of the Caribbean திரைப்பட வரிசையை நான் பார்த்ததில்லை. இப்போது வெளிவந்திருக்கும் அதன் ஐந்தாம் பாகம் குறித்து நண்பர்கள் இணையத்தில் பேசிக் கொண்டதை வாசித்ததும் பார்க்கத் தோன்றியது. முதலில் இருந்து ஆரம்பிக்க எண்ணி  இவ்வரிசையின் முதல் படமான The Curse of the Black Pearl ஐ நேற்றுப் பார்த்தேன். அரை மணி நேரம் கடந்தும் படத்தோடு ஒன்ற முடியவில்லை. இடையில்  நிறுத்திவிடலாமா என்றும் கூட தோன்றியது. எதையும் உடனே முடிவெடுத்துவிடக் கூடாது, ஒன்றுமில்லாமலா ஐந்து பாகம் வரை வந்திருக்கும் என என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பார்த்தேன். ஒரு மணி நேரம் கடந்தும் ஒரு விஷயம் கூட உள்ளே போகவில்லை. கடனே  என்று பார்த்து முடித்தேன். எந்த ஆழமான பின்புலக் கதையுமில்லாமல், வியப்பூட்டும் கற்பனையுமில்லாமல் எப்படி இந்தப் படம் தொடர்ந்து எடுக்கப்படுகிறது என்பது விளங்கவில்லை. ஒருவேளை கேம் ஆஃப் த்ரோன் தந்த மயக்கத்தில் இருந்து நான் இன்னும் விடுபடாததால் இந்த மேலோட்டமான ஃபேன்டஸி படங்கள் ஈர்க்கவில்லையோ என்னவோ. இத்தனைக்கும் கதாநாயகியான கெய்ராவைக் குறித்து இரண்டு நாட்கள் முன்னர்தான் வியந்து எழுதியிருந்தேன்.

கேப்டன் ஜாக் ஸ்பேரோ ஓர் அதிநாயகன் கிடையாது. கோமாளித்தனமான சாகஸங்களும், அங்கும் இங்குமாய் தாவுவதும் நாயக பிம்பத்தைக் கட்டமைக்கவில்லை. டர்னரிடம் கொஞ்சம் வீரம் இருப்பதுபோல் தோன்றினாலும் இருவருமே எதையும் சாதிப்பதில்லை. பின்புலக் கதையோ அரதப் பழசு. மொத்த குழுவினரும் மறை கழண்ட கேசுகளைப் போன்ற தோற்றம் எழுந்தது. ஒருவேளை இந்தக் கேணைத்தனம்தான் இத்தொடரின் சிறப்போ என்னவோ. நாயகி மட்டும் கொஞ்சம் தமிழ்த்தனத்தோடு வில்லன்களிடம் இருந்து - அதுவும் சாகா ‘வரம்’ பெற்றவர்களிடமிருந்து - தன்னைக் காத்துக் கொள்ள பழக்கத்தியை எடுத்து மறைத்து வைத்துப் பயன்படுத்துகிறார். மனதிற்குள் அடேய் என்கிற குரல் எழுந்து அடங்குகிறது.

பைரேட்ஸ் களின் சாகஸ வாழ்வைக் குறித்துச் சொல்ல ஏராளம் இருக்கிறது. கடற்பேய்கள் இவ்வளவு பரிதாபமாகவா இருக்கும். நிச்சயமாக நான் ஃபேண்டஸி படங்களில் லாஜிக்கைத் தேடவில்லை. ஆனால் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஆன்மா அல்லது மெனக்கெடல் என்ற ஒன்று இருக்க வேண்டும்தானே, அது இதில் இல்லை.

ஜானி டெப் நடிப்பில் வெளிவந்த 'அரிஸோனா ட்ரீம்ஸ்'எனக்கு மிகப் பிடித்த படம். எமீர் கஸ்தூரிகா உருவாக்கிய ஆக்ஸல் என்கிற கதாபாத்திரத்திற்கு மிகச் சரியாகப் பொருந்தியிருப்பார். போலவே 'சார்லி அண்ட் சாக்லேட் ஃபேக்டரி'படத்தில் வரும் வில்லி வோன்கா கதாபாத்திரமும் எப்போதும் நினைவில் நிற்பவை. துரதிர்ஷ்டவசமாக ஜானி டெப் இந்த பைரேட்ஸ் வரிசைத் திரைப்படங்களில்தான் வெகுசன புகழடைந்திருக்கிறார். நடிகருக்கான அதிகபட்ச சம்பளமும் இத்திரைப்பட வரிசைக்காக அவர் பெற்றிருக்கிறார்.

மொத்த வரிசையையும் பார்க்காமல் இப்படி தீர்ப்பெழுதக் கூடாதுதான் என்றாலும் முதல் படத்தையே பார்க்க முடியவில்லையே நான் எப்படி மற்ற படங்களைப் பார்ப்பேன். மொத்த படத்திலும் என்னை ஈர்த்த விஷயம் பார்போஸோ வின் குரங்கு மட்டும்தான். அத்தனைக் கூட்டத்திலேயும் அக்குரங்கு மட்டும்தான் அவ்வளவு விழிப்பாக இருந்தது. டர்னாரால் நீரில் மூழ்கியும் கண்டுபிடிக்க முடியாத மெடலினை, குரங்கு அசால்டாக வாயில் கவ்விக் கொண்டு வந்து பார்போஸாவிடம் சேர்த்துவிடுகிறது. அபாரமான குரங்கு.

இந்த ஹாலிவுட் சாகஸ்ப் படங்களின் மீது எனக்கு எப்போதுமே விருப்பமிருந்தது கிடையாது. மனதளவில் பேணும் தூய இலக்கியத்தைப் போலவே சினிமாவையும் தூயதாகக்
கருதுபவன். அப்படியும் ஓரிரு படங்களைப் பார்த்து அதில் ஒன்ற முடியாமல் போய் இப்படிப் புலம்புவதுண்டு.  

Fast & Furious இன்னொரு ஒன்றமுடியாத டப்பா பட வரிசை. கருமம் இது எப்படி எட்டு பாகம் வருகிறது என வியந்து கொள்வதுண்டு. சிறுவர்களுக்கான திரைப்படமான cars வரிசைப் படங்கள் FF வரிசைத் திரைப்படங்களைக் காட்டிலும் பன் மடங்கு மேலானவை. மெக் குயின் எனப் பெயரிடப்பட்ட அந்தக் கார், ஓர் அபாரமான கதாபாத்திரமாகவே மாறியிருக்கும். இந்த திரைப்படங்களில் இருக்கும் புத்துணர்வும் விரிவான பார்வையும் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படங்களில் இல்லை.

அடுத்தடுத்த பாகங்களாக எடுக்கப்படும் சிறுவர் திரைப்படங்கள் அனைத்துமே எனக்குப் பிடித்தமானவை. டாய் ஸ்டோரி வரிசையிலிருந்து ஹாரி பாட்டர் திரைப்பட வரிசை வரைக்குமாய் பலமுறை இத்திரைப்படங்களை சேர்ந்து பார்த்து குடும்பம் சகிதமாய் வியந்திருக்கிறோம்.
பெரியவர்களுக்கான சாகஸப் படங்கள் தான் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதுவும் கேம் ஆஃப் த்ரோன் போல விரிவும் ஆழமான பின்னணியும் அபாரமான நுட்பமும் கொண்ட தொடரைப் பார்த்த பின்னர் சாகஸப் படங்களுக்கான எதிர்பார்ப்பின் எல்லை சற்று விரிவடைந்திருக்கிறது. 

என்னை ஏமாற்றாத சில தொடர் வரிசைப் படங்களில் மேட் மேக்ஸ் முக்கியமானது. இத்தொடரின் சமீபத்திய படமான Fury Road ஐப் பார்த்துப் பிடித்துபோய் அதன் முந்தைய படங்களை வரிசையாய் பார்த்து முடித்தேன். இத் தொடரின் தீவிரத் தன்மை எல்லாத் தரப்பையும் ஈர்க்கும் ஒன்று. ஜார்ஜ் மில்லர் புறவயமான காட்டுத்தனமான விஷயங்களை மட்டும் உருவாக்குவதில்லை, ஒவ்வொரு திரைப்படமும் ஒரு முக்கியமான அரசியலைப் பேசுவதால் இத் தொடர் வெகுசன விஷயங்களைத் தாண்டியும் கவனம் பெறுகிறது. சாகஸப் படங்களில் உள்ளீடாய் இருக்க வேண்டிய அம்சமும் அதுதான்.

குரங்குப் புத்தியும் பிழைகளற்ற நிகழும்

$
0
0

இரண்டு வாரங்களாக ஓஷோவின் சொற்பொழிவைக்  கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  நோன்புக் காலம் என்பதால் அலுவலக நேரம் மிகக் குறைவு. அலுவலகத்தில் ஐந்து மணி நேரமென்றால் அதற்குச் சரிபாதி காரில் இரண்டரை மணி நேரம். ஓஷோவைத் துணைக்கு அழைத்துக் கொண்டதால் இந்த அலுப்பு சுத்தமாய் தெரியவில்லை. வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடன் பயண நேரத்தைக் கடந்து விட முடிகிறது. 1984 ஆம் வருடம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அமெரிக்காவில் ஓஷோ நிகழ்த்திய உரைகள்  From Unconciousness to Consciousness என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கிறது.  முப்பது மணி நேரத்திற்கு மேல் நீளும் பேச்சு. ஒரு நொடி கூடத் தொய்வடைய வைக்காத பேச்சு. வெடிச்சிரிப்பும் கும்மாளமுமாய் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

மதங்கள், வழிபாட்டு முறைகள்,  தேவதூதர்கள், மெசையாக்கள், தீர்த்தங்கரர்கள், புத்த பிட்சுகள், சங்கராச்சாரியார்கள், போப்புகள், என ஒருவரையும் விடாமல் காய்ச்சி எடுக்கிறார். மிக ஆணித்தரமான வாதங்களை இவற்றிற்கு மற்றும் இவர்களுக்கு எதிராக முன் வைக்கிறார். கேட்க கேட்க புதுப் புது கதவுகள் திறக்கின்றன. காந்தியின் எளிமை குறித்தும் உணவு குறித்தும் ஓஷோ கிண்டலாய் விமர்சிக்கும்போது எழும் சிரிப்பு அடங்க வெகு நேரமாகிறது. ஆனால் இந்த அத்தனை தர்க்கங்களையும் உள்வாங்கிக் கொள்வதோடு நிறுத்திக் கொள்கிறேன். அவரே சொல்வது போல் அவரைப் பின் தொடர்பவர்களென யாரும் இருக்க கூடாது. சுயத்தை மீட்டெடுக்க வைப்பதே இத்தனைப் பேச்சுக்களின் நோக்கம். அந்த நோக்கத்தை நான் சரியாகப் புரிந்து கொண்டதாய் நினைக்கிறேன்.

குரங்கின் வழி வந்ததால் மனிதன் இயல்பாகவே குரங்கின் தோற்றத்தோடு அதன் சுபாவத்தையும் ஒத்திருக்கிறான்.  குரங்கால் ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க முடியாததைப் போலவே  நம் மனமும் புத்தியும் எண்ணங்களும் சதா அலைபாய்ந்து கொண்டே இருக்கின்றன. இரண்டாவது விஷயம் இன்னொருவரைப் போலச் செய்வது.  குரங்கிடமிருந்துதான்  இந்த இமிடேட் செய்யும் சுபாவமும் நமக்கு வந்திருக்கிறது. நாம் எப்போதுமே பிறரைப் போல வாழ்கிறோம் அல்லது மற்றவர்களைப் போலாக மெனக்கெடுகிறோம். மற்றதைப் பார்த்து ஏங்கியே செத்தும் போகிறோம். தனித்தன்மை என்பது குறித்து யோசிக்கக் கூட மறுக்கிறோம். இந்தக் குரங்குப் புத்தியிலிருந்து வெளிவந்து விட்டாலே நிறைய துன்பங்களைத் தவிர்க்க முடியும் எனத் தோன்றுகிறது. 

பயல்களிடம் ஓஷோ சொன்ன குரங்கு குல்லாய் கதையை சொன்னேன். இந்த இரண்டு அடிப்படை புத்திகளை மட்டும் சிறு வயதிலேயே களைந்து விட்டால் போதும். பெரும்பாலான பிரச்சினைகளைத் தாண்டி வந்து விடலாம்.

மதம் என்கிற பெயரில் சித்தாந்தம் என்கிற பெயரில் சொர்கத்தில் சிறப்பான வாழ்வு என்ற பெயரில் மனிதன் தன்னை வதைத்துக் கொள்வதை ஓஷோ மிகக் கடுமையாய் சாடுகிறார். எளிமை மிகப் போலித்தனமானது என்கிறார். எளிமை மீது எனக்கும் பெரிய மதிப்பில்லை. பெரும்பாலான எளியர்கள் அதை தங்களின் வலிமைக்கான, அதிகாரத்தைச் சென்றடைவதற்கான கருவியாகத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பது தமிழ் சூழலில் கண்கூடு. காந்தியின் எளிமை இன்றளவும் வியந்தோந்தப்படுகிறது. ஆனால் ஓஷோ அதை தரைமட்டமாக்குகிறார்.  காந்தி வறுமையை மக்களிடம் புகுத்தினார் என்கிறார். தன்னை வருத்திக் கொள்பவன் மாசோகிஸ்ட். பிறரை வருத்துபவன் சாடிஸ்ட். மிக அபூர்வமானவர்களே ஒரே நேரத்தில் சாடிஸ்டாகவும் மாசோகிஸ்டாகவும் இருக்கின்றனர். காந்தி அத்தகைய மாசோ சாடிஸ்ட் என வறுத்தெடுக்கிறார். காந்தி ஆசிரமத்தில் வழங்கப்படும் வேப்பிலைச் சட்னியையும், கொசுக் கடிக்காமல் இருக்க மண்ணென்ணையை உடம்பில் பூசிக் கொள்வதையும் காந்தியின் மாசோகிஸ சாடிசங்களுக்கான உதாரணங்களாகச் சொல்கிறார். ஒரு அமெரிக்கர் காந்தி ஆசிரமம் வந்து வேப்பிலைச் சட்னியை சாப்பிடும் அனுபவத்தை விவரிக்கும் போது சிரிப்பை அடக்கமுடிவதில்லை.


ஒரேகனில் இருக்கும் ரஜனீஷ்புர ஆசிரமம் ஏன் இவ்வளவு ஆடம்பரமாக இருக்கிறது என்பதற்கு, ”மன்னித்துக் கொள்ளுங்கள் இப்போதைக்கு இவ்வளவு வசதிதான் முடிந்தது விரைவில் இன்னும் வசதியாக இந்த ஆசிரமத்தை மாற்றுகிறோம்” எனப் பதில் சொல்கிறார். 

சுயவதை போலித்தனமானது. மதம், கடவுள், ஆன்மீகம், ஒழுக்கம், கர்மா எனப் பல்வேறு பெயர்களில் அதை இன்னொருவரின் மீது செலுத்துவது என்பது குரூரமானது. மேலும் ஓஷோ தன்னிடம் வருபவர்களிடம் இப்படி இருக்கச் சொல்கிறார். அவரது வார்த்தைகளில்,

I teach you to live tremendously, ecstatically, in every possible way. On the physical level, on the mental level, on the spiritual level, live to the uttermost of your possibility. Squeeze from each single moment all the pleasures, all the happinesses possible, so that you don't repent later on that, "that moment passed and I missed."

நிஜமாகவே இப்படி வாழத்தான் எனக்குப் பிடித்திருக்கிறது. ”நினைவின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் பிழைகளின் அவமானம் ” என்ற சுராவின் வரியை இலக்கியவாதிகளான நாம் நினைவில் வைத்திருப்போம். பிழையற்ற அவமானமற்ற நினைவுகளிற்கு, நிகழை முழுமையாய் வாழ்வதுதான் சரியான வழிமுறையாக இருக்கும். நானும் அதை நோக்கி நகர்வதாத்தான் தோன்றுகிறது.



இருளில் மறைந்திருக்கும் யானை

$
0
0
பேரண்ட் மீட்டிங் என்றாலே ஒரு அசெளகரிய மனநிலை வந்துவிடும். இரண்டு பயல்களைப் பெற்றவர்கள் இதை உணர்ந்திருப்பார்கள். இருவருக்கும் ஒரே நாளில் என்றால் பெரியவனை மனைவியிடம் தள்ளிவிட்டு சின்னவனோடு நான் ஒட்டிக் கொள்வேன். இருவருமே படிப்பில் சூரப்புலிகள்தாம் என்றாலும் பெரியவன் மற்ற விஷயங்களிலும் புலி. சின்னவன் காமெடி பீஸ் என்பதால் அவனைக் குறித்த புகார்கள் எதுவும் இருக்காது. அகில் ”சூப்பர்” என ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்வார்கள். பெரியவனுக்கு லெக்சர்கள் நீளும். இருக்கையில் உட்கா
ர்வதில்லை. ஒரே அடிதடி கலாட்டா என புகார் வாசிப்பார்கள். அவனை உருட்டி மிரட்டி பார்த்தபடியே இனி தொடராமல் பார்த்துக் கொள்கிறோம் என வீடு வருவோம். நான் பள்ளி நாட்களில் அநியாயத்திற்குப் பழமாய் இருந்தேன். முதல் வரிசை. முதல் ரேங்க். நல்லவனோ நல்லவன். ஒரே ஒரு சிறு கீறல் கூட என நடத்தையிலோ படிப்பிலோ இல்லை. நம் மீது இன்னொருவரின் கம்ப்ளைண்ட் என்பது இந்த வயதிலும் சற்றுப் பதட்டமாகத்தான் இருக்கிறது.  என் அப்பாவை பள்ளியில் சேர்க்க, டிசி வாங்க என இரண்டு முறைதாம் தொந்தரவு செய்திருக்கிறேன். இவர்களோ ஓட விடுகிறார்கள் என புலம்பித் தள்ளுவேன்.

டீச்சர்கள் வாசிக்கும் புகார்கள் உருவாக முதல் காரணம் அவர்கள் பிள்ளைகளுக்கு செவி கொடுக்காமல் இருப்பதுதான். குழந்தைகளுக்கும் ஒரு தரப்பு இருக்கிறது என்பதை உணராமல் அவர்களைப் பொதுவான தண்டனைக்கு உட்படுத்துவதுதான் நாளையடைவில் அவர்களை வன்முறையாளர்களாக மாற்றுகிறது. உடன் படிக்கும் சக மாணவர்களோடு உருவாகும் முரணை ஒரு ஆசிரியர் சரியாகக் கையாண்டால் பெரும்பாலான பிரச்சினைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படும். இந்தப் பொறுப்பற்ற சோம்பேறி ஆசிரியர்களாலும் மிக மோசமான புறச் சூழலாலும் சரியான கவனிப்பின்றி வளரும் பிள்ளைகள், மிக இளம் வயதிலேயே குரூரமான வன்முறையாளர்களாக மாறுகிறார்கள். அப்படிப்பட்ட இரண்டு மாணவர்களையும் அவர்களின் குரூரத்தையும் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த எலிபெண்ட் திரைப்படம் நம் முன் வைக்கிறது.

இயக்குனர் கஸ் வான் சாண்ட் உண்மைச் சம்பவங்களைத் திரைப்படமாக்குவதில் வல்லவர். நிதானமான திரைமொழியைக் கையாள்பவர். எலிபெண்ட் திரைப்படம் குறித்து எதுவும் தெரியாமல் பார்ப்போருக்கு முதல் நாற்பது நிமிடங்கள் மிக அலுப்பாக இருக்கக் கூடும்.  1999 இல் கொலம்பியாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை இது.  இரு மாணவர்கள் தங்களின் பள்ளிக்கூடத்தில் ஈடுபட்ட வன்முறை வெறியாட்டத்தை அப்படியே பதிவு செய்திருக்கும் படம். திரை மொழியாக இப்படம் ஒரு பள்ளிக்கூடத்தின் வெவ்வேறு மாணவர்களின் பின்னால்  தொடர்ந்து செல்கிறது. மிக நீளமான அந்த வராண்டாவை, பள்ளி வளாகத்தை, விளையாட்டுத் திடலை, காண்டீனை, லைப்ரரியை, லேப்பை கேமரா மிக நிதானமாகப் பதிவு செய்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் இன்னொரு கதாபாத்திரத்தைக் கடக்கும் காட்சிகள் திரும்பவும் வருகின்றன. அதாவது ஒரே சம்பவம் வெவ்வேறு பார்வையில் பதிவாகிறது. இந்தப் படத்திற்கு ஏன் எலிபெண்ட் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள் என்கிற கேள்விக்கான பதிலை இந்தக் காட்சி அமைப்பில் வைத்திருக்கிறார்.

இருளில் மறைந்திருக்கும் யானையைத் தடவிப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிற அபத்தத்தைப் போன்றது  இம்மாணவர்களின் செயல்பாட்டை மட்டும் வைத்துக் கொண்டு தீர்ப்பெழுதிவிடுவது
என்கிற இயக்குனரின் நிலைப்பாடு காட்சி மொழியாகவும் தலைப்பாகவும் வெளிப்பட்டிருக்கிறது. மினிமலிசம் இந்தக் கறாரான அரசியல் நம்மை வந்தடைய உதவுகிறது.

மேற்பார்வைக்கு ஒரு நாளில் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை மட்டுமே இத்திரைப்படம் பதிவு செய்திருப்பதாகத் தோன்றும். ஆனால் மிக ஆழமாக இம்மாணவர்களுக்கு செவி கொடுங்கள். அவர்களின் தரப்பைக் கேளுங்கள். நெருக்கடிக்குத் தள்ளாதீர்கள். எனப் பள்ளியையும் நம்மையும் இந்தத் திரைப்படம் ஸ்தூலமாகக் கோருகிறது. படம் முடிகையில் எழும் அழுத்தமும் உணர்வெழுச்சியும்  கஸ் வான் சாண்ட் கையாண்ட மினிமலிசத் திரைமொழியின் வெற்றியாகக் கருதலாம்.

படத்தின் துவக்கத்தில் குடிபோதையில் வண்டி ஓட்டி வரும் தகப்பனிடமிருந்து வண்டியை வாங்கி ஜான்  தன் பள்ளிக்கு  வருகிறான். தகப்பனை முன் சீட்டில் உட்கார வைத்துவிட்டு தன் சகோதரனை போனில் அழைத்து அவரை மீண்டும் வீட்டில் விடச் சொல்கிறான். இந்த நெருக்கடியில் பள்ளியின் முதல்வர் வேறு இவன் தாமதமாக வந்ததற்காகக் கடிந்து கொள்கிறார். தன்னுடைய அலுவலகத்திற்கு வரச் சொல்லி அறிவுறுத்துகிறார். இன்னொரு மாணவன் மாலை சந்திப்பிற்கு தன்னால் வரமுடியாது எனவும் தன் தாயும் தந்தையும் மிகக் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்கள் எனவுமாய் சொல்லிக் கொண்டு போகிறான்.

படுகொலையை நிகழ்த்தும் அலெக்ஸ்அறிவியல் லேப் பில் மற்ற மாணவர்கள் பாடத்தைக் கவனிக்கும்போது அவன் மட்டும் தனியாக அமர்ந்து படம் வரைகிறான். அவன் மீது ஒரு மாணவன் நுரைக்கும் ஸ்பிட் பாலை எறிகிறான். மிஷல் எனும் இன்னொரு பெண் சக மாணவிகளால் கிண்டலடிக்கப்படுகிறாள். இப்படி சிதறலாய் மாணவர்களின் பல்வேறு நெருக்கடிகள் சிறு சிறு சம்பவங்களாக உரையாடலாக சொல்லப்படுகின்றன.

அலெக்ஸ் மிகப் பிரமாதமாக பியானோ வாசிக்கிறான். படுகொலைக்கு மிகத் துல்லியமாக திட்டம் தீட்டுகிறான். இணையத்தில் துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை வாங்குகிறான். சக தோழனான எரிக்கிடம் கொலைகளுக்கு முன்பு ஹாவ் ஃபன் என்கிறான். கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளிவிட்டு கடைசியில் எரிக்கையும் சுடுகிறான்.

எரிக் பள்ளி முதல்வரிடம் துப்பாக்கி முனையில் பேசும் காட்சி மட்டுமே அவர்களின் அழுத்தத்தை வெளிப்படையாகச் சொல்கிறது. உன்னை உயிரோடு விடுகிறேன் எனவே நீ இனி வரும் மாணவர்களுக்கு செவி கொடுப்பாய் எனச் சொல்லி அவரை விட்டுவிடுகிறான். பின்பு மனம் மாறி சுடுகிறான்.

நல்லவேளையாக இந்தத் திரைப்படத்தை நுணுக்கம் தெரிந்த இயக்குனர் எடுத்திருக்கிறார். வேறு யாரிடமாவது இக்கதை சிக்கியிருந்தால் இரத்தத்தைத் தெறிக்கவிட்டு மற்றவர்களுக்கான ஒரு ஊக்கமான படமாய் மாற்றியிருப்பார்கள். கஸ் வான் சாண்ட் எடுத்துக் கொண்ட களத்தை மிகச் சரியாய் கையாண்டிருக்கிறார்.

எலிபெண்ட் திரைப்படம் கானில் தங்கப் பனை விருதை வென்றது.

மஞ்சள் இரைச்சலைக் கேட்க விரும்பாத உறக்கம்

$
0
0

உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரும் துயரங்களில் ஆஸ்விட் வதை முகாங்களுக்கு முக்கிய இடமுண்டு. ஜெர்மனியின் பிடியிலிருந்த போலந்தில் நாஜிக்களால் உருவாக்கப்பட்ட ஆஸ்விட் வதை முகாம்களில் யூத இன மக்கள் கும்பல் கும்பலாக கொன்றொழிக்கப்பட்டனர். குழந்தைகள், பெண்கள், ஆண்களென கிட்டத்தட்ட இருபது இலட்சம் பேர் இந்த வதைமுகாம்களில் விஷ வாயு மூலமாய் கொல்லப்பட்டனர். இந்த குரூரத்திலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் வாழ்வு, மரணத்தை விடக் கொடியதாக இருந்தது. இவ்வளவு பெரிய இனப்படுகொலையை நேரில் பார்த்து உயிர் பிழைத்த மக்கள் அந்நினைவு தந்த துக்கத்தைத் தாளமுடியாது தற்கொலை செய்து கொண்டனர்.  தங்களின் பிள்ளைகளை, குடும்ப உறவுகளை பலியிட்டுவிட்டு தான் மட்டும் வாழ்வதின் அபத்தத்தைத் தாளமுடியாது பைத்தியமாயினர்.

உலகப் படைப்பாளிகள் இந்த குரூரத்தை மிக ஆழமாகப் பதிவு செய்தனர்.  எண்ணற்ற படைப்புகள் கவிதைகளாக, நாவல்களாக, திரைப்படங்களாக, ஆவணப்படங்களாக இன்றளவும் வந்து கொண்டிருக்கின்றன. இச் சம்பவங்களை ஒட்டி வெளியாகிய திரைப்படங்களைத் தொகுப்பாக ஹாலோகாஸ்ட் படங்கள் என்கிறார்கள். சோஃபிஸ் சாய்ஸ் இவ்வகையில் மிக முக்கியமான நாவல் மற்றும் திரைப்படம்.

ஆஸ்விட்ஸ் வதை முகாமில் தன் தகப்பன், கணவன், குழந்தைகளைப் பறிகொடுத்துவிட்டு உயிர் தப்பும் போலிஷ் பெண்ணாக மெரில் ஸ்ட்ரீப் நடித்திருக்கிறார். அவரது நெடிய சினிமாப் பயணத்தில் இந்தக் கதாபாத்திரம் மிக முக்கியமானது. ஏராளமான விருதுகளை இதன் மூலம் பெற்றார்.1979 இல் வில்லியம் ஸ்டைரனால் எழுதப்பட்ட இந்நாவல் 1982 இல் திரைப்படமானது. நாவலைப் போலவே திரைப்படமும் மிகப் பரவலான கவனத்தைப் பெற்றது.

சோஃபிக்கும் நேதனுக்குமான காதல் காட்சிகள் மிகப் பரவசமானவை.  அதிகபட்ச அன்பும் அதே அதிகபட்ச சந்தேகமும் கொண்ட காதலனாக நேதன். அவன் அன்பில் திக்குமுக்காடும் சோஃபி, அவன் பைத்தியத் தன்மையும் சேர்த்து ஆழமாய் நேசிக்கிறாள். ஸ்டிங்கோ போன்ற ஒழுங்கான ஒருவனின் அன்பின் மேல் அவளுக்கு அத்தனை ஈடுபாடு இல்லாமல் போய்விடுகிறது.

வாழ்வில் இதற்கு மேல் எதிர்கொள்ள குரூரங்கள் ஒன்றுமே இல்லை எனும் அளவிற்கான துன்பங்களை அனுபவித்த சோஃபியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சாந்தப் படுத்தும் நேதன் கூடவே அவன் பைத்திய இயல்புகளையும் அவள் மேல் திணிக்கிறான்.
படத் தலைப்பான சோஃபியினுடைய தேர்வு நேதனா, ஸ்டிங்கோவா என நாம் யோசித்துக் கொண்டிருக்கும்போது, அசலான சோபியின் தேர்வு என்கிற தலைப்பிற்கான காரணம் இறுதியில் வெளிப்படுகிறது. அது நம்மை நடுநடுங்க வைக்கிறது.

 ஸ்டிங்கோ எழுதிக் கொண்டிருக்கும் நாவலைப் பிடுங்கி வாசித்து விடும் நேதன் அன்று இரவு அவனையும் சோபியையும் ப்ரூக்லின் பாலத்திற்கு அழைத்துப் போகிறான். நள்ளிரவில் அப்பாலத்தின் தூணின் மீதேறி நின்று மதுவருந்தும் காட்சியைப் பார்க்க அவ்வளவு பரவசமாக இருந்தது. தானொரு உயிரியில் விஞ்ஞானி என்றும் தன் புதிய மருந்து கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசை வழங்கப்போகிறார்கள் என்றுமாய் பரிசுகளோடு சோஃபியையும் ஸ்டிங்கோவையும் பார்க்க வரும் நேதன் பரவசத்தின் உச்சத்திலிருப்பான். நண்பனையும் காதலியையும் அணைத்தபடியே குடித்துக் கொண்டாடும் காட்சிகளில் நேதனின் இயல்பு அத்தனை உயிர்ப்பாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.

எமிலி டிக்கன்சனின் மிகப் புகழ் பெற்ற கவிதையான  Ample make this bed ஐ   சூரிய உதயத்தின் மஞ்சள் இரைச்சலைக் கேட்க விரும்பாத நேதன் மற்றும் சோஃபியின் முன்பு ஸ்டி ங்கோ வாசிப்பதோடு திரை உறைகிறது. படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இசைத் துணுக்குகளைக் கேட்கக் கேட்க காலமும் உறைகிறது.

கான்சண்ட்ரேஷன் காம்ப் படங்களை அத்தனை எளிதாய் என்னால் பார்த்துவிடமுடியாது. சமீபமாய் வந்த  Son of Saul உட்பட பல படங்களை பாதியில் நிறுத்தியிருக்கிறேன். சொல்லப் போனால் சோபிஸ் சாய்ஸ் வதை முகாம்களைப் பற்றிய படம் என எனக்குத் தெரியாது.  முக்கியமான படம் என்கிற வகைமையில் வெகு நாட்களாய் கிடப்பில் கிடந்ததைப்  பார்க்க ஆரம்பித்து இடையில் அயர்ந்து நிறுத்தப் போய்,  முடியாமல் பார்த்தேன். ஆனால் இந்த வரலாற்றுத் துயரங்களை நாம் அறிந்து கொள்ளத்தான் வேண்டும். மனிதன் எத்தனைப் பயங்கரமானவன் என்பதை உணரவாவது இந்த ஹாலோகோஸ்ட் படங்களைப் பார்த்தாக வேண்டும். இவ் வகைமையில் நான் பார்த்த சில படங்களின் பட்டியலைத் தருகிறேன்.

01. 2013 Ida
02. 2009 Inglourious Basterds
03. 2008  The Reader
04. 2002  The Pianist
05. 1993Schindler's List
06. 1990Korczak
07. 1974 The Night Porter
08. 1959 The Diary of Anne Frank
09. 1999Gloomy Sunday
10. 2007 The Counterfeiters
11. 2008 The Boy in the Striped Pajamas

இவை ஓரளவிற்கு அமர்ந்து பார்க்கும் அளவிற்கான குரூரங்களைக் கொண்டவை. இப்பட்டியலில் இருக்கும் நைட் போர்டர் மற்றும் ஆன்ரேஜ் வாஜ்டா இயக்கிய கோர்சாக் போன்றவை மிக நேரடியாகக் குரூரத்தைப் பேசும் படங்கள். மன திடத்தோடு பார்த்துவிடுங்கள். மேலும் ஹிட்லரின் கடைசி நாட்களைப் பேசும் படமான 2004 இல் வெளிவந்த Downfall ம்  மிக முக்கியமான திரைப்படம்.  

ஓரிதழ்ப்பூ அத்தியாயம் பத்தொன்பது

$
0
0

சாமிநாதனின் தினசரி மீண்டும் ஒழுங்கிற்கு வந்தது. கரும்பலகையால் துர்க்கை ஜோதிட நிலையம் என்றெழுதி வீட்டு வாசலில் திண்ணையை ஒட்டி இருந்த தூணில் மாட்டினான். சாமியாரிடம் இருந்து கொண்டு வந்திருந்த சில ஜோதிட சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் பஞ்சாங்கங்களை வருவோர் பார்வையில் படுமாறு வைத்தான். வீட்டின் இரு புறமும் இருந்த மண் திண்ணைகள் அவனுக்குப் போதுமானதாக இருந்தது. ஒரு திண்ணை அமர்ந்து கொண்டு ஜோசியம் பார்க்கவும்  இன்னொரு திண்ணை வருவோர் அமர வசதியாகவும் இருந்தது. துர்க்கா காலை எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அதிகாலையில் எழுந்து வயலுக்குப் போன தந்தைக்கு காலை உணவை எடுத்துக் கொண்டுச் சென்றுவிடுவாள். சாமிநாதன் திண்ணையில் இடுப்பில் கட்டிய காவி வேட்டி துண்டு சகிதமாய் அமர்வான். பெரும்பாலும் யாரும் வரமாட்டார்கள். அப்படியே வருபவர்கள் "நல்ல நாள் பார்த்து சொல்லுபா"என தெருவில் நின்று கேட்டபடியே சென்று விடுவார்கள். கொடுக்க அவர்களிடமும் ஒன்றும் இல்லை. சாமிநாதனுக்கு அலுப்பாகத்தான் இருக்கும் ஆனால் வெளிக் காட்டிக் கொள்ள மாட்டான். ஏதாவது ஒன்று நிகழ்ந்தால்தான் அவனை ஊருக்குத் தெரியும். அந்த சம்பவத்திற்காக வெறுமனே காத்துக் கொண்டிருந்தான்.

துர்க்காவின் தந்தைக்கு மூன்று ஏக்கர் நிலமிருந்தாலும் மானம் பார்த்த பூமி தான். ஏதோ ஓடிக்கொண்டிருந்தது. அவரும் துர்க்காவும் கடுமையாக உழைத்தார்கள். ஒரு சம்சாரியைத்தான் மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க நினைத்திருந்தார். ஆனால் நடக்கவில்லை. சாமிநாதன் அன்னக்காவடியாக இருந்தாலும் வீட்டோடு ஒருவன் கிடைத்தானே என்கிற நிம்மதி இருந்தது. நாள் முழுக்க வயலில் பாடுபட்டுக் கிடந்தே அவர் வாழ்நாள் கழிந்ததால் ஊரில் நல்லது கெட்டது எதிலேயும் அவர் தலையிட்டுக் கொண்டது கிடையாது. சாமிநாதன் இந்த இடைவெளியை நிரப்ப முயன்றான். மாலைவேளைகளில் அந்த ஊரில் இருந்த பஜனை கோவிலுக்குப் போய் அமர்ந்து கொள்வான். சும்மா வருவோர் போவோரைப் பார்த்து ஏதாவது சொல்வான். முகத்தைப் பார்த்தே எதிர்காலத்தைத் துல்லியமாக கணிக்கும் ஆற்றல் தன்னிடம் இருப்பதாக சொல்லுவான். எளிய அம்மனிதர்கள் வாய்பிளந்து அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஊர் எல்லையில் மாரியம்மன் கோவில் ஒன்று இருந்தது அங்கும் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் போய் சத்தமாக அம்மனுக்கு சொல்லும் மந்திரங்களை சப்தமாய் உச்சரிப்பான். பெரும்பாலும் அங்கு வரும் பெண்கள் வாய் பிளந்து அவனைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிறுவர்கள் அவனிடம் போய் விபூதி பூசிக் கொள்வார்கள். இப்படியாக மெல்ல மெல்ல சாமிநாதன் அந்த ஊரில் தன் பெயரை வளர்த்து வந்தான். ஆனாலும் மிக முக்கியமான சம்பவமென ஒன்றும் நிகழவில்லை. பத்து பைசா கூட வருமானமென இல்லை.

துர்க்காவிற்கு இது ஒரு பொருட்டாக இல்லை. அவள் நாள் முழுக்க உழைத்தாள். தந்தை தூங்கியது உறுதியானதும் இரவில் சப்தமெழுப்பாமல் அவனோடு உறவு கொண்டாள். மீண்டும் காலையில் தன் வேலைகளில் மூழ்கிவிடுவாள். சாமிக்கு இந்த இருள் சம்போகம் மெல்ல அலுக்கத் துவங்கியது. மதியம் வீட்டிற்கு வரச் சொல்லி அவளை நச்சரிப்பான். அவளோ உறுதியாய் அதை மறுத்துவிடுவாள். சாமிநாதனுக்கு மதியப் பொழுதைத் தள்ளுவதுதான் சாதனையாக இருந்தது. நாய்கள் கூட மதியம் நடமாடாத தெருவது. பக்கத்திலிருக்கும் பெரிய ஊரான சங்கராவரத்துக்குப் போய்வரும் ஆசை இருந்தாலும் காசிருக்காது. தூங்கியோ அல்லது புரட்டிப் புரட்டி நைந்து போன பஞ்சாங்கத்தை மீண்டும் நைய வைத்துக் கொண்டிருப்பான். ஆறு மாதம் இப்படியே ஓடியது.

மழைக்காலம் ஆரம்பித்தது. மழையென்றால் அப்படி ஒரு மழை. இடைவிடாத மழை. வெளியில் மக்கள் தலைகாட்ட முடியவில்லை. வயல் வேலைகள் முடங்கின. ஊரே வெள்ளக்காடானாது. அந்தத் தெருவில் இருந்த பெரும்பாலான வீடுகள் மண்வீடுகள்தாம். எல்லாமும் மழையில் ஊறி சரிந்தன. இருந்த சொற்ப பொருட்களையும் இழந்த மக்கள். பஜனைக் கோவிலில் தஞ்சமடைந்தனர். அங்கும் இடமில்லாமல் பெரியசாமி கவுண்டர் வீட்டு முற்றம் உட்பட ஊரில் இருந்த ஓடுவேய்ந்த வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். என்னசெய்வதென்று மக்கள் திகைத்தபோது ஊரின் பெரிய தலைக்கட்டுகளுக்கு சாமிநாதனின் இருப்பு நினைவிற்கு வந்தது.

"ஊர்ல ஒரு ஜோசியன் இருக்கானே அவன கூட்டி வாங்கய்யா"என்றனர்.

அந்த மழை நாளில் துர்க்கா கொடையாய் மாற்றித் தந்த  ஒரு கோணிப்பையை தலையில் மாட்டிக் கொண்டு கவுண்டர் வீட்டிற்குப் போனான். நல்ல அகலமான திண்ணைகள் வைத்து மிக உயரமாய் சுவரெழுப்பி கட்டப்பட்டிருந்த வீடது. முற்றத்தில் மட்டுமே ஐம்பது பேர் அமரலாம். ஊரில் இருந்த சம்சாரிகள் அனைவரும் அங்கு ஒண்டிக் கொண்டிருந்தனர். சாமி  சம்பவம் என்ன என்பதைப் புரிந்து கொண்டான். தன் குரலைத் திடமாக்கிக் கொண்டான். ஊர் பெரியவரான பெரியசாமி கவுண்டரின் தந்தைப் பேச்சைத் துவங்கினார்.

"ஜோசியர் தம்பி இந்த மழைய நிறுத்த வழி இருந்தா சொல்லு. மக்க இவ்ளோ கஷ்டப்படுதுங்க நாலு விஷயம் தெரிஞ்சவன் நீ நல்லது கெட்டதுக்கு முன்னாடி வர வேணாமா? "

"சர்தாங்கய்யா. சொல்றேன்னு கோவிச்சுக்க கூடாது. நான் போவாத ஊர் கிடையாது பாக்காத மக்க மனுசங்க கிடையாது. ஆனா இந்த ஊரும் ஆளுங்களும் அப்படி இல்லிங்களே அதனாலதான் நான் உண்டு என் வேல உண்டுன்னு இருந்தேன். தல ஆடினாதானய்யா வாலும் ஆடும்"

"என்னப்பா சொல்ற?"

"ஆமாங்கய்யா, ஊர்ல ஒரு கோவில் கிடையாது. பூஜை புனஸ்காரம் கிடையாது. அப்புறம் எப்படிங்க சாமி நம்ம ஊரக் காப்பாத்தும். இதெல்லாமே ஊருக்கு வரும் வினைங்க சாமின்னு ஒண்ணு இருக்கறதையே நாம மறந்திட்டா, சாமி யாருன்னு நமக்கு இப்படிக் காட்டுங்க "

"ஆமாய்யா நீ சொல்றதும் சரிதான். இத்தன வருசம் எல்லாஞ் சரியாத்தான் இருந்தது.   மாரியாத்தா கோவில் பூஜாரி போன வருசம் கோவிலுக்கு போன பொம்பளய இழுத்துட்டு வெளியூருக்கு ஓடிப்போயிட்டான். அவ புருசன் குடிச்சிட்டு வந்து இதோ இந்த வீட்டு முன்னாடி வந்து மண்ண வாரி விட்டுப் போனான்.  அதுக்குப் பிறகு நாங்களும் வெட்கப் பட்டுட்டு அந்தக் கோவில் பக்கம் போகல. அங்க பூஜ ஒண்ணும் பண்ணல. ஆனா வருசா வருசம் பஜனை கோவில்ல தெருக்கூத்து போட்டுற்றமே"

"மழ வற்றதுக்கு தெருக்கூத்து போடுறீங்க, வந்த மழைய நிறுத்த என்ன பண்றீங்க? மொத்த கும்பலும் அமைதியானது. சரி என்ன பண்ணனும்னு சொல்லுங்க பன்னிடுவோம்."

சாமிநாதனுக்கும் உள்ளூர என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமால்

"மழயோட சாமி வருண பகவானுங்க. அது கோவமாயிட்டதாலதான் இப்படி ஒரு ஊழித் தாண்டவம் ஆடுதுங்க. வருண சாமிய அமைதிப்படுத்தனும். கூடவே சேத்து இப்படி சொழட்டி சொழட்டி அடிக்கிற காத்த நிறுத்த வாயு பகவானையும் சாந்தப்படுத்தனுங்க."என்றான்

"சரி பண்ணிடுவோம். நீங்க ஆக வேண்டிய காரியங்களை கவனிங்க"

எனப் பெரியசாமி கவுண்டர் வாய் திறந்தார்.

"ஒரு யாகம் ஒண்ணு வளக்கனும். யாகம் முடிஞ்சதும் பலி கொடுக்கனும் அவ்வளாவுதாங்க"என்றான்.
"வண்டிய எடுத்துக்கோங்க திர்ணாமல வேணும்னாலும் போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துருங்க. பலிக்கு எத்தன கெடா வேணும்?"

"வருணனுக்கு ஒண்ணு, வாயுக்கு ஒண்ணு பூஜாரிக்கு ஒண்ணு ஆக மூணுங்க."

"சரி,   பண்ணிடலாம். "

மாரிமுத்து என குரல் கொடுத்தார். ஓட்டுனர் முன்னாடி வந்தார்.

"இப்பவே கெளம்பிடுங்க இருட்டறதுக்கு முன்னாடி வந்துடுங்க.ரோடுடாலாம்  ஒரே வெள்ளக்காடா இருக்கும். பாத்துப் போய்ட்டு வாங்க"என்றார்.

சாமிநாதனுக்கு மகிழ்ச்சி கரைபுரண்டது உடலில் ஒரு தோரணை கூடியது.

வீட்ல பூஜ அற எங்கைங்க என பெண்கள் இருந்த திசைக்காய் பார்த்துக் கேட்டான். ஒடிசலாய் சிவப்புப் பெண்ணொருத்தி வாங்க என அவனை உள்ளே அழைத்துச் சென்றாள். சாமிநாதன் முதன் முறையாய் அப்படி ஒரு வீட்டிற்குள் நுழைகிறான். மிகப் பெரிய கூடம். எங்கு பார்த்தாலும் தேக்கு மரச் சாமான்கள். நடுநாயகமாய் மரக்கதவு வைத்த பெரிய சாலிடர் டிவி. கூடத்தைக் கடந்ததும் வலது புறம் மணிக்கதவு வைத்த பூஜை அறை. சாமிநாதன் தோளிலிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டினான். இரண்டு பெரிய குத்து விளக்குகளை ஏற்றினான். மகமாயி மாரியாத்தா காளியாத்தா என சத்தமாய் முனகியபடியே விழுந்து வணங்கினான். உடன் வந்த ஒடிசல் பெண் கலக்கமாய் கன்னத்தில் போட்டுக் கொண்டாள். எழுந்தவன். அம்மா ஒரு வாய் காபி கிடைக்குமா என்றான். இதோ சாமி என அவள் சமையலறைக்காய் ஓடினாள்.

சாமிக்கு அந்த உடல் மொழி புரிந்தது. மிதப்பாய் அந்த அறையை ஒரு நோட்டம் விட்டு வெளியே வந்தான். வண்டி ரெடியா என குரல் கொடுத்தான். காபி டம்பளர் முன் நீண்டது. அவன் வாழ்நாளில் அப்படி ஒரு காப்பியை முதன் முறையாய் குடித்தான். நல்லதும்மா என அந்தப் பெண்ணை வணங்கி வெளியே வந்தான். வெள்ளை அம்பாசிடர் தயாராக இருந்தது. பின் சீட்டில் ஏறி அமர்ந்து போலாம்பா என்றான். மழை தொடங்கியது. வண்டி மழையைக் கிழித்துக் கொண்டு சாலையில் விரைந்தது. குண்டும் குழியுமான அச்சாலையில் நிமிடத்திற்கொருமுறை சாமி இருக்கையிலிருந்து அரையடி எம்பி மீண்டும் விழுந்தான். ஒவ்வொருமுறைக்கும் பாத்துப்பா பாத்துப்பா என்றான்.

சங்கராபுரம் முழுக்கவே அடைந்து கிடந்தது. ஒரு கடை கூட இல்லை. ஒரு ஒயின் ஷாப் மட்டும் திறந்திருந்தது. சாமி அங்கு நிறுத்தச் சொன்னான்.

"மாரிமுத்து சாமிக்கு படையல்ல சாராயமும் இருக்கனும் நம்ம நல்ல சீமச்சாராயம் வச்சிட்டா ஒடனே மனங்குளுந்துரும், போய் வாங்கியாரேன்"எனச் சொல்லிவிட்டு இறங்கிக் கொண்டான். காரில் வந்து இறங்கியவனுக்கு கிடைத்த மரியாதை பலமாக இருந்தது. சாமி உள்ளே போய் அமர்ந்தான். பீர் என்பதைத் தவிர அவனுக்கு வேறு பெயர் எதுவும் தெரியாது. கடை முதலாளியே அருகில் வந்தார். உங்கள பாத்ததில்லையே என தலை சொறிந்தார்.

"நமக்கு வெளியூரு. என்ன இருக்கு? என்றான்
"இங்க என்னங்க பீரும் பிராந்தியும்தான் மிராசுங்களுக்காக ஸ்காட்ச் வச்சிருப்பங்க அத தர்ட்டுங்களா"என்றார்.

"ம்ம் எடுங்க கூட ரெண்டு மூணு பார்சலும் பண்ணிடுங்க என்றதும் கடை ஓனர் மிரண்டார்.

ஓடிப்போய் ஒரு வாட் 69 எடுத்து வந்து உடைத்து க்ளாசில் ஊற்றினார். சாமிக்கு இப்போதும் உள்ளூர நடுக்க மிருந்தது. அவன் கையில் ஒன்றுமில்லை எல்லாமும் ஓட்டுனரிடம்தான் இருந்தது. மடக்கென க்ளாசில் இருந்ததை எடுத்துக் குடித்தான். தொண்டையில் ஆரம்பித்து அடிவயிறு வரை எல்லாமும் எரிந்தது. சமாளித்துக் கொண்டான். கடை ஓனர் சோடா சேக்கிறதில்லைங்கிலா என்றார். சாமி மையமாய் சிரித்தான். சோடா சேக்கனும் மனதில் குறித்துக் கொண்டான். சரி சோடா சொல்லுங்க என்று அடுத்த ரவுண்டை அவனே ஊற்றினான். இரண்டாவது ரவுண்ட் உள்ளே போனதும் சாமிக்கு உச்சத்தில் போய் அமர்ந்து கொண்டது. தலையை உதறிக்கொண்டான். சிகரெட் என்றான். உடனே வந்தது. ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான். சகலமும் சுழன்று நின்றது. மிதந்தான். ஆனாலும் வந்த வேலையை மறந்து விடக் கூடாது. இதுதான் ஆரம்பம். முதலிலேயே கோணக்கூடாது. அவனுடைய சகல நரம்பும் விழிப்படைந்தது. டரைவரைக் கூப்டுங்க என குழறலைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னான்.

மாரிமுத்து வந்து நின்றான்.

"தம்பி இதுக்கு காசு கொடுத்திரு, ஐயா கொடுக்கரத வாங்கி வண்டில வை. சாமிக்கு வைக்கறது நல்லாருக்கனும். அதான் அடிச்சி பாத்தேன். நீ வாங்கிடு "

என தள்ளாட்டத்தை வெளிக்காட்டிக்கொள்ளாது கடையில் இருந்து இறங்கிப் போனான். ஓட்டுனர் கடை முதலாளியிடம் புட்டிகளை வாங்கிக் கொண்டு வந்தான். போலாங்களா என்றதற்கு பின் சீட்டில் சரிந்திருந்த சாமி சரியென்றான். போகப்போக மழை குறைந்திருந்தது. சாமிக்கு போதையும் தெளிந்திருந்தது. ஏனோ அவனுக்கு மூங்கில் துறைப் பட்டு போகும் எண்ணம் உதித்தது. இயன்றால் தன்னை விரட்டிய அந்த சாமியையும் பார்த்து வர வேண்டும்.

மாரிமுத்துவிடம், மாரி மூங்கில் தொர பட்டுக்கு வண்டிய விடு. அங்கதான் எல்லாமும் சரியா கெடக்கும் என்றான். மாரி வண்டியைத் திருப்பினான். மூங்கில் துறைப் பட்டு பஸ் ஸ்டாண்டில் பழங்களை வாங்கிக் கொண்டான். பஜாரில் செட்டியார் கடையில் பூஜைப் பொருட்களை வாங்கினான். இனி ஏரிக்கரைக்குப் போக வேண்டும். ஆனால் கார் போகாது. சாமி காரை வயல் எல்லை வரை கொண்டு போய் நிறுத்தச் சொன்னான். மழை ஆரம்பித்திருந்தது. போதை சுத்தமாய் இறங்கி அவன் வன்மம் மெல்ல மேலெழ ஆரம்பித்திருந்தது. மாரிமுத்துவை காத்திருக்கச் சொல்லிவிட்டு வரப்பில் தெளிவாய்  நடந்து போனான். சாமியாரின் குடிசைக் கதவு சாத்தியிருந்தது. மழை மொத்த பகுதியையும் நாசமாக்கி விட்டிருந்தது. குடிசையின் கூரைக் கீற்றுக்கள் சிதறிக் கிடந்தன. கூரை திறந்திருந்தது. சாமி படலைத் திறந்து கொண்டு உள்ளே போனான். தரையில் முட்டி அளவிற்கு தண்ணீர் நின்றிருந்தது. சாமியார் இல்லை. அவன் மூளை பரபரப்பானது. அவரின் பெட்டியைத் தேடினான். அந்த ட்றங்குப் பெட்டி ஒரு மூலையில் தண்ணீரில் மூழ்கி இருந்தது. ஓடிப்போய் எடுத்துக் கொண்டான். அவ்வளவு கனமில்லை. மிகுந்த உற்சாகத்தோடு அதைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தான். வரப்பில் நடந்து காரிடம் சென்றான். மாரிமுத்து ஓடிவந்து அதை வாங்கிக் கொண்டான். வண்டியின் டிக்கியைத் திரந்து அதில் வைத்தான். சாமிக்கு வானமே வசப்பட்டதைப் போலிருந்தது. மாரி அந்த பாட்டில்ல ஒண்ண தொற என்றான். மாரி தயங்கினான்.

"மாரி இப்ப உள்ள வச்சியே அத என்னன்னு  நினைச்ச? பொக்கிஷம். அத்தனையும் பொக்கிஷம். உன்ன ஒரே நாள்ள கோடீஸ்வரனாக்கவா?"அதெல்லாமும் அதுல இருக்கு"

மாரி மிரண்டான். ஏற்கனவே திறந்திருந்த பாட்டிலை சாமியிடம் நீட்டினான். சாமி அதைப்பிடுங்கி மடக் மடக் எஎனக் குடித்தான். பின் ஆழமாய் மூச்சை இழுத்து  அந்த சிகெரெட்டை எடு என்றான்.


ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபது

$
0
0

ஸ்கந்தாசிரமத்தை சென்றடைந்தபோது நேரம் உச்சியைத் தாண்டியிருந்தது ஆனாலும் வெயில் தெரியவில்லை. உயர்ந்த மரங்களின் நிழல் அந்தச் சிறு வீட்டை முழுமையாய் மூடியிருந்தது. பிரதான வீட்டிலிருக்கும் சிறு புத்தக அடுக்கின் அருகாமையில் ஒரு வெள்ளைக்காரர் அமர்ந்து புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார். குறுகலான தியான அறையில் இன்னொரு வெள்ளைக்காரப் பெண் கண்மூடி அமர்ந்திருந்தாள். சப்தமெழுப்பாமல் காம்பவுண்ட் சுவருக்கு அருகாமையில் சென்றேன்.மலை இறக்கம் பார்க்க சற்றுக் கிறுகிறுப்புத் தோன்றியது. மீண்டும் திரும்பி வந்தேன். ஒரு நல்ல மணம் நாசியை நிறைத்தது. இதென்ன மணம் என யோசித்தபோதுதான் தலைமீது ஒரு பவழமல்லிப் பூ வந்து விழுந்தது. இரண்டு மூன்று பவழமல்லி மரங்கள் ஒடிசலாய் நின்று கொண்டிருந்தன. சற்று உற்றுப் பார்த்தேன். காற்றின் பாடலுக்கு அப்பூக்கள் சிறுசிறு கிளைகளில் தொற்றியபடி காம்பை அசைத்துக் கொண்டிருந்தன. மனம் அப்படி ஒரு உவகை அடைந்தது. முதன்முறையாக வாஞ்சை என்ற உணர்வு எனக்குள் எட்டிப் பார்த்தது.மெல்ல நடந்து ஆசிரமத்தின் பின் பக்கம் போய் அங்கு ஆண்டாண்டுகளாய் நின்று கொண்டிருக்கும் மாமரத்தின் மிகப் பருத்த வேர்களின் இடைவெளியில் அமர்ந்தேன். என்றுமே உணர்ந்திராத பசியை உணர்ந்தேன். அந்தப் பசி உணர்வு அவ்வளவு நன்றாக இருந்தது. குடியும் புகையும் என் மூளையை மட்டுமல்ல சுவை நரம்புகளையும் துண்டித்து விட்டிருக்கிறது.

வீட்டின் அமைதி நினைவிற்கு வந்தது. குளுமையான பின்புறத் தோட்டம் நினைவில் வந்து அழைத்தது. அங்கையின் அகலப் பொட்டு வைத்த முகம். பசி. உடல் திண்மமானது. பயம் அகன்றதைப் போலிருந்தது. உடனே வீட்டிற்குப் போய் அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. எழுந்தேன். தியான அறையைக் கடக்கும்போது அநிச்சையாய் கைகள் கூப்பின. ரமணரை விழுந்து வணங்கிவிட்டு மலைச்சரிவில் நடக்க ஆரம்பித்தேன். காற்று சுழன்றது. திடீரென சூரியனை மேகங்கள் மூடின. வானம் பத்து நிமிடத்தில் கருத்தது. மனம் திக் கென ஆகியது. இதென்ன திடீர் இருள். நடையை துரிதப்படுத்தினேன். அடுத்த பத்து நிமிடத்திற்குள் மூக்கின் மீது முதல் மழைத்துளி வந்து விழுந்தது. மெல்ல மெல்ல தூறல் வலுக்க ஆரம்பித்தது. மழை தொடங்கியதும் பயம் போனது.

முதன் முறையாய் மழை பெய்யும் போது மலையில் நிற்கிறேன். உடல் சிலிர்த்தது. மேகம் அடர்வாய் மலை உச்சியில் இறங்குவது தெரிந்தது. மலைச்சரிவில் காய்திருந்த பாறைகள் அனைத்தும் ஈரத்தில் மினுமினுத்தன. நடக்க நடக்க கால் வழுக்கியது. இறக்கம் என்பதால் நீர் கால்களை நனைத்துத் தாண்டி வழிந்தது. சற்று நேரம் இந்த மழையில் அமர்ந்திருக்கத் தோன்றியது. படிக்கட்டுகளை விட்டு விலகி மேற்குப் பக்கமாய் இருந்த ஒரு உயரமான பாறையின் மீது வழுக்கலாய் ஏறி அமர்ந்து கொண்டேன். மலைச்சரிவும், சரிவிற்கு அப்பால் விரிந்த வயல் வெளிகளும் தென்பட்டன. பசுமை பசுமை அவ்வளவு பசுமை. இவ்வளவு பசுமையானதா நம் நகரம் என்ற ஆச்சரிய உணர்வு தோன்றியது. திருவண்ணாமலை ஒரு வறட்சிப் பகுதி. வெயில் நகரம் என்றுதான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த மழை என் ஊரையே எனக்குப் புதிதாய் அறிமுகப்படுத்தியது. இந்த உயரத்தில் இருந்து பார்க்கும்போது எவ்வளவு மரங்கள் தென்படுகின்றன. ஒரு நாள் கூட இவ்வளவு மரங்கள் சூழ வாழ்கிறோம் என்ற எண்ணமே தோன்றாமல் இருந்திருக்கிறோம். என்ன மாதிரியான பைத்தியம் என்னை பீடித்திருந்ததோ எல்லாமும் மழையில் கழுவி காலடியில் வழிந்து ஓடுவதைப் போலிருந்தது.

மழை மேலும் வலுத்தது. மழைத்தாரைகள் உடலில் ஊசியாய் குத்தின. உணர்வுகளை மறந்து மொத்தமாய் மரத்துப்போன உடல் புத்துணர்வடைந்தது. கொஞ்சம் கூட அசையாமல் அம்மழையை முழுவதுமாய் எனக்குள் வாங்கிக் கொண்டேன். எவ்வளவு நேரமானதெனத் தெரியவில்லை. வானம் மெல்ல மெல்ல தெளிவடைந்தது. மழை, தூறலாய் ஓய்வெடுத்தது. கடைசிச் சொட்டு மழைத்துளி நிற்கும் வரை அசையாமல் அமர்ந்திருந்தேன். காற்றில் ஈரம் கூடியது. உடல் மெல்ல நடுங்க ஆரம்பித்தது. மறந்திருந்த பசி மீண்டும் நினைவில் வந்தது. பாறையில் இருந்து தளர்வாய் இறங்கினேன். இனி நான் சரியாகிவிடுவேன் எனத் தோன்றியது. சரியாகிவிட்டேன். மனம் உறுதியடைந்தது. மீண்டும் படிக்கட்டுகளில் இறங்க ஆரம்பித்தேன். மழை உலகையே சுத்தமாய் கழுவித் துடைத்து விட்டிருக்கிறது. அத்தனையும் பரிசுத்தம். மஞ்சம் புற்களின் ஈர வாசம் கிளர்வாய் இருதது. காமம் துளிர்விட்டது. வேக வேகமாய் இறங்கினேன். ரமணாசிரமத்தின் கம்பிக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். ஒரு சிறு ஓடை உருவாகியிருந்தது. செம்மண் குழம்பலாய் நீர் பாய்ந்து கொண்டிருந்தது. வெளியில் வந்தேன்.

செங்கம் சாலையில் மக்கள் நடமாட்டமே இல்லை. ஆசிரமத்தின் எதிரிலிருக்கும் டீக் கடை திறந்திருந்தது. குளிருக்கு ஒரு டீ குடிக்கலாம். தெப்பலாய் நனைந்திருந்த என்னை கடையில் வித்தியாசமாய் பார்த்தார்கள். டீ சொன்னேன். சூடான அந்த டீயை வாங்கும்போதுதான் ஈரத்தில் விரல்கள் விரைத்திருப்பதைப் பார்த்தேன். சிறுவயதில் கிணற்றில் ஊறிக் கிடந்து வெளியே வரும்போது இப்படித்தான் கை விரல்கள் நமுத்திருக்கும். டீ யை வாங்கி ஊதி ஊதிக் குடித்தேன். ஒரே வார்த்தைதான். அமுதம். அந்த டீயில் ஏலக்காய் மணத்தது. ஸ்நேகமாய் கண்களை உயர்த்தி டீ மாஸ்டரைப் பார்த்து தலையசைத்தேன். அவர் புரிந்து கொண்டிருப்பார். இன்னோர் டீ போடவா எனக் கேட்டார். வேண்டாம் என தலையசைத்து விட்டு வெளியில் வந்தேன். கால்களில் செருப்பில்லாததை அப்போதுதான் உணர்ந்தேன். ஆசிரமத்தில் செருப்பை விட்டது நினைவிற்கு வந்தது. மீண்டும் போய் எடுத்துக் கொள்வதற்காக சாலையை கவனிக்காமல் கடக்க முற்பட்டேன்.

ஏய் ஏய் ஏய் என்கிற குரல்கள் என்னைச் சூழந்தன. என்ன நடக்கிறது எனப் புரிவதற்குள் ஒரு பைக் எனக்கு அருகாமையில் வந்துவிட்டிருக்கிறது. அதன் ப்ரேக்குகளின் கதறலை ஈரச் சாலை கேட்கவில்லை. பேங்க் என மூளைக்குள் குரல் கேட்டது. என் அடிவயிற்றில் ஏதோ பலமாய் மோதியது. தூக்கி வீசப்பட்டேன். உடல் காற்றில் இருப்பதை உணர்ந்தேன். பைக்கை ஓட்டி வந்தவன் சறுக்கி விழுந்தான். அவன் பின்னால் அமர்ந்திருந்த பெண் பக்கவாட்டில் விழுந்தபோதுதான் கவனித்தேன். அவள் அங்கை. என் ப்ரிய அங்கை. என் மனைவி அங்கையற்கன்னி. கீழே விழுந்தபோது கையைத் தரையில் கவனமாய் ஊன்றிக் கொண்டேன். கையின் எலும்பு உடைந்திருக்கலாம். ரத்தம் வழிந்தது. சுதாரித்து எழுந்து கொண்டேன். விழுந்து கிடந்த அவர்களை நோக்கி ஓடினேன். அங்கையின் ஒரு கால் பைக்கிற்கு அடியில் மாட்டியிருந்தது. ஓட்டி வந்தவன் தலையை தரையில் இடித்துக் கொண்டதால் நினைவைத் தப்பி இருந்தான். ஓடிப்போய் பைக்கை தூக்க இன்னும் இரண்டு மூன்று கரங்கள் நீண்டன. அங்கை வலியில் முனகினாள். ஆறுதலாய் அணைத்துக் கொண்டேன். ஓட்டி வந்தவன் எழவில்லை. ஆட்டோவை யாரோ கை காட்டி நிறுத்தினார்கள். டீ மாஸ்டர் அவனைத் தூக்கி ஆட்டோவில் போட்டோர். ஏறுங்க எல்லாரும் ஆஸ்பத்திரி போலாம் என்றார். அங்கையின் கால் முட்டியிலும் கையிலும் ரத்தம் வழிந்தது. என் கையைத் தூக்க முடியவில்லை. ஏறினோம். அருகாமையில் இருந்த பெரியாஸ்பத்திரியில் போய் விழுந்தோம். பசியிலும் திகைப்பிலும் நான் மூர்ச்சையானேன்.

 கண் விழித்தபோது அங்கை எனக்கு அருகாமையில் அமர்ந்திருந்தாள். அவள் பார்வை நிலைக்குத்தியிருந்தது. கையில் கட்டுப் போட்டு கழுத்தில் மாட்டி இருந்தார்கள். என் கையிலும் பலமான கட்டு அசைக்க முடியவில்லை. அங்கையைப் பார்த்து புன்னகைக்க முயன்றேன். அவள் பார்வை இன்னும் தீவிரமானது. கண்களில் இருந்து நீர் வழிந்தது.

 "எனக்கு ஒண்ணும் இல்ல அங்க"என்றேன் பலகீனமாக.

 அங்கை பற்களைக் கடித்தபடி சொன்னாள். "நீ என் புள்ளிமான கொன்னுட்டடா"

நான் அதிர்ந்தேன். "என்ன, என்ன சொல்ற?"

 அவள் குரல் உயர்ந்தது அந்த ஆஸ்பத்திரியே திரும்பிப் பார்க்கும்படி கத்தினாள். "நீ என் புள்ளிமானக் கொன்னுட்டடா கொலகாரப் பாவி"என்றபடியே என் மீது பாய்ந்தாள். என் கழுத்தை நெருக்கினாள். மூச்சுத் திணறியது. கையை அசைக்க முடியாததால் அவளை விலக்கவும் முடியவில்லை. தொண்டை நசிந்தது. உயிர் பிரியும் கணத்திற்கான முன் நொடியில் யாரோ அவளை என் மீதிருந்து இழுத்து கீழே போட்டனர். நெஞ்சே வெடித்துவிடும்படி இருமினேன். அங்கையின் ஆக்ரோஷமான அழுகை அந்த பெரியாஸ்பத்திரியின் சுவர்களில் மோதியது. நான் மீண்டும் நினைவை இழந்தேன்.

 - மேலும்  

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தொன்று

$
0
0

"பூ மொழம் எவ்ளோப்பா?"

அகத்திய மாமுனி நிமிர்ந்தார். பூக்கட்டிக் கொண்டிருந்த விரல்கள் நின்றன.

"ரெண்ரூவாம்மா"

"நாலு மொழம் கொடுப்பா"

 மாமுனி சுற்றி வைக்கப்பட்டிருந்த பூச்சரத்தை மெதுவாய் அளந்து நாலாவது முழ முடிவில் நூலை அறுத்து ஒரு வாழையிலையில் வைத்து நீட்டினார்.   பத்து ரூபாய் தாளிற்கு மீதிச் சில்லறையக் கொடுத்து விட்டு மீண்டும் பூத்தொடுக்க ஆரம்பித்தார். சாலையில் நடமாட்டம் கூடியது. அருகிலிருந்த கேசட் கடையில் இருந்து மாரியம்மன் பாடலொன்று சப்தமாய் உயிர் கொண்டது. வெயில் ஏற ஏற பேருந்துகளின் இரைச்சல் அதிகமானது. ஒரு சிறுமி சாமிக்கு பூ கொடுங்க எனக் கை நீட்டினாள். குவித்து வைத்திருந்த சாமந்திப் பூவை அப்படியே அள்ளி சாமி அவளின் சிறு கையில் போட்டார். சிறுமி போனதும் துர்க்கா கையில் எவர் சில்வர் தூக்குப் போசியோடு கடைக்குள் நுழைந்தாள்.

சாப்ட்ரு என்றாள்.  மாமுனி எழுந்து கொண்டார். பின் புறமாய் போய் கைகழுவி வந்தார். கிண்ணத்தில் நான்கைந்து இட்லிகள் சாம்பாரில் ஊறி இருந்தன. மெதுவாய் பிட்டு வாயில் போட்டுக் கொண்டார். இட்லி கரைந்தது. வேக வேகமாய் உண்டார். பின் தூக்குப் போசியோடு பின்புறம் போய் கையையும் பாத்திரத்தையும் கழுவி மீண்டும் வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டார். விரல்கள் தாமாகவே பூத் தொடுக்க ஆரம்பித்தன. துர்க்கா கல்லாவைத் திறந்து நான்கைந்து பத்து ரூபாய் தாள்களை எடுத்துக் கொண்டாள்.

"மத்யானத்துக்கு என்னா வோணும்?"என்றாள். மாமுனி நிமிர்ந்து அவளையே பார்த்தார். அவளாகவே
"வர்ர வழில விரால் மீனு வித்துகினு போனான். வாங்கிரவா?"என்றாள் 

சரி என தலையசைத்தார். துர்க்கா கடையை விட்டு வெளியேறினாள். சாமி மீண்டும் பூத் தொடுக்க ஆரம்பித்தார்.

ஒரு நண்பகலில் துர்க்காவின் வீட்டிலிருந்து இறங்கிய மாமுனி நேராய் மலையை நோக்கி நடந்தார். ரமணரிடம் போய் விடைபெற்றுக் கொண்டு அவர் உதவியோடு கமண்டலத்தை மீண்டும் கண்டறிந்து, தன் சக்திகளைத் திரட்டிக் கொண்டு பொதிகை மலைக்குச் சென்றுவிடும் திட்டத்தோடுதான் நடந்தார். நடக்க நடக்க அவர் உள்ளம் துர்க்காவிடமே திரும்ப வந்தது. முந்தின நாள் இரவின் மகாக் கலவி அவர் உடலின் ஒவ்வொரு செல்லிலும் நினைவுகளாய் தேங்கி விட்டிருந்தது. இன்று காலையில் அவர் அரைக் கண்ணில் கண்ட துர்க்காவின் குளித்த முடித்த உடல். குளிக்கும் ஓசை, அந்த ஸ்ஸ் சப்தம் அவரை மேலும் நடக்க விடவில்லை. ரமணாசிரமம் வரைப் போய் நின்றுவிட்டார். மலையின் மீது கால் வைக்க அவர் பாதம் அனுமதிக்கவில்லை. திரும்பி நடந்தார். ஆசிரமத்தை ஒட்டி இருந்த பூக்கடையில் அந்தச் சிறுமி இருந்தாள். அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.

"எங்க போற சாமி?"என்றாள்.

அப்படியே நின்றார்.

"ஏன் நிக்குற  உள்ள வா "என்றாள்.

மாமுனி கடைக்குள் போய் அமர்ந்து கொண்டார். அவள் தன் சின்னஞ்சிறு விரல்களால் முல்லைப் பூவை நேர்த்தியாய் நூலில் கட்டிக் கொண்டிருந்தாள். அதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர். எங்கிட்ட கொடு என அச்சரத்தை வாங்கி கட்ட ஆரம்பித்தார். பத்து நிமிடத்தில் பூ கட்டும் லாவகம் அவருக்குப் பிடிபட்டது. வாழ்வின் ஒட்டு மொத்த நோக்கமே பூத்தொடுப்பதுதான் என்பது போல அதில் ஆழ்ந்து போனார்.

"த இங்கியா இருக்க, குள்ச்சிட்டு வர்ரதுக்குள்ள ஆள  காணமேண்ணு நினைச்சேன்"

என்றபடியே துர்க்கா உள்ளே வந்தாள். சிவப்பு நிற ஜாக்கெட்டும் மஞ்சள் நிறப் புடவையையும் அணிந்திருந்தாள். நிலவைப் போல நெற்றியில் அத்தனை பெரிய குங்கமப் பொட்டு. சாமி அநிச்சையாய் காளி என முணுமுணுத்தார். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார். மலையின் மீது தன் பாதம் படாததற்கான காரணம் அவருக்குப் புரிந்தது.

"ந்தா சாப்ட்ரு"என்றபடியே அவள் கொண்டுவந்திருந்த சாதத்தை போசியிலிருந்து தட்டில் போட்டு நீட்டினாள். மாமுனி சாதுவாய் அதை வாங்கி மெதுவாய் சாப்பிட ஆரம்பித்தார். அவ்வளவுதான். அவரின் சகலமும் சாஸ்வதம் அடைந்தது. பகல் முழுக்கப் பூத் தொடுப்பார். உணவு வேளாவேளைக்கு வந்துவிடும். பூக்கள் தீர்ந்ததும் சாலையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவார். வித விதமான மனிதர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார். வாகனங்களின் விரைவு ஆரம்பத்தில் மிரட்சி ஏற்படுத்தினாலும் போகப் போகப் பழகியது. பணம் குறித்து அறிந்து கொண்டார். கணக்கை சிறுமி சொல்லித் தந்தாள். எழுத்துக்களையும் அவளே அறிமுகப்படுத்தினாள். இரவு ஏழு மணி வரை கடையில் இருப்பார். கடைசி வாடிக்கையாளரான பேங்க் அலுவலர் பூ வாங்கிக் கொண்டு போனதும் டாப்பை இழுத்து மூடி பூட்டு போட்டுவிட்டு தேனிமலைக்காய் நடக்க ஆரம்பிப்பார். அவர் போகும் நேரத்திற்கு துர்க்கா சமையலை முடித்திருப்பாள். இவர் பின்புறமாய் போய் கொல்லையில் தயாராய் இருக்கும் நீரில் குளித்து விட்டு கம்பியிலேயே காய்ந்து கொண்டிருக்கும் இன்னொரு வேட்டியை சுற்றிக் கொண்டு உள்ளே வருவார். துர்க்கா தட்டு நிறைய சோறு போட்டு சுடச் சுடக் குழம்பு ஊற்றிக் கொடுப்பாள். நிதானமாய் சாப்பிட்டு முடிப்பார். சாப்பிட்டதும் பாயை உதறிப் போட்டு படுத்துவிடுவார்.

துர்க்கா மெதுவாக சாப்பிட்டு விட்டு அடுக்களையை ஏற கட்டிவிட்டு புடவையை அவிழ்ந்து கொடியில் போட்டுவிட்டு அவர் அருகில் வந்து படுப்பாள். மாமுனி அதற்காகக் காத்துக் கொண்டிருப்பார். சாமிநாதன் பெரும்பாலும் இரவு வருவதில்லை. எங்கேயாவது குடித்துவிட்டு விழுந்து கிடப்பான். அல்லது மலை சுற்றும் பாதையில் படுத்து தூங்கிவிட்டு காலை நேராய் கடைக்கு வந்து துர்க்காவிடம் காசு வாங்கிப் போவான். ஒரு நாள் இரவு போதையேறாமல் வீட்டிற்கு வந்தவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாமுனியைப் பார்த்து நெற்றியைச் சுருக்கினான்.

"நீ அந்த மெண்டல் கேஸ் இல்ல, ங்கோத்தா எங்கூட்ல என்னடா பன்ற?"என மாமுனி மீது பாய்ந்தான். துர்க்கா அவனைப் பிடித்து வெளியே தள்ளினாள்.

"இனிமே வூட்டுப் பக்கம் வராத. இது இங்கதான் இருக்கும்"என அழுத்தந்திருத்தமாக சொல்லிவிட்டாள். சாமிநாதன் தெருவில் நின்று வண்ட வண்டையாய் அவளையும் மாமுனியையும் திட்டித் தீர்த்தான். அக்கம் பக்க வீடுகளிலிருந்து ஆண்கள் வந்து அவனைச்
 சமாதானப்படுத்தினர். இருட்டிலிருந்து ஒரு குடிகாரன் குழறலாய் கத்தினான்

"அந்த சாமியாரு ஒரு மாசமா ஒம்பொண்டாட்டிய ஓக்குறான் ங்கோத்தா உனக்கு இப்பதான் தெரிஞ்சதா"எனக் காறித் துப்பினான்.

சாமிநாதன் ஆத்திரத்தை அடக்க முடியாமல்  "அடங்கோத்தா தெவ்டியாப் பையா, ஒம் பொண்டாட்டிய ஊரே ஓக்குது நீலாம் பேச வந்துட்டியாடா"என கையில் கிடைத்த கல்லை அவன் மீது எறிந்தான். இருளில் அது எங்கேயோ போய் விழுந்தது. குடிகாரன்  மனைவி  அவனைத் துடைப்பத்தால் அடித்து நொறுக்கி வீட்டிற்குள் இழுத்துப் போனாள். அந்த ரகளைக்குப் பிறகு சாமிநாதன் வீட்டுப் பக்கம் வருவதில்லை. ஆனால் தவறாமல் காலையில் வந்து துர்க்காவிடம் காசு வாங்கிப் போவான். என்றாவது நிதானமான போதை மாலை வேளைகளில் வந்து அவளிடம் ஆசையாகப் பேசுவான். மீன் கொழம்பு வச்சி கொடம் பொண்ணே எனக் கெஞ்சுவான். ஞாயித்துக் கெழம வூட்டாண்ட வா என்பாள். சில நாட்களில் மாமுனியிடம் வந்தும் பணம் வாங்கிக் கொண்டு போவான்.

அன்று மதிய வாக்கில் கடைக்கு வந்தான். காலையிலிருந்து சுற்றிச் சுற்றி வந்தவனுக்கு யாரும் சரியாய் மாட்டவில்லை. வாத்தி எங்காவது தென்படுவானா எனப் பார்த்துக் கொண்டே கடைக்குள் அமர்ந்து கொண்டிருந்தான். எங்கிருந்தோ வந்த மழை திடீரென அடித்துப் பெய்தது. சாமிநாதன் திகைத்தான். இன்னாபா இது அதிசியம் என்றபடியே ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு கடையில் உட்கார்ந்து விட்டான். பூக் கட்ட பூவும் இல்லை. உதிரிப் பூ வாங்க ஜோதி மார்க்கெட்டிற்குப் போன துர்க்கா மழையில் மாட்டிக் கொண்டாளோ எனக் கவலையாய் மாமுனி சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போதுதான் அந்த பைக் கின் ப்ரேக் சப்தம் கேட்டது. சாமி அவசரமாய் எழுந்து சாலைக்கு வந்தார். ஏ ஏ எனக் குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேட்டன. பைக்கால் தூக்கி எறியப்படது ரவி என்பதை சாமி கண்டுகொண்டான். அட நம்ம வாத்திய அடிச்சிட்டானுங்களே எனக் கத்தியபடியே ஓடினான். மாமுனி மொத்த சம்பவத்தையும் பார்த்துக் கொண்டு எந்த அலட்டலும் இல்லாமல் அமர்ந்து கொண்டிருந்தார்.

- மேலும்

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தி இரண்டு

$
0
0

மழை விட்டிருந்தது. அங்கையும் சங்கமேஸ்வரனும் சுய நினைவிற்கு திரும்பி இருந்தனர். விழுந்து புரண்டதில் உடல் முழுக்க சேறு அப்பியிருந்தது. உடைகள் முழுக்க சக்தியாகியிருந்தன. அங்கையற்கன்னி எழுந்து கொண்டாள். மரத்தடியில் கிடந்த புடவையை எடுத்து அணிந்து கொண்டாள். சற்றுத் தொலைவில் நீர் தேக்கத் தொட்டி ஒன்றிருந்தது. சங்கமேஸ்வரன் அவளை அங்கு கூட்டிக் கொண்டு போனான். தொட்டியில் நீர் நிறைதிருந்தது. அங்கையும் அவனும் உடைகளோடு நீர் தொட்டியில் இறங்கினர். கழுத்து வரை நீரில் மூழ்கி எழுந்தார்கள். சகதியும் சேறுமாய் இருந்த அவர்கள் சுத்தமானார்கள். அங்கைக்கு இதெல்லாமே கனவு என மனம் சொல்லிக் கொண்டிருந்தது. உடல் முழுக்க வலி தெறித்தது. நீர் பட்ட உடன் உடலின் பல இடங்கள் எரிந்தன. முற்கள் உடலைக் கிழித்திருக்கலாம்.

வானம் தெளிவடைந்திருந்தது. ரவி வீடு திரும்பியிருப்பானோ என்கிற எண்ணம் தோன்றி மறைந்தது. வாய்ப்பில்லை. இரவு அடங்கியதும் ஒரு திருடனைப்போலத்தான் அவன் வருவான். ரவியை அங்கை மன்னித்திருந்தாள். சங்கமேஸ்வரன் களைத்திருந்தான். அவன் கண்களில் சாந்தம் குடியேறியிருந்தது. இருவரும் பைக் நிறுத்தப்பட்டிருந்த அரச மரத்தடியை நோக்கி நடந்தார்கள். அவர்கள் விழுந்து புரண்ட இடத்தில் அங்கை சிறிது நேரம் நின்றாள். முன்னால் சென்றவனை அழைத்தாள். வந்தவனை இறுக அணைத்துக் கொண்டாள். அவளுடல் ஒரு கோழிக் குஞ்சைப் போல நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் அவள் முதுகை ஆதூரமாய் தேய்த்து இன்னும் இறுக அணைத்தான். பைக்கில் கொஞ்ச தூரம் போனால் காற்றில் ஈரம் காய்ந்து விடும் என சொன்னான். காயலனாலும் பரவால்ல என முறுவலித்தாள். அவன் பைக்கை உதைத்தான். மழையில் நனைந்திருந்ததால் இரண்டு மூன்று முறை உதைக்க வேண்டி இருந்தது. அங்கை ஏறி அமர்ந்தாள். காற்றை கிழித்துக் கொண்டு பைக் விரைந்தது. உடலும் துணிகளும் படபடத்தன.

அவள் தன்னை உணர்ந்திருந்தாள். தன் உடலை அறிந்திருந்தாள். ஓர் அநாசய தைரியம் அவள் நெஞ்சில் குடியேறியிருந்தது. இனி என்ன ஆனாலும் இவன் தான் என்கிற உறுதி படர்ந்தது. முடிந்தால் இன்று இரவே ரவியிடம் பேசி விட வேண்டும். பைக் பிரதான சாலையைத் தொட்டதும் அவன் காதருகில் சொன்னாள். எனக்கு இப்ப வீட்டுக்கு போக வேணாம். சங்கமேஸ்வரன் பைக்கை மலை சுற்றும் பாதைக்காய் திருப்பினான். பிரதான சாலையிலிருந்து மலை சுற்றும் பாதைக்குள் நுழைந்தது. முதலில் வந்த கல் மண்டபத்திற்காய் வண்டியை நிறுத்தச் சொன்னாள். ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது. மழையின் காரணமாய் அங்கு அமர்ந்திருக்கும் சாமியார்களையும் பார்க்க முடியவில்லை. லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த அந்தப் பழையக் கல் மண்டபத்திற்குள் நுழைந்தாள். லிங்கத்தின் அருகில் அகல் விளக்கொன்று சுடர் விட்டுக் கொண்டிருந்தது. கைகூப்பி வணங்கினாள். சங்கமேஸ்வரன் அருகில் எதுவும் பேசாமல் நின்றிருந்தான். மண்டபத்தை விட்டு வெளியே வந்தார்கள். ஒரு கல் தூணில் அமர்ந்தார்கள்.

 ஏதாச்சும் பேசு என்றாள். அவன் ஏதோ ஒரு உலகத்தில் தொலைந்திருந்தான். அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். முகத்தில் வந்து விழுந்த முடிக் கற்றைகளை மெதுவாய் ஒதுக்கினான். அவள் உதடுகளில் அசாதாரணச் சிவப்புக் குடியேறியிருந்தது. முத்தமிடும் எண்ணத்தை மறக்கப் பார்வையைத் திருப்பிக் கொண்டான். அவள் அவன் முகவாயைத் தனக்காகத் திருப்பி உதடுகளில் முத்தினாள். அவன் அங்கை என முனகினான்.

"என்ன நடக்குதுன்னே புரியல இல்ல"எனச் சொல்லிப் புன்னகைத்தாள்.

"ஆமா அங்கை. மலர்செல்வி போனதில இருந்து அவ்வளவுதான் என் வாழ்க்கைன்னு தோணுச்சி. தற்கொல பண்ணிக்க தைரியமில்ல. ஒரு பொணம் மாதிரிதான் வாழ்ந்துட்டு இருந்தேன். நீ எங்கிருந்த? எப்படி நான் உன் மனசுக்குள்ள இத்தன வருஷம் இருந்தேன். இதெல்லாம் ஒண்ணுமே புரியலை"

"இல்ல மானு இதெல்லாம் இப்படி நடக்கணுங்கிறது ஏற்கனவே எழுதப்பட்டிருக்கு"

"என்ன சொன்ன மானா?"

"ஆமா நீ எனக்கு மான் தான். உன்ன மானுன்னுதான் கூப்டப் போறேன்."

"கூப்டு நல்லாருக்கு கேக்க. உன்னை நான் தேனுன்னு கூப்டவா?"

"ஓ, ஆனா கூப்டறோத நிறுத்திக்க. நக்கிப் பாக்காத சரியா?"

"இல்ல நக்குவேன்"

ஏய் ஏய் என அவள் திமிற சங்கமேஸ்வரன் அவள் கழுத்தை நாவினால் துழாவினான். இருவருமே சாலையில் இருபுறங்களையும் பார்த்தார்கள்.

"சாமி இருக்க இடம் கிளம்பலாம்"என்றாள்.

"இனிமே எப்படி"என்றான்.

"நான் இன்னிக்கு நைட்டே ரவிகிட்ட பேசிடுறேன். அவன் புரிஞ்சிப்பான். நீ காலைல வீட்டுக்கு வந்துடு இதே பைக்ல ஏறி உன் கூட வந்துடுறேன். மலர் செல்விய மட்டும்தான் டூர் கூட்டிப் போவியா என்ன கூட்டிப் போவ மாட்டியா?"

"ஏய் ச்சீ நீதான் இனி என் உலகம். நாம இதே பைக்ல நாளைக்கு காலைல பறந்துடலாம். நம்ம ரெண்டு பேரையும் யார்னே தெரியாத ஒரு மலை கிராமத்துக்குப் போய் புதுசா ஒரு வாழ்க்கைய ஆரம்பிக்கலாம்."

 அங்கைக்கு கண்கள் சொருகின.

"நெனைக்கவே நல்லாருக்கு மானு. ஏன் நான் வீட்டுக்கு போவனும். இப்பவே இப்படியே போய்டலாமே"

"இல்லமா எனக்குச் சின்ன சின்ன வேலைகள் இருக்கு எல்லாத்தையும் நைட்டே முடிச்சிட்டு காலைல ஏழு மணிக்கெல்லாம் உன் வீட்டுக்கு வந்திடுறேன்."

"ம்ம் சரி வா கிளம்பலாம்"

 மீண்டும் பைக்கை உதைத்து, வந்த சாலையிலேயே திரும்பினான்.

"ஏன் மானு மலைய சுத்திட்டு போலாமே?"

"இல்லடி தேனு இப்படியே போய்டலாம். உன்ன வீட்ல விட்டுட்டு கிளம்புறேன்"

"இல்ல நீ என்ன சேஷாத்ரி ஆசிரம வாசல்ல விட்டுடு நான் போய்க்குறேன்"

"ம் சரி"

 பைக் நிதானமாய் விரைந்து பிரதான சாலையைத் தொட்டது. அரசு கலைக் கல்லூரி தாண்டியதும் பைக்கின் வேகத்தைக் கூட்டினான்.

"ஏய் நிதானமா போ"என்றாள்

"உன் தலை இன்னும் காயல. வேகமா போன காத்துல காய்ஞ்சிடும்"என்றபடியே பைக்கைத் திருகினான். மழைச் சாலை வழுக்கியது.

இரமணாசிர காம்பவுண்டில் ஒரு மயில் தோகை விரித்தபடி நின்று கொண்டிருந்தது. பரவசமான அங்கை ஏய் ஏய் இங்க பாரு மயில் தோகை விரிச்சிருக்கு எனக் கத்தினாள்.

எங்க என திரும்பியவன் சடாரெனக் குறுக்கில் வந்தவனை கவனிக்கவில்லை. அங்கைதான் ரவியை அடையாளம் கண்டு அய்யோ ரவி எனக் கத்தினாள். வெகு சமீபத்தில் பார்த்து ப்ரேக்கை அழுத்த வண்டி அவனை மோதிவிட்டு வழுக்கியது. பதினைந்தடி தூரம் சறுக்கிக் கொண்டு போய் இஞ்சின் உறுமி நின்றது. சங்கமேஸ்வரன் தலை தார்ச்சாலையில் மோதியது. அங்கையின் மீது வண்டி விழுந்தது. ரவி தெறித்திருந்தான்.

- மேலும்

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தி மூன்று

$
0
0
யாகத்திற்குப் பிறகு மழை நின்றுவிட்டது. ஊரே சாமிநாதனை மெச்சியது. சர்வ சக்தியையும் அடக்கி ஆளும் ஆற்றல் அவனுக்கு உண்டு எனப் பேசிக் கொண்டனர். சாமி போதையில் மிதந்தான். வீட்டில் ஒரு முழுக் கிடாயை நேற்றிலிருந்து துர்க்கா வறுத்தும் அரைத்துமாய் வாசனையைப் படறவிட்டுக் கொண்டிருந்தாள். குடித்தே இராத தன் மாமனாருக்கு எவர்சில்வர் டம்பளரில் சரக்கை ஊற்றிக் கொடுத்தான். சமைத்துக் கொண்டிருந்த துர்க்காவைப் பிடித்து இழுத்து அவள் வாயிலும் சீமச்சரக்குடி குடிச்சிப் பாரு எனப் புகட்டினான். மடக் மடக் கென முழுங்கியவள் அந்த எரிச்சலுக்கும் போதைக்கும் தன்னை ஒப்புக் கொடுத்தாள். சாமியின் ஆட்டம் அரைப்புட்டியில் அடங்கியது. அவன் ஒரு மூலையிலும் அப்பன் ஒரு மூலையிலும் மடங்கினார்கள்.

சமைத்து முடித்திருந்த துர்க்கா மெல்ல எழுந்து போய் அந்த விஸ்கி பாட்டிலைத் திறந்து ஒரு டம்பளர் நிறைய ஊற்றிக் கொண்டாள். ஒரு வாய் குடித்துவிட்டு கறியை எடுத்துக் கடித்தாள். மிதமான போதையோடு முழு டம்ளரையும் குடித்தாள். சாமிக்கு வாயில் எச்சில் ஒழுகிக் கிடந்தது. ஏனோ அவனை மிகக் கேவலமாகப் பார்த்தாள். இந்த ஈனப்பயல் என்றாவது மாட்டுவான் என நினைத்தாள். டம்பளர் காலியானதும் அதைத் தூக்கி எறிந்துவிட்டு பாட்டிலை எடுத்துக் கொண்டு சமையல் அறைக்குப் போய் உட்கார்ந்து கொண்டாள். மழை விட்டிருந்த இரவு கூதலாய் இருந்தது. அந்தக் குளிருக்கு விஸ்கி மிகக் கதகதப்பாக இருந்தது. துர்க்கா ஏனோ அச்சமயத்தில் தன்னைப் பார்த்துக் கொள்ள விரும்பினாள். கையகலக் கண்ணாடி ஒன்று எரவாணத்தில் சொருகி வைத்திருந்தது நினைவிற்கு வந்தது. தேடி எடுத்தாள். குண்டு பல்பின் மஞ்சள் வெளிச்சத்தில் பாதி மட்டுமே தெரிந்த அவள் முகம் தகித்தது. கண்ணாடியால் அவள் முழுமுகத்தையும் பார்க்க முடியவில்லை. ஒரு ஆளுயரக் கண்ணாடிஇருந்தால் நன்றாக இருக்குமென நினைத்துக் கொண்டாள். தன் உருவம் முழுக்கத் தெரியும் கண்ணாடியை நாளையே வாங்க வேண்டுமெனவும் உறுதி பூண்டாள். சாமிநாதனிடம் பணம் விளையாடியது. பூஜை முடித்து விட்டு வந்தவன் மிக கவனமாய் வெள்ளைத் துணியில் சுற்றிய நூறு ரூபாய் தாள்களைச்  அடுக்குப் பானையில் வைத்துவிட்டுத்தான் பாட்டிலைத் திறந்தான். துர்க்கா அதைப் பார்க்காதது மாதிரி இருந்து கொண்டாள். இந்தக் கண்ணாடி வாங்கும் உந்துதல் எழுந்ததும் அவள் எழுந்து போய் பானைகளை இறக்கி அத் துணியைத் திறந்து ஒரு நூறு ரூபாய் தாளை மட்டும் எடுத்துக் கொண்டு மீண்டும் கவனமாய் மூடினாள். தலை கிறுகிறுத்து வந்தது. பணத்தை ஜாக்கெட்டில் சொருகிக் கொண்டு புடவையை அவிழ்ந்து மூலையில் எறிந்து விட்டு, பாயை உதறிப் போட்டுப் படுத்துக் கொண்டாள்.காலை எழுந்ததும் முதல் வேலையாய் சங்கராவரம் போய் கண்ணாடி வாங்க வேண்டும். இனி வயலுக்குப் போகக்கூடாது எனவும் தீர்மானித்தாள். இனி ஒழச்சு ஓடப்போவமாட்டண்டா தேவ்டியாப்பசங்களா என உரக்கக் கத்தினாள். வாய் உரக்ககெட்ட வார்த்தைகளை முணுமுணுத்தபடியே தூங்கிப் போனாள்.

 அடுத்த நாள் காலை சாமிநாதனுக்கு ஆச்சரியமாய் விடிந்தது. பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வீட்டின் முன் குழுமியிருந்தனர். மாமனார் காலையில் வழக்கம் போல் எழுந்து வயலுக்குப் போய் விட்டிருந்தார். தள்ளாட்டமாய் எழுந்தவன் சமயலறைக்குப் போனான். துர்க்கா அப்படி ஒரு தூக்கத்தில் இருந்தாள். சேலை காணாமல் போய் இருந்தது. உடல் கோணி தூங்கிக் கொண்டிருந்தவளை தட்டி எழுப்பினான். பின் வாசலுக்குப் போய் முகம் கழுவிக் கொண்டு திண்ணையில் வந்து அமர்ந்தான். ஏற்கனவே அவனைச் சாமி என்றழைக்க ஆரம்பித்திருந்தனர்.

 யார் மொதல்ல வந்தது? வந்து உட்கார்.

எனத் தோரணையாய் அமர்ந்தான். தலைவலி மண்டையைப் பிளந்தது. ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாமல்

ஒரு டீ போடு என உள்ளே கழுத்தைத் திருப்பிக் கத்தினான்.

என்னா பிரச்சின? என முன்னால் அமர்ந்தவரிடம் கேட்டான்.

அவர் மகள் திருமணம் தள்ளிப்போகிறது என்றார். ஜாதகத்தை கொடுக்கச் சொல்லி வாங்கிப் பார்த்தான். தயாராய் கிடந்த சிலேட்டில் சில கணக்குகளைப் போட்டுப் பார்த்தான். வாராவாரம் மாரியம்மன் கோவிலுக்குப் போய் புற்றுக்குப் பாலூற்றச் சொன்னான். ஒரு மண்டலத்தில் திருமணம் நடக்கும் என்றான். அவர் வணங்கி ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டுப் போனார். இப்படியாக சாமிநாதனின் பீஸ் ஐந்து ரூபாயானது. அவன் சொன்னது நடந்ததா என்பது அவனுக்கே தெரியாத அளவிற்கு ஆட்கள் அவனைச் சூழ ஆரம்பித்தனர். ட்ராக்டர் வாங்க, நாற்று நட,  பம்ப் செட் போட அவனிடம் யோசனை கேட்டார்கள். எந்த லாட்டரி சீட் வாங்க வேண்டும் எனக்கூட கேள்வி வந்தது அதையெல்லாம் ஒருவாறாக சமாளித்தான். மெல்ல அவன் புகழ் பக்கத்து ஊர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. மழ நிறுத்தின சாமி என அவனை அழைத்தார்கள். ஊரில் எல்லா பொது நிகழ்வுகளுக்கும் அவனே முன் நின்றான். அடுத்த ஆறு மாதம் உச்சத்தில் திளைத்தான். துர்க்கா வீட்டோடு நின்று கொண்டாள். வாரம் ஒரு முறை சாமி சங்கராவரம் போய் விஸ்கி பாட்டில்களைப் பிடித்து வந்தான். துர்க்காவும் அவனுமாய் குடித்து கொண்டாடினார்கள். இதையெல்லாம் பார்க்க சகிக்காத அவன் மாமனார் வயலிலேயே தங்கிக் கொண்டார்.

சாமிநாதன் தன்னை அம்மனின் கடாட்சம் பெற்றவனாய் காட்டிக் கொண்டான். ஒவ்வொரு வார்த்தைக்கும் முன்னால் அம்மனின் கடாட்சம் பெற்ற என்னால் என்பதைச் சேர்த்துக் கொண்டான். மாண்புமிகு என்பது போல அம்மனின் கடாட்சம் ஆகிவிட்டது. ஊரின் பெரிய தலைகட்டுகளுக்கு சாமிநாதன் தான் சகலமும் என்றானது. அவனைக் கேட்காமல் ஒருவரும் ஒரு வேலையையும் செய்வதில்லை. சாமிநாதனுக்கு அவன் மனைவியின் வீடு இப்போது எலிப்பொந்தாகத் தெரிந்தது. பெரியசாமி கவுண்டரின் வீட்டிற்குள் என்று நுழைந்து விட்டு வந்தானோ அன்றிலிருந்தே இந்த வீடு ஆசூசையாகப் போய்விட்டது. பெரியசாமி கவுண்டர் பயன்படுத்தாத ஓட்டு வீடு ஒன்று வெகுநாட்களாகப் பூட்டிக் கிடந்தது. சாமிக்கு அந்த வீட்டின் பூர்வீகம் ஒன்றும் தெரியவில்லை. அவரிடம் பூஜை ரூம் இல்லாத வீட்டில் வசிப்பதால் சக்தி தன் மீது கோபத்தில் இருக்கிறாள் சீக்கிரத்தில் வேறு வீட்டிற்குப் போய்விட வேண்டுமெனப் பணித்திருக்கிறாள். ஆகவே நீங்கள் பயன்படுத்தாத இந்த வீட்டைத் தாருங்கள் எனக் கேட்டிருந்தான். அது அவரின் மகளிற்காய் பார்த்துப் பார்த்து கட்டிய வீடு. அவள் படிக்கப் போன இடத்தில் இன்னொருவனைக் காதலித்து வீட்டில் சொன்னால் கொன்றுவிடுவார்கள் எனப் பயந்து எங்கேயோ ஓடிப்போனாள். மகளோடு அந்த வீட்டையும் பெரியசாமி தலைமுழுகினார். சாமிநாதன் கேட்டதும் முதலில் அசெளகரியமாய் உணர்ந்தவர் மீண்டும் அவன் அழுத்திக் கேட்கவும். போய் இருந்துக்கோங்க சாமி என்றுவிட்டார். அடுத்த நாளே சாமி தடபுடலாய் அந்த வீட்டிற்கு குடியேறினான்.

துர்க்காவிற்கு இதெல்லாம் ரொம்ப நாள் இல்லை என்கிற எண்ணம் மட்டும் வந்து வந்து விழுந்து கொண்டிருந்தது. ஆனாலும் மெளனமாய் அவன் இழுத்த இழுப்பிற்குப் போனாள். அந்த விஸ்தாரமான வீடு அவளுக்கு எந்த மகிழ்ச்சியையும் தரவில்லை. அடுத்த ஆறு மாதத்தில் சாமி சொன்னது எதுவும் நடக்கவில்லை என மக்கள் சலித்துக் கொண்டனர். பெரிய வீடுகளில் பூஜை,  புனஸ்காரம் என சாமிநாதனும் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் ஜோசியம் கேட்க வென காலையில் மக்கள் வருவது நின்று போயிற்று. சாமிக்கு மெல்ல பயம் ஆரம்பித்தது. மிகவும் பாடுபட்டுக் கிடைத்ததை விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். மூங்கில் துறைப் பட்டிலிருந்து கொண்டு வந்த பழம் பெட்டி நினைவிற்கு வந்தது. அதிக மிதப்பில் அந்தப் பெட்டியை துர்க்கா வீட்டிலேயே போட்டுவிட்டு வந்தாயிற்று. சாமி ஆட்கள் யாரும் வராத அன்றைய காலையில் எழுந்து பழைய வீட்டிற்குப் போனான். மூலையில் கிடந்த பெட்டியைத் திறந்து பார்த்தான். அபூர்வமான புத்தகங்கள், ஜாதகக் கட்டுக்கள் யாவும் செல்லரித்து, மண்பிடித்துப் போய் கிடந்தன. ஒரே ஒரு ஏட்டைக் கூட அவனால் எடுக்க முடியவில்லை. ஆத்திரத்தில் பெட்டியை உதைத்துவிட்டு வெளியே வந்தான். ஏதாவது செய்ய வேண்டும் என அவன் மூளை பரபரத்தது.

- மேலும்

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து நான்கு

$
0
0

நினைவு திரும்பியபோது காலம் இடம் யாவும் குழப்பமாக இருந்தன. மூத்திரமும் மருந்தும் டெட்டாலும் கலந்த சகிக்க முடியாத நெடிதான் நாசியை முதலில் அறைந்தது. எழுந்து ஓடிவிட வேண்டும் போலிருந்து. உடலை அசைக்க முடிந்தாலும் இடது கையை அசைக்க முடியாத அளவிற்குக் கட்டுப் போட்டிருந்தனர். குழந்தைகளின்  அழுகையும் இரைச்சலுமாய் அந்த சூழல் அத்தனைக் கொடூரமானதாக இருந்தது. எழுந்து உட்கார்ந்தேன். பக்கத்து பெட்டில் ஒரு முதியவரின் கால் மாட்டில் அமர்ந்திருந்த நடுத்தர வயதுப் பெண் என்னைப் பார்த்து பரபரப்படைந்தாள்.

”இவ்ளோ நேரம் இங்கதான் இருந்தாங்க. இரு கூட்டியாரேன்.”

எனச் சொல்லிக் கொண்டே வெளியே ஓடினாள்.  அந்தப் பெண்ணை எங்கேயோ பார்த்தார் போலிருந்தது.  எங்கே மறுபடியும் அங்கையைக் கூட்டி வந்து விடுவாளோ, அவள் வந்து கழுத்தை நெறிப்பாளோ எனப் பயமாக இருந்தது. நல்ல வேளையாக உள்ளே ஓட்டமும் நடையுமாக வந்தது அம்மாதான். படபடப்பாய் வந்து தலையைத் தடவினாள்.

“ஒண்ணுமில்லடா மூட்டுதான் நழுவியிருக்காம். எலும்புலாம் எதுவும் உடையல. சீக்கிரம் சரியாகிடும்”

எனக்கு உடனே அங்கிருந்து ஓடிப்போக வேண்டும் போலிருந்தது.

“அப்புறம் என்னம்மா வா வீட்டுக்குப் போகலாம்” என எழுந்தேன்.

”இருடா டாக்டர் வந்ததும் அவர் கிட்ட கேட்டுட்டு போய்டலாம்.”

அதுவரைக்குலாம் இங்க இருக்க முடியாது என எழுந்தவனை டேய் டேய் என்றபடியே என்னைப் பிடித்து இழுத்து படுக்கையில் அமர வைத்தவள். இது யார்னு தெரியுதா பார்டா என சின்னச் சிரிப்போடு கேட்டாள். நான் அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்த்தேன். அமுதா அக்கா. தூக்கிவாரிப் போட்டது. அமுதா அக்காவா இவள். ஒடுங்கிப் போயிருந்தாள். அந்தச் செழுமையும் மினுமினுப்புமான முகம் இப்படியா வற்றிப் போகும். என்னால் ஆற்றாமையை மறைத்துக் கொள்ள முடியவில்லை. அமுதாக்கா என சத்தமாகவே கத்திவிட்டேன். ஓடிவந்து என்னை அணைத்துக் கொண்டாள். அவள் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. நானும் உடைந்தேன். அம்மாதான் எங்கள் இருவரையுமே தேற்றினாள். பக்கத்து பெட்டிலிருந்த முதியவரின் உடல் ஒரு முறை சப்தமாய் இருமி அடங்கியது. அமுதா ஒரு நொடி வெறுப்பாய் அவரை நோக்கி விட்டு மீண்டும் அவ்வளவு கருணையோடு என்னைப் பார்த்தாள். புரிந்து கொண்டேன்.

அழுகையைத் துடைத்துக் கொண்டு அமுதா கேட்டாள்.

”இத்தன வருசமா இருக்கனா செத்துட்டனான்னு கூட யாரும் நினைச்சுப் பாக்கல இல்ல?”

அம்மா ஏதோ சொல்ல முயன்றாள். நான் அப்படியே அமர்ந்திருந்தேன்.

”நானும் மறுபடியும் அந்தப் பக்கம் வரமுடியாமப் போய்டுச்சி யார் சாவுக்கும் சொல்ல முடியல”

அம்மா அடடா என உச்சுக் கொட்டினாள். நீ கூட ரொம்ப வத்திட்டியேம்மா என்றாள் வாஞ்சையுடன்.

"ம்ம் என் காலம் போச்சு. ஆனா வாழ வேண்டிய பையன். உனுக்கு என்னடா ஆச்சு. உன் கழுத்த நெறிச்சி கொல்லப் பாத்தாளே அவ யாரு உம் பொண்டாட்டியா?"

எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தேன்.

அம்மா அழ ஆரம்பித்து விட்டாள்.

"ஐயோ எம்புள்ள வாழ்க்கைய நானே நாசமாக்கிட்டனே"

 என வயிற்றில் அறைந்து கொண்டாள். அதுவரைக்குமில்லாத கோபம் அடிவயிற்றிலிருந்து மேலெழுந்தது.

"இப்ப வாய மூடப் போறியா இல்லையா?"எனக் கத்தினேன்.

என்ன ஏதுன்னு எனக்கும் தெர்லக்கா இனிமேதான் விசாரிக்கனும் என அமுதாவிடம் சொன்னேன். அதற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை. நான் வீட்டுக்குப் போறேன் என எழுந்து கொண்டேன். அதுவரை உடலில் சட்டை இல்லை என்பதே பிரக்ஞையில் இல்லை. அதானால் என்ன. நடக்க ஆரம்பித்தேன். பின்னாலேயே அமுதாக்காவும் அம்மாவும் ஓடி வந்தனர். நான் நிதானமாய் திரும்பி வீட்டு சாவி கொடு என்றேன்.

டாக்டர பாத்துட்டு போய்டலாம்டா என அம்மா கெஞ்சினாள். நீ பாத்துட்டு மருந்து மாத்திர வாங்கிட்டு வா. நான் முன்னால போறேன். சாவி எங்க என்றேன். அம்மா சற்றுச் சமாதானமாய்  பக்கத்து வீட்ல இருக்கு என்றாள். வெற்றுடம்போடு கட்டுப் போட்ட கையைக் கழுத்தில் மாட்டியபடி வெளியே வந்தேன்.

சாமி உள்ளே வந்து கொண்டிருந்தார்.

“அட வாத்தி நூறாசுய்யா உனக்கு” என இளிப்பாய் நெருங்கி வந்து அணைத்தார். ஏனோ அந்த நேரத்தில் சாமியை அவ்வளவுப் பிடித்தது.

“இங்க இருக்க முடியல வீட்டுக்குப் போலாம்” என்றேன்.
“எலும்பு கிலும்பு ஒடஞ்சிருச்சா?
“இல்ல மூட்டுதான் நழுவி இருக்காம்”
“ஹா அப்ப ஒண்ணும் இல்ல வூட்டுக்கு போலாம். காசு வச்சிருக்கியா போய் வாங்கியாந்திர்ரேன்”
“வீட்ல இருக்கும் எடுத்துக்கலாம். இப்ப ஒரு ஆட்டோவ கூப்டு” என்றேன்

சாமி போய் ஆட்டோவைக் கூட்டி வந்தார். பதினோரு மணி வெயில் முற்றியிருந்தது. நேற்று  முழுக்க ஆஸ்பத்திரியில் கிடந்திருக்கிறேன். அங்கையின் ஆத்திரம் மிகுந்த முகமும்  என்னை நெறித்த அக் கைகளின் வலிமையும் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து விழுந்தது. என்னால் சுத்தமாய் நம்ப முடியவில்லை. அதுவா அங்கை. அவ்வளவுச் சாதுவான முகத்திற்குப் பின்னால் இப்படியொரு உணர்வா புதைந்திருந்தது. ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. சாமிக்காய் திரும்பி இடுப்புல ஏதாவது வச்சிருக்க என்றேன். ஒரு வாய் இருக்கும். என்றபடியே வேட்டி இடுப்பு மறைவிலிருந்து ஒரு கோட்டர் பாட்டிலை எடுத்தார். பிடுங்கி வாயில் சரித்துக் கொண்டேன்.  நெஞ்சு எரிந்து நரம்பை அமைதிப் படுத்த முயன்றது. போவட்டும் என வாய்விட்டு சொல்லிக் கொண்டேன்.

”உன்ன இடிச்சவன் செத்துட்டானாமே?” என்றார் சாமி

 ”நான் செத்திருக்கலாம் சாமி”  குழப்பமாய் பார்த்தார்.

என்னா வாத்தி? என்றார்.

“நான் ஏன் சாவலன்னு நேத்து எம் பொண்டாட்டி வந்து என் கழுத்த நெறிச்சி சாவடிக்க பாத்தா சாமி.”

”அப்ப வண்டி ஓட்டியாந்தவன்?

”எம் பொண்டாட்டி லவ்வராம்” என் கண்ணில் இருந்து தாரை தாரையாய் நீர் வழிந்தது

சாமி ஆழமாய் மூச்சை இழுத்து விட்டார். என் தோளின் மேல் கை போட்டு அணைப்பாய் உலுக்கியபடியே சொன்னார்.

”எம் பொண்டாட்டியும்தான் என்ன சாகடிக்கப் பாத்தா. உனுக்குப் பரவால்ல அவளுக்கு எத்தினி லவ்வர்னே எனக்கு தெரியாது. அவளோட இப்பத்தி லவ்வர் கிட்ட அம்பது ரூபா வாங்கிதான் இந்த கோட்டரையே வாங்கினேன். இதுல போய் என்னபா” என்றார்.

நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன். அவர் ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு வெளியே வெயிலில் நகரும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆட்டோ விரைந்து கொண்டிருந்தது. நேற்று பெய்த மழையின் கடைசிச் சுவட்டையும் இந்தச் சூரியன் இன்று அதிகாலையிலேயே தின்றுத்  தீர்த்துவிட்டிருக்கிறது. திருவண்ணாமலை ஒரு வெயில் நகரம்தான்.

- மேலும்

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தைந்து

$
0
0

”த வந்திரு த, என்ன வுட்டன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வா த”

மாமுனியின் கால்களில் விழுந்து ஒரு பெண் மன்றாடிக் கொண்டிருந்தாள். அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

’யார் மா நீ?  ஏன் என் கால்ல வந்து விழுற? எழுந்திரு எழுந்திரு’

மாமுனி எவ்வளவு விலக்கியும் அந்தப் பெண் அவரின் கால்களை விடாமல் கெட்டியாகப் பிடித்தபடி தரையில் புரண்டு கொண்டிருந்தாள்.

ஐயோ என்னயே யார்னு கேட்டிட்டியே என்றபடி இன்னும் குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாளே தவிர அவரின் கால்களை விட்டபாடில்லை. ஒன்றுக்கு இரண்டு முறை அவளின் முகத்தை உற்றுப் பார்த்தவருக்கு அடையாளமும் பிடிபடவில்லை. திகைத்து நின்றிருந்தார்.

கட்டுவதற்கு உதிரிப் பூ அம்பாரமாய் குவிந்திருந்தது. இன்று கொஞ்சம் பிந்தி விட்டது. தாமதமாய்த்தான் வந்து கடையைத் திறந்தார்.  வழக்கம்போல் உட்கார்ந்து கொண்டு வேலைகளை ஆரம்பித்தார். இன்று பவுர்ணமி நாள் வேறு. காலையிலேயே மக்கள் மலை சுற்ற ஆரம்பித்திருந்தார்கள்.  காலை பத்து மணிக்கே பவுர்ணமி நேரம் துவங்கிவிடுவதால் மக்கள் நடமாட்டம் அதிகமாகியிருந்தது. இந்தப் பெண் கடைக்கு முன்னால் வந்து நின்று கொண்டு, குனிந்து பூக்கட்டிக் கொண்டிருந்த மாமுனியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  மாமுனி அவளைப் பார்த்திருக்கவில்லை. அவசர அவசரமாக பூத் தொடுத்துக் கொண்டிருந்தார். ஏதோ ஒன்று உறுத்த நிமிர்ந்து பார்த்ததுதான், எதிரில் நின்று கொண்டிருந்தவள்,  ஐயோ மாமா எனக் கதற ஆரம்பித்தாள்.

“உங்களத் தேடாத ஊரில்ல, போகாத தெசையில்ல, கடேசில பக்கத்துலயே இருந்திருக்கீங்களே” என்றபடியே உள்ளே ஓடிவந்து மாமுனியைக் கட்டிக் கொண்டாள்.

அவளது பிடியிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள மாமுனி பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. அவளை உதறித் தள்ளி தூரத்தில் போய் நின்று கொண்டாலும் அவள் மீதிருந்த வாசனையை அவர் ஏற்கனவே அறிந்திருப்பதாகத் தோன்றியது. குழப்பமாய் நின்றுகொண்டிருந்தவரின் பாதங்களில் விழுந்தவள் அவற்றை விடாது கெட்டியாகப் பிடித்துக் கொண்டுக் கதற ஆரம்பித்தாள்.

மாமுனி என்ன செய்வதென்றுத் தெரியாமல் நின்று கொண்டிருந்தார். நல்ல வேளையாய் துர்க்கா காலைச் சாப்பாட்டோடு கடைக்குள் நுழைந்தாள். கீழே விழுந்து கிடந்தவளை முதலில் அவள் கவனிக்கவில்லை. உள்ளே நுழைகையில் உணர்ந்து தடுமாறி நின்றாள்.

”யார் மா நீ ஏந்திரி ஏந்திரி இன்னா இங்க வந்து கெடக்குற?”

என்ற துர்க்காவின் கண்டிப்பான குரல் கேட்டவள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து நின்றாள். தலைகுனிந்தபடியே,

“நான் இவரோட சம்சாரங்க” என்றாள்.

துர்க்கா மாமுனியை கண்களால் விசாரித்தாள். மாமுனி அவசர அவசரமாக மறுத்து தலையாட்டினார்.

துர்க்கா அந்தப் பெண்ணை அங்கிருந்த ஸ்டூலில் உட்கார வைத்தாள். மாமுனியிடம் எதிரில் இருக்கும் கடைக்குப் போய் டீ வாங்கி வரச் சொன்னாள். அவர் அகன்றதும் கேட்டாள்.

”எந்த ஊர்மா நீ? பேரு என்ன?”

”எம் பேரு பூங்காவனங்க. சொந்த ஊர் துரிஞ்சாவரம். இவரு எம் புருசங்க. ஆறு மாசத்துக்கு முன்னால வீட்ட விட்டு ஓடியாந்துட்டாருங்க.”

”அப்படியா? ஆறு மாசமாவா காணம். ஏன் ஓடியாந்தார்?”

”ஆமாங்க இன்னியோட ஆறாவது பவுர்ணமிங்க. ஒவ்வொரு பவுர்ணமிக்கும் அவரு கெடச்சிரனும்னு வேண்டிகிட்டுதாங்க மலை சுத்துவன். இன்னிக்குதாங்க அந்த அண்ணாமலையான் கண்ணத் தொறந்திருக்கான்.  இவருக்கு லேசா கிறுக்குங்க. படிச்ச கிறுக்கு. ஏதேதோ புக்குலாம் படிச்சி இப்படி ஆயிருச்சிங்க. நான் தான் அகத்தியரு, மகாமுனி அப்படி இப்படின்னு ஏதேதோ சொல்லிட்டே இருப்பாருங்க. சமயத்துல சொந்த நெனவே இருக்காது”

துர்க்கா அகத்தியர் என்ற சொல்லைக் கேட்டதுமே இவள் சரியானவள்தான் என்பதை உணர்ந்து கொண்டாள்.

”அவருக்குதான் உன் நெனவே இல்லையே ஊருக்கு கூட்டிப் போய் மட்டும் என்ன செய்வ?”

”ஐயோ அப்படியே வுட்டுப் போய்ட சொல்றீங்களா? புள்ள குட்டிலாம் இருக்குதுங்க. வூடு வாசல் நெல புலம் எல்லாம் இருக்குதுங்க.  ஒரு வருசத்துக்கு மிந்தி நல்லாத்தாம் இருந்தார். ஊர்லயே கடுமையான ஒழைப்பாளி. கூடாத ஆளுங்களோட கூடி இப்படி ஆய்டுச்சு. ஆரம்பத்துலயே பாகாயத்துக்கு ரெண்டு மூணு முற கூட்டிப் போய் வந்தம். மாத்திர சாப்டா சரியா இருப்பாருங்க. கொஞ்ச நாள்ள எல்லாம் சரியாவும் ஆய்டுச்சி. ஆனா போவ போவ மாத்திர சாப்டா தூங்கிட்டே இருக்கம். மண்ட வலி அதிகமா இருக்குன்னு சாப்பிடுறத நிறுத்திட்டாருங்க”

துர்க்காவிற்கு துலக்கமாய் புரிந்தது. இவரை எப்படி இவளோடு அனுப்பி வைப்பது என யோசிக்க ஆரம்பித்தாள்.

” நீ வேற ஒத்த பொம்புளயா இருக்க,  வரமாட்டேன்னு அடம் புடிச்சா எப்படி கூட்டி போவ?”

”ஏதாச்சிம் சொல்லி கூட்டிட்டு போவனுங்க. புள்ளைங்க அப்பனப் பாக்காம ஏங்கிப் போய் கெடக்குதுங்க. அவங்களப் பாத்தா இவருக்கு எல்லா ஞாபகமும் வந்துரும்.  நீங்க கொஞ்சம் தொணைக்கு வர முடியுமா?”

துர்க்கா யோசித்தாள். அவளைப் பார்க்க பாவமாகவும் இருந்தது. இந்த சாமிநாதனையும் காணவில்லை. கடையைப் பூட்டி விட்டு போகவும் முடியாது. யோசித்துக் கொண்டிருக்கும்போதே மாமுனி டீ க்ளாசுடன் வந்தார். இருவருக்கும் கொடுத்தார்.

துர்க்கா அவரைப் பார்த்து கேட்டாள்.

“நல்லா பாரு இவங்கள தெரில உனக்கு?” என்றாள்.

மாமுனி இல்லையென தலையசைத்தார். அந்தப் பெண்ணுக்கு கண்களில் நீர் கோர்த்தது.

இரு வரேன் என்றபடி துர்க்கா கடையை விட்டு வெளியே வந்தாள். இரமணாசிரமம் ஆட்டோ ஸ்டேண்டை நோக்கி நடந்தாள். ஆட்டோவின் பின் சீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த முருகனைத் தட்டி எழுப்பினாள்.

அவன் கோபத்தை மறைத்துக் கொண்டே  இன்னா யக்கா என்றபடியே எழுந்தான்.

”முருகா ஒரு உதவி, என் கடையில இருக்கும்ல ஒரு சாமி ”

”ஆமா”

”அவர் பொண்டாட்டி அவர தேடி வந்திருக்கா. ஆனா அவருக்கு அவள அடையாளம் தெரில.”

”ஐயயே நெசமாவா?”

”ஆமா நல்லா விசாரிச்சுட்டேன். இவருக்குதான் எல்லாம் மறந்து போச்சு. நீ போய் கொஞ்சம் அவங்க ஊட்ல விட்டுடேன்”

”சரிக்கா. எங்க போவனும்?”

”துரிஞ்சாவரம்”

”மல்லவாடி - துரிஞ்சாவரமா?”

”ஆமா முருகா”

”அக்கா இன்னிக்கு பவுர்ணமி. சவாரி நெறய இருக்கும்.”

”அட ஒரு மணி நேரத்துல வந்திரலாம் போ. அந்தப் பொம்பள ரொம்ப அழுவுது”

 ”செரி போறேன். துட்டு”

”வா தரேன்”

என்றபடியே ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தாள்

வண்டியைக் கிளப்பியவன். துர்க்கா பூக் கடை முன்பு வண்டியை நிறுத்தினான்.

இறங்கியவள் பூங்காவனத்தை முதலில் ஏறச் சொன்னாள். அவரிடம் மன்றாடிக் கொண்டிருந்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டு வண்டியில் ஏறினாள்.

துர்க்கா மாமுனியை ஏறச் சொன்னாள்.

மாமுனி அவசர அவசரமாக தலையசைத்தார். நான் அகத்தீஸ்வரம்  போகனும்.  நாளைக்கு கிளம்பிருவேன். கமண்டலம் மேல ரமணர் கிட்ட இருக்கு. இன்னிக்கு ராத்திரி அத வாங்கிட்டு கிளம்பனும்.  என நிதானமாகச் சொன்னார்

துர்க்கா அவரை நிமிர்ந்து பார்த்தாள்.  நீ இப்ப இவங்களோட போ. நான் ரமணர் கிட்ட கமண்டலத்த வாங்கிகிட்டு நைட்டு அங்க வரேன் என்றாள்.

மாமுனி மிரட்சியாய் போய் ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டார்.

”முருகா வீட்ல பத்திரமா விட்டுடு ”

என்றபடியே ஜாக்கெட்டில் கைவிட்டு பர்ஸை எடுத்து நூறு ரூபாயை அவனிடம் நீட்டினாள்.

முருகன் வாங்கிக் கொண்டு வண்டியைக் கிளப்பினான்.

பூங்காவனம் துர்க்காவைக் கையெடுத்துக் கும்பிட்டாள். மாமுனி உள்ளே போய் உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டார்.

இவளுக்கு ஏனோ உள்ளுக்குள் உடைந்தது. சிரமப் பட்டு அடக்கிக் கொண்டாள். குரலைக் கனைத்துக் கொண்டு பூங்காவனத்திடம் கேட்டாள்.

”இவரு பேரு என்னமா?”

அவள் சொன்னாள்

”அய்யனாருங்க”.


- மேலும்

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தாறு

$
0
0
’எழுந்து வூட்டுக்கு போம்மா’

அசையாமல் அமர்ந்திருந்த அங்கையற்கன்னியை காவலுக்கு இருக்கும் முதியவர் வேண்டிக் கொண்டிருந்தார்.

மான் தன்னைச் சுற்றிக்கொண்டிருக்கும் கொசுக்களை காதால் விரட்டியபடி படுத்திருந்தது. எங்கும் இருள். திக்பிரம்மைப் பிடித்தவளாய் மானிற்கு சமீபமாய் அங்கை மண்ணில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள்.

ஆசிரமத்தின் வாயிலைப் பூட்டியிருந்தார்கள். அங்கையை வெளியே அனுப்பிவிட்டால் காவலுக்கு இருப்பவரும் போய் படுத்துக் கொள்வார். அவளை அவருக்குப் பல வருடங்களாய் தெரியுமென்பதால் மிக சமாதானமாகவும் அன்பாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். அவள் அசையவில்லை. இருந்துவிட்டுப் போகட்டும் எனப் போய் படுத்துக் கொள்ளவும் முடியாது. அதிகாலையிலேயே தியான அறையைச் சுத்தம் செய்து பூஜை செய்ய ஆட்கள் வந்துவிடுவார்கள். இவளைப் பார்த்தால் தன்னுடைய வேலை போய்விடும். முதியவர் இதையெல்லாம் சொல்லி மன்றாடிப் பார்த்தார். ஆனால் அங்கை எங்கேயோ காணாமல் போயிருந்தாள். அவளுக்குத் தன்னைச் சுற்றி நிகழ்வதெதுவும் பிரக்ஞையில் இல்லை.

அங்கைக்கு கண்ணில் நீர் வழிந்தபடி இருந்தது. உடலும் மனமும் மொத்தமாய் வெதும்பிப் போய் இருந்தன. ஒரு பூவின் ஆயுளை விடக் குறைவானதாய் இருந்தது அவள் வாழ்க்கை. நினைக்க நினைக்க ஆற்றாமையாய் இருந்தது. இன்று மதியம் பனிரெண்டு மணி வாக்கில்தான், இதே இடத்தில்தான் சங்கமேஸ்வரனைப் பார்த்தாள். முன்னிரவில் எல்லாமும் முடிந்து போயிற்று. காலங்களைக் கடந்து வந்து சேர்ந்தவன் அரை நாளிற்குள் முற்றுப் புள்ளியாகிவிட்டான். அங்கை வெடித்து அழுதாள்.

வளும் ரவியுமாய்த்தான் சங்கமேஸ்வரன் உடலை மடியில் தாங்கிக் கொண்டார்கள். ஆட்டோவில் இன்னும் இரண்டு பேர் உடன் ஏறினார்கள். சங்கமேஸ்வரன் தலை இவள் மடியில் இருந்தது.  அவன் முகத்தில் வலியின் சுவடே தெரியவில்லை. அவ்வளவு நிச்சலனமாய் இருந்தது. மானு மானு எனக் கதறியபடியே அவன் முகத்தைத் தட்டினாள். நெஞ்சில் பலமாய் அறைந்தாள். ஒரு சலனமும் இல்லை. பயத்தின் விஷ நகங்கள் அவள் நெஞ்சில்  ஆழமாய் கீற ஆரம்பித்தன. ரவி ஒன்றும் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அரசு மருத்துவமனை அருகாமையில்தான் இருந்தது. விரைந்த ஆட்டோ ஐந்தே நிமிடத்தில் மருத்துவமனையை எட்டியது. உடன் வந்த இருவர் அவசரமாய் கீழே இறங்கி சங்கமேஸ்வரனைத் தூக்கிக் கொண்டு ஓடினர். அங்கை வாயிலிலே நின்றுவிட்டாள். எல்லாமும் முடிந்ததை அவள் உணர்ந்திருந்தாள். அவனின் சலனமே இல்லாத தூங்கும் முகம் அவளுக்கு எல்லாவற்றையும் உணர்த்தியது. ரவி அங்கையை இழுத்துக் கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவிற்குப் போனான். பைக்கில் இருந்து விழுந்துட்டோம் எனச் சொல்லி அவளை இருக்கையில் இருத்தி மருந்து போட வைத்தான். அங்கைக்கு சில சிராய்ப்புகளைத் தவிர ஒன்றுமில்லை. ரவியின் இடது கை வீங்கி யிருந்தது. அசைக்க முடியாத அளவிற்கு வலி. அவனை அட்மிட் செய்து கொண்டார்கள். அங்கை அதையெல்லாம் கவனிக்காது வெளியே வந்தாள்.

சங்கமேஸ்வரனை தூக்கிக் கொண்டு ஓடியவர் வெளியே நின்று கொண்டிருந்தார். இவளைப் பார்த்ததும் நெருங்கி வந்து

“உசிரு நிக்கலமா அப்போவே பட்டுனு பூட்டு கீதுமா” என்றார்.

அங்கை அப்படியே நின்றுவிட்டாள். அவளுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம்தான் என்றாலும் உள்ளுக்குள் ஒரு நப்பாசை இருந்தது. அவர் அவளைத் தொட்டு உலுக்கி

”அவரு உங்க வூட்டுக்கார்ரா? யாரண்டயா சொல்லனுமா? ”

என ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தார். அங்கை அப்படியே நடக்க ஆரம்பித்தாள்.

”த., இந்தாம்மா.., ம்மா.., ”

என அவர் இவளை விதம் விதமாக கூப்பிட்டுப் பார்த்து ஓய்ந்தார். அங்கைக்கு காதுகள் அடைத்துக் கொண்டன. கண்கள் இருட்டின. கால்கள் மட்டும் நடந்து கொண்டிருந்தன. மனம் எண்ணம் எல்லாமும் உறைந்து போயிருந்தது. மழையால் ஊரே நசநசத்திருந்தது. கிழிந்த உடைகளோடும் தலைவிரி கோலத்தோடுமாய் பஜாரை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். இருள் கவிய ஆரம்பித்திருந்தது. வாகன நெரிசல் காமராஜர் சிலையருகில் அதிகமாக இருந்தது. அங்கை பிரதான சாலையின் நடுவில் அசைந்து அசைந்து நடந்து கொண்டிருந்தாள். இரு சக்கர வாகனங்களின் ஒலிப்பான்கள் அலறின. ஒரு பேருந்து அவளுக்கு வெகு சமீபமாக வந்து நின்று பாங்க் என அலறியது அப்படியே மல்லாக்க விழுந்தவள். சுய நினைவை இழந்தாள். யாரோ அவளைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். சற்று முன்பு மருந்திட்ட அதே செவிலியர் குழாமிடம் அவளைச் சேர்த்தனர். அவளைத் திட்டிக் கொண்டே ரவிக்கு அருகில் இருந்த ஒரு படுக்கையில் அவளைக் கிடத்தினார்கள். முதலுதவிகளை ஆரம்பித்தார்கள்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அங்கை கண் விழித்தாள்.  இடது கையில் குளுகோஸ் ஏறிக் கொண்டிருந்தது. எழுந்து உட்கார்ந்தாள். தனக்கு நேர்ந்த சகலமும் கண் முன் ஓடியது. சாதாரணமாய் திரும்பியவள் பக்கத்துப் படுக்கையில் இருந்தவனை உற்றுப் பார்த்தாள். அது ரவி. அவனும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் கையில் கட்டு போடப்பட்டிருந்தது. மெல்ல நரம்பில் ஏறிக் கொண்டிந்த ஊசியைப் பிடுங்கினாள்.  சகலத்திற்கும் காரணமான ரவியைத் தன் கைகளால் கொன்று தீர்த்துவிடும் வெறி அவள் நரம்புகளில் ஏறியது. படுக்கையிலிருந்து இறங்கியவளின் உடலில் அசாத்திய வலு குடியேறியிருந்தது. மெல்ல நடந்து போய் அவனுக்கு அருகில் அமர்ந்தாள்.

அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். யார் இவன்? ஏன் அவளுடைய வாழ்வில் நுழைந்தான்? எதற்கு அவளைப் பார்த்து வெருண்டும் மருண்டும் ஓடினான். அவள் தன்னை அவனுக்குத் தர தயாராகத்தான் இருந்தாள். தன் புள்ளி மான் கனவுகளை அப்படியே விட்டுவிட்டு அவனோடு சேர்ந்து வாழ விரும்பியும் இருந்தாள். பாவி  அவளின் அருகாமைக்கு கூட வரவில்லை. அங்கை வைத்த கண் வாங்காமல் ரவியையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். போதையில் துவளும் அவன் உடல் நினைவில் வந்து எரிச்சலையும் ஆத்திரத்தையும் இரட்டிப்பாக்கியது. அவனை கைகளால் நெறித்துக் கொல்வதே சரியாக இருக்கும். அவளின் இருப்பு அவன் நினைவை அசைத்துப் பார்க்க மெல்லக் கண் விழித்தான்.

எனக்கு ஒண்ணும் இல்ல அங்க என்றான்.  அங்கை பற்களைக் கடித்தபடி சொன்னாள்.

 "நீ என் புள்ளிமான கொன்னுட்டடா"

என்ன, என்ன சொல்ற? என்கிற அவன் பதட்டத்தைப் பொருட்படுத்தாது  உரத்தக் குரலில் கத்தினாள்

"நீ என் புள்ளிமானக் கொன்னுட்டடா கொலகாரப் பாவி"

தடுமாறி எழ முயன்றவனின் மீது பாய்ந்தாள். அவன் கழுத்தை நெருக்கினாள். அவ்வளவு ஆழமாக, அவ்வளவு ஆசையாக அவனது கழுத்தை இறுக்கினாள். அவன் தொண்டைக் குழி நசிக்கும் நொடிக்கு முன்னர்   யாரோ அவளை, அவன் மீதிருந்து இழுத்துக் கீழே போட்டனர். ரவி நெஞ்சே வெடித்துவிடும்படி  இருமி அவன் உயிரைக் காத்துக் கொண்டான். தன்னுடைய எந்த ஆசையுமே நிறைவேறாமல் போன அங்கை வெடித்து அழுதாள்.

யாரோ போலிசைக் கூப்பிடச் சொன்னார்கள். ரவியின் அம்மாவின் முகம் தென்பட்டது. அங்கை நிதானத்திற்கு வந்தாள். மெல்ல வெளியே நடக்க ஆரம்பித்தாள். இரவு அடர்ந்திருந்தது. கடைகளை மூடி விட்டிருந்தார்கள். மருந்தகங்கள் மட்டும் திறந்திருந்தன. அப்படியே நடக்க ஆரம்பித்தாள். மாடுகளும் பன்றிகளும் நாய்களும் சுதந்திரமாக சாலையில் நடமாட ஆரம்பித்திருந்தன. அங்கையின் கால்கள் அவளை சேஷாத்ரி ஆசிரமத்தில் இருக்கும் மானிடமே கூட்டிச் சென்றன. காவலர் கேட்டை அடைத்திருந்தார். இவள் அந்தக் குறுகலான காம்பவுண்டின் மேல் ஏறி உள்ளே குதித்தாள். என்ன ஏது என ஓடிவந்தவர் இவளின் கோலத்தைப் பார்த்துப் பதறினார்.

‘என்னம்மா இப்படி வந்து நிக்குற என்னாச்சி.., என்னாச்சி..,?

 என்கிற கேள்விகளைப் பொருட்படுத்தாது உறங்க ஆரம்பித்திருந்த மானின் அருகாமையில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

எப்படி எப்படியெல்லாமோ அவளைச் சமாதானப் படுத்த முயன்று சலித்துப் போன முதியவர் நுழை வாயிலுக்கு சமீபமாய் நடந்து வந்தார். கேட்டில் யாரோ நின்று கொண்டிருப்பதைப் போல் பட்டது.
யாரு என்றபடியே முன்னால் சென்றார். ஒரு பதின்மன் தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்தான்.

”எங்கக்காவ காணம் தாத்தா” என்றான்

அவனை அவருக்கு தெரிந்திருந்தது.

”இங்கதான்யா இருக்கா.  வா.., உள்ள வா.,  வந்து சீக்கிரம் கூட்டிட்டு போ! ” என்றபடியே கதவைத் திறந்து விட்டார்.

அங்கையின் தம்பி ஓட்டமும் நடையுமாக அங்கை அருகில்போய் நின்றான்.

அக்கா எழுந்து வீட்டுக்கு வா!

எனக் கெஞ்சினான். அங்கை அழுது ஓய்ந்திருந்தாள். சற்றுத் திடமானாள். எழுந்து கொண்டாள்.

வா! போலாம் என்றபடியே முன்னால் நடந்தாள்.  பின் சடாரென நின்று மீண்டும் மானிடம் நடந்து வந்து அதைக் கடைசி முறையாய் பார்த்துக் கொண்டாள். உடலைக் குலுக்கிக் கொண்டாள்.

வாயிலை நோக்கி விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். பெரியவர் நிம்மதியாய் அவர்கள் இருவரையும் வெளியில் விட்டு கதவைப் பூட்டிக் கொண்டார்.

நள்ளிரவில் இருவரும் வீட்டை அடைந்திருந்தனர். அங்கையின் அப்பாவும் அம்மாவும் செய்வதறியாமல் அமர்ந்திருந்தனர். அரசல் புரசலாய் அவர்களுக்கு விஷயம் தெரிந்து விட்டிருந்தது. உள்ளே நுழைந்த அங்கை எதுவும் பேசாமல் அவர்கள் முன் நின்றாள். இனி மீண்டும் ரவி வீட்டிற்குத் தான் போகப்போவதில்லை என்றாள். ரவியும் இங்கு வரக்கூடாது என்றாள். அவர்கள் ஒன்றும் பேசாமல் திகைத்து நின்றனர். அங்கையற்கன்னி உள்ளறைக்குப் போய் அங்கிருந்த மூலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பழைய பாய் ஒன்றை எடுத்து உதறி தரையில் போட்டுப் படுத்துக் கொண்டாள்.

- மேலும்



ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தேழு

$
0
0
"ஐயோ என்ன விட்டுடு"

என்கிற சாமிநாதனின் கதறலை துர்க்கா பொருட்படுத்தவில்லை. தரையில் மல்லாந்து கிடந்தவனின் மார்பில் இன்னொரு முறை ஆத்திரம் மிக மிதித்தாள். அவன் மார்பெலும்புக்கூடு உடைந்திருக்கலாம். சாமிக்கு நெஞ்சு அடைத்துக் கொண்டது. செத்தோம் என நினைத்ததுதான் அவன் கடைசி நினைவு. ஏற்கனவே போதையின் பிடியில் இருந்தவன் சுத்தமாய் மயங்கினான். மரண பயம் உறைய இன்னொரு மூலையில் பெரியசாமி மண்டை உடைந்து கிடந்தார். இரத்தம் வழிந்து அவர் அணிந்திருந்த சட்டையின் நிறத்தை மாற்றியிருந்தது. அவர் மண்டையைப் பிளந்த உலக்கை துர்க்காவின் கையில் இருந்தது. போதைக்கு அவள் தன்னை முழுமையாய் ஒப்புக் கொடுத்திருந்ததால் பச்சாதாபங்கள் காணாமல் போயிருந்தன. திருட்டுத் தாயோலிங்களா என ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருந்தவளின் மூச்சிரைத்தது. உலக்கையை எறிந்துவிட்டு வெளித் திண்ணையில் போய் அமர்ந்து கொண்டாள். அக்கம் பக்கம் இருந்தவர்கள் வீட்டை நோக்கி வர ஆரம்பித்தார்கள். இவர்கள் போட்ட சப்தம் கேட்டு சற்றுத் தொலைவில் இருந்த பெரியசாமி கவுண்டர் வீட்டு விளக்குகள் சடாரென எரிந்தன. நான்கைந்து பேர் ஓடி வந்தார்கள். இவள் ஒரு பிசாசைப் போல வெளியே அமர்ந்திருந்ததைப் பார்த்து சந்தேகித்து உள்ளே ஓடினார்கள். அய்யய்யோ எனக் கத்தியபடியே பெரியசாமியைத் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தார்கள். கார எட்றா கார எட்றா எனக் கத்தினார்கள். கவுண்டர் வீட்டுப் பெண்கள் சூழ்ந்து கொண்டு கதற ஆரம்பித்தார்கள். அந்த இரவு அலங்கோலமாய் கிடந்தது. யாருக்கும் எதுவும் புரியவில்லை.

 சாமிநாதனை யாரோ எழுப்பிப் பார்த்தார்கள். அவன் மயங்கி இருந்தான். செத்துட்டானா என சந்தேகித்து மார்பில் காதை வைத்துக் கேட்டார்கள். உசிரு இருக்குது. இவனையும் வண்டில தூக்கி போடுங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போங்க என்பதைக் கேட்க யாருமில்லை. வண்டி ஏற்கனவே மருத்துவமனையை நோக்கி விரைந்திருந்தது. துர்க்காவை கவுண்டர் வீட்டுப் பெண்கள் உலுக்கிக் கொண்டிருந்தனர். என்னாச்சின்னு சொல்லுடித் தேவ்டியா முண்ட என அவர் கன்னத்தில் பளார் பளாரென அறைந்தார்கள். துர்க்கா உறைந்திருந்தாள். அவளை யாரும் எதுவும் செய்துவிட முடியவில்லை. திருட்டு முண்ட குடிபோதையில இருக்கு என ஆத்திரத்தில் அவளை ஓங்கி அறைந்தார்கள். துர்க்கா அப்படியே சரிந்தாள். 

 ழைய பெட்டியில் ஒன்றையும் தேற்ற முடியாத ஆத்திரத்தில் வெளியே வந்த சாமிநாதன் நேராய் பெரியசாமி கவுண்டர் வீட்டு முன்பு போய் நின்றான். அவர் வெளியில் எங்கேயோ கிளம்பிக் கொண்டிருந்தார். இவனைப் பார்த்து முன்பு போல சிரிப்பதில்லை. என்ன சாமி எனப் பொதுவாக கேட்டார். சாயந்திரம் வீட்டுப் பக்கம் வாங்க, உங்க கிட்ட முக்கியமான விஷயம் பேசனும் எனச் சொல்லிவிட்டு பதிலைக் கூட எதிர்பாராமல் வீட்டிற்குப் போனான். துர்க்கா இன்னும் எழவில்லை. அவள் உறங்கும் கோலம் பார்த்ததும் இவனிற்குள் ஆத்திரம் முசுமுசுவென மூண்டது. இவ ஆங்காரத்த மொதல்ல அடக்கனும். சாமியின் மூளை தீவிரமாக யோசித்தது. கட்டிலுக்கு கீழே வைத்திருந்த விஸ்கி பாட்டிலகளில் ஒன்றை வெளியே இழுத்து, மூடியைத் திருகி அப்படியே வாயில் சரித்துக் கொண்டான். வெளியில் போய் உட்கார்ந்து கொண்டான். 

துர்க்கா அவன் அரவம் கேட்டு விழித்தாள். அவளின் தினசரியைத் துவங்கினாள்.சாமி மெதுவாக குடித்தான். சமையல் ஆனதும் உள்ளே வந்து சாப்பிட்டான். மீண்டும் வெளியில் போய் அம்ர்ந்து கொண்டான். துர்க்கா அவனைப் பொருட்படுத்தவில்லை. வீட்டு வேலைகளில் மூழ்கி இருந்தாள். மதிய சாப்பாட்டை ஒரு தூக்கில் போட்டுக் கொண்டு போய் அப்பாவிற்கு கொடுத்து விட்டு வந்தாள். அசதியில் மீண்டும் போய் கட்டிலில் படுத்துக் கொண்டாள். நான்கு மணி வாக்கில் பெரியசாமி வந்தார். 

இன்னா சாமி ஒரு மாதிரி இருக்கயே என்றபடியே திண்ணையில் அமர்ந்தார். சாமி அதுவரை மனதிற்குள் தீட்டிக் கொண்டிருந்த கணக்கை செயல்படுத்த ஆரம்பித்தான். 

இன்னிக்கு பவுர்ணமி காளி அப்படியே முழுசா எனக்குள்ள வந்து உட்கார்ந்திருக்கா அவள அமைதிபடுத்தத்தான் கொஞ்சம் போல குடிச்சேன் என்றபடியே திரும்பி பின்னால் வைத்திருந்த புட்டியை எடுத்து, தயாராய் வைத்திருந்த டம்ப்ளரில் கொஞ்சம் போல ஊற்றி பெரியசாமியிடம் நீட்டினான். குடிங்க என்றான். பெரியசாமி தயங்கினார். பொழுதோடவா என்றார். அட அடிங்க ஒண்ணும் ஆவாது என்றான். அவர் வாங்கி வாயில் சரித்துக் கொண்டார். நல்லாருக்கே என்றவரிடம் ஸ்காட்ச் என இளித்தான். இன்னொன்னு போடுங்க என்றபடி இரண்டாவது ரவுண்டை அதிகமாய் ஊற்றிக் கொடுத்தான். அதையும் வாங்கி ஒரெ மூச்சில் இழுத்தார். 

 சாமி தெம்பானான் அவன் நினைத்ததை விட இவர் பெருங்குடிதான். தொண்டையைக் கனைத்துக் கொண்டே 

 "கேக்குறேன்னு தப்பா நினைச்சுகாதீங்க இவ்ளோ சொத்துக்கும் வாரிசே இல்லாம இருக்கே என்னன்னாவது யோசிச்சீங்களா?" 

"எல்லாரும் கேக்குற கேள்விதான் சாமி, ஆனா என்ன செய்ய? காலம் கடந்திருச்சே., அவளுக்கும் ஒரு பொண்ணுக்கு மேல பொறக்கல..," 

"சரி அதுல போய் என்ன இன்னொன்னு கட்டுங்க" 

"அட போய்யா., இந்த வயசுல  போய் " 

"என்னா வயசு போங்க. ஆள் பாக்க கிண்ணுதான இருக்கீங்க" 

 பெரியசாமி க்ளாசை நீட்டினார். இன்னொன்னு போடு. 

  சாமி ஆவலாய் நிரப்பிக் கொடுத்தான். அதையும் ஒரே மூச்சில் இழுத்து விட்டு எழுந்து போய் காறித் துப்பிவிட்டு வந்தார். 

 சாமி,  துர்க்கா எனக் கத்தினான். 

தூங்கிக் கொண்டிருந்தவள் அரண்டு எழுந்து வெளியில் வந்தாள். அவளைப் பார்த்ததும் சாமி இளித்தான். 

"கட்ச்சிக்க ஏதாவது எட்த்தாமே., அதிசியமா கவுண்டர் நம்மூட்டுக்கு வந்திருக்கார்" 

சேலையை சரியாகப் போடாமல் வந்து நின்றதால் துர்க்காவின் முலைகள் பளிச்செனத் தெரிந்தன. பெரியசாமி அவளை அப்போதுதான் முதன் முறையாய் பார்ப்பதுபோல அவ்வளவு ஆசையாகப் பார்த்தார். அவர் பார்வையை உணர்ந்து அவசரமாய் துர்க்கா உள்ளே திரும்பிப் போனாள். காய்ந்த மல்லாட்டை இருந்தது. அதை வறுத்து எண்ணெய் மிளகாய்த்தூள் போட்டு ஒரு தட்டில் கொண்டு வந்து வைத்தாள். பெரியாசாமி கொஞ்சம் அள்ளி வாயில் போட்டுக் கொண்டார். காரம் மூளையை எட்டியதும் ஹா என்னம்மா இருக்கு என்றார். 

 சாமி அடுத்த ரவுண்டை ஊற்றியபடியே 

"எல்லாம் நம்ம ட்ரைனிங்தான். அருமையா சமைப்பா, அத விட அருமையா குடிப்பா. போதையாயிட்டா அத விட அருமையா என்ன மேல தூக்கி போட்டுட்டு பண்ணுவா" 

எனச் சொல்லியபடி பெருங்குரலில் சிரித்தான். முகத்தை சுளித்த துர்க்கா அவசரமாய் உள்ளே போனாள். பெரியசாமிக்கு போதை ஏறியிருந்தது. அவன் சொன்னதைக் கேட்டதும் குறும்பாய் சிரித்தார். 

"உன்ன மட்டும்தான் பண்ணுவாளா?"என்றார். 

"உங்களுக்கும் வேணுமா?"என நேரடியாக ஆரம்பித்தான். 

அவர் லேசாக தடுமாறினார். 

"இதுல போய் என்ன கவுண்டரே. உள்ள போங்க"என்றான். 

பெரியசாமிக்கு உடல் முறுக்கியது எழுந்து உள்ளே போனார். துர்க்கா கட்டிலில் அமர்ந்திருந்தவள் எழுந்தாள். என்ன வேணும் என்றாள். நீதாம்மே என ஆசையாய் அவள் மீது பாய்ந்தார். துர்க்கா இதை எதிர்பார்திருந்தாள். மேலே வந்து விழுவதற்குள் ஒதுங்கிக் கொண்டாள். கட்டிலில் போய் விழுந்தவர் சுதாரித்துக் கொண்டு எழுந்தார். 

"இத பாரு நீ இப்ப இருக்கிறது என் வூடு. இன்னும் உனக்கு என்ன வோணும்னு கேளு தரேன். நான் யார்னு தெரியுமில்ல" 

என மீசையை நீவினார். 

 துர்க்கா நிதானமாய் சொன்னாள். "என் வூட்டுக்காரனுக்கு புத்தி பிசகிடுச்சி. உங்க மரியாதைய காப்பாத்திகிட்டு வெளிய போய்டுங்க"என்றாள். 

 பெரியசாமி ஆத்திரமானார். என்னடி பெருசா பத்தினி வேசம் போடுற என எழுந்து அவளைப் பிடித்து இழுத்து கட்டிலில் தள்ளி மேலே படர்ந்தார். துர்க்கா அவரைப் பிடித்து தள்ளினாள். தடுமாறியவரை எட்டி உதைத்தாள். கட்டிலிலிருந்து கீழே விழுந்தவரால் எழ முடியவில்லை. சத்தம் கேட்டு சாமி உள்ளே ஓடிவந்தான். துர்க்காவிற்கு ஆத்திரம் முற்றியிருந்தது. 

"அடத் தேவ்டியாபையா கட்ன பொண்டாட்டியவா கூட்டி கொடுக்கிற?"எனக்கத்தியபடியே அவன் மீது பாய்ந்தாள். சாமி அவளை மடக்கினான். அதே நேரம் பெரியசாமி சுதாரித்துக் கொண்டு எழுந்து  பின்புறமாய் அவள் சேலையை உருவி கைகளை பின்னால் வளைத்துக் கட்டினார். சாமி இன்னொரு பாட்டிலைத் திறந்து அவள் வாயில் ஊற்றினான். துர்க்கா முரண்டு பிடிப்பதை நிறுத்தியிருந்தாள். நிதானமாய் குடித்தாள். மயங்கியதைப் போல் உட்கார்ந்தாள். சாமி கள்ளச் சிரிப்புடன் வெளியேறினான். பெரியசாமி துர்க்காவை கட்டிலில் தள்ளி, பாவாடையே மேலே ஏற்றினார். அவள் அழகின் பிரம்மாண்டம் பார்த்த உடனேயே அவருக்கு கழண்டது. ஏற்கனவே பெரிய போராட்டம் ஒன்றையும் நடத்தியிருந்ததால் உடல் விதிர்த்திருந்தது. அவளைத் தொடக் கூட இயலாமல் வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு வெளியேறினார். 

துர்க்கா கைகளை விடுவித்துக் கொண்டாள். சேலையை அணிந்து கொண்டாள். சமையலறைக்குப் போய் மூலையில் வைத்திருந்த உலக்கையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். சாமி அடுத்த ரவுண்டை பெரியசாமிக்கு ஊற்றிக் கொண்டிருந்தான். வந்து நின்றவளை இருவரும் கவனிக்கவில்லை. துர்க்கா உலக்கையை ஓங்கி பெரியசாமி மண்டையில் நச்சென இறக்கினாள். அலறக் கூட இயலாமல் அதிர்ச்சியில் சரிந்தார். சாமி மிரண்டான். அடுத்த அடி இறங்குவதற்குள் சுதாரித்து திண்ணையில் இருந்து இறங்கி ஓடினான். அவள் உலக்கையை எறிந்தாள். முதுகைப் பலமாய் தாக்கி தலைக் குப்புற விழுந்தான். 

சப்தம் வெளியில் கேட்கும் என யூகித்தவள் ஒரு கையால் பெரியசாமியின் தலைமுடியையும் இன்னொரு கையால் சாமியின் தலைமுடியையும் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து உள்ளே போட்டாள். பெரியசாமி எழுந்து கொள்ள முயன்றார். சாமி கூப்பாடு போட்டான். துர்க்கா மீண்டும் வெளியில் போய் விழுந்து கிடந்த உலக்கையை எடுத்து வந்து பெரியசாமி தலையில் இன்னொரு பலமான அடியை இறக்கினாள். அவர் முழுமையாய் மயங்கினார். சாமி தவழ்ந்து வந்து அவள் காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.  

"போதைல புத்தி பிசகிடுச்சி மன்னிச்சு வுட்ரு"எனக் கதறினான். கால்களாலேயே அவனை விலக்கியவள். மார்பில் ஓங்கி மிதித்தாள். உலக்கையை வயிற்றில் இறக்கினாள். வலி தாங்க முடியாமல் மல்லாந்தவனின் மார்பில் இன்னொருமுறை ஆழமாய் மிதித்தாள். 
அவன் மூர்ச்சையானதும் உலக்கையை எறிந்துவிட்டு வெளியில் போய் அமர்ந்து கொண்டாள்.

அதிகாலையில் சாமிக்கு நினைவு திரும்பியது. ஒரு கணம் என்ன நடந்தது எனப் புரியாமல் விழித்தான். மெல்ல மெல்ல அந்த நாளின் சம்பவங்கள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தன. உடலை அசைக்க முடியவில்லை அடிவயிறும் நெஞ்சும் அப்படி வலித்தது. எழுந்து நின்றான். சமையலறைக்குப் போய் தண்ணீர் எடுத்துக் குடித்தான். பெரியசாமியைக் காணவில்லை. அவர் பிழைப்பது கடினம் எனத்தான் தோன்றியது. அவராகவே போயிருக்க வாய்ப்பில்லை. யாராவது வந்திருக்க வேண்டும். அவசரமாய் வெளியில் போனவன் திண்ணையில் சரிந்து கிடந்த துர்க்காவைப் பார்த்தான். செத்துப் போய்விட்டாளோ என்ற பய எண்ணம் அவனிற்குள் எழுந்தது. மெல்ல அருகில் போய் மூக்கில் விரல் வைத்துப் பார்த்தான். சுவாசம் இருந்தது. அவளைச்
 சப்தம் போடாமல் உலுக்கினான். உள்ளே ஓடிப்போய் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து அவள் முகத்தில் அடித்தான். மூன்றாவது தண்ணீர் விசிறலுக்கு எழுந்து கொண்டாள்.

எதிரில் நின்றிருந்தவன் மீது பாயத் தயாரானாள். சாமி அவள் பாதங்களில் விழுந்தான்.

"மொத மொறையா புத்தி பிசகி தப்பு பண்ணிட்டேன். மன்னிச்சிரு"எனக் கதறினான்.

துர்க்கா சற்று சாந்தமானாள். சாமி தொடர்ந்தான்.

"கவுண்டனுக்கு என்னாச்சின்னு தெர்ல ஆனா பொழைக்கிறது கஷ்டம்னு தோணுது. விடிஞ்சதுன்னா நம்மள பொலி போட்ருவானுங்க"என நடுங்கினான்.

துர்க்கா எழுந்தாள். கூந்தலை உதறி முடிந்து கொண்டாள். வெளியில் எட்டிப் பார்த்தாள். தூரத்து வீடுகளில் லைட் எரிந்தது. தீர்மானமாய் உள்ளே வந்து இரண்டு மஞ்சள் பைகளில் கிடைத்ததெல்லாம் எடுத்து நுழைத்தாள். வா போகலாம் என அவனை இழுத்துக் கொண்டு பின்புறமாய் வெளியேறினாள். வயல்களில் புகுந்து பிரதான சாலை வந்தனர். நடந்தே சங்கராபுரத்தை அடைந்த போது கிழக்கு வெளுக்க ஆரம்பித்திருந்தது. ஒரு பால் லாரி ஹார்ன் அடித்துக் கொண்டு வந்தது. துர்க்கா ஓடிப்போய் நடு சாலையில் நின்றாள். வண்டி நின்றது இருவரும் ஏறிக்கொண்டார்கள். சாமி, வண்டி எங்கப் போவுது என விசாரித்தான். ஓட்டுனர் திர்ணாமல போவுது என்றார்.

சாமி முகத்தில் சாந்தம் படர்ந்தது. அயற்சியில் துர்க்கா கண்களை மூடிக் கொண்டாள்.

 - மேலும்

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து எட்டு

$
0
0

காலையில் எழுந்து வேளானந்தல் போய் கொண்டிருந்தேன். நேற்று மாலை மருத்துவமனையிலிருந்து வந்த அம்மா,

"அமுதா ஊட்டுக்கார் செத்துட்டார்டா. போய்ட்டு வந்துரு. பக்கந்தான் வேளானந்தலாம். நம்ம ஆவூர் மாமா வூட்டதாண்டி. என்னால முடில நீ போய்ட்டு வந்துரு"எனப் படுத்துவிட்டாள்.

நானும் நிறைப் போதையில் இருந்தேன். சாமி அப்போதுதான் கிளம்பிப் போயிருந்தார். வீட்டு ஹாலிலேயே குடித்து விட்டு போட்டிருந்த நான்கு குவாட்டர் பாட்டில்கள் சிதறிக்கிடந்தன. நான் ரகசியமாய் வீட்டில் குடிப்பேனே தவிர இப்படி வெளிப்படையாய் குடித்தது இதுவே முதன் முறை. இனிமேல் ரகசியமாய் இருந்து என்னாகப் போகிறது என்கிற வெறுப்பு. சாமி ஏதோதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் பழைய வாழ்க்கை. சிறு பிராயம். மூங்கில் துறைப்பட்டுக் கதை. துர்க்காவை மணமுடித்த கதை. பாண்டல வாழ்க்கை. அவர் கொடிகட்டிப் பறந்தது. பின் வீழ்ந்தது. என எல்லாமும் சொல்லிக் கொண்டிருந்தார். இடையில் பெரியசாமி செத்தாரா பொழச்சாரா என்கிற கேள்வியை மட்டும்தான் கேட்டேன். அவன் பொழச்சதனாலதான் எங்கள யாரும் தேடி வரல என்றார் சாமி.

துர்க்காவிற்கு அங்கை பரவாயில்லை எனத் தோன்றியது. அங்கை ஒரு பூச்சி. ஏதேதோ பகற்கனவுகளில் மூழ்கியிருந்த பேதைப் பெண். நான் மட்டும் சரியாக இருந்திருந்தால் அவள் எனக்காக உயிரையே கொடுத்திருப்பாள். எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டேன். சில நாட்கள் போகட்டும். மெதுவாய் போய் அவள் காலில் விழுந்து கெஞ்சியாவது திரும்ப இந்த வீட்டிற்கு கூட்டி வந்துவிட வேண்டும். இந்தக் குடி எழவு எல்லாவற்றையும் விட்டுவிட்டு சுத்தமாய், மிகத் தூய்மையாய் ஒரு வாழ்வை வாழ்ந்துவிட வேண்டும். என் நேற்றை திரும்பிப் பார்க்க எனக்கே கூசியது.

 அதிகாலையிலே போதை சுத்தமாகத் தெளிந்தது. கைவலி இல்லை. கழுத்தில் மாட்டியிருந்த கயிறை அறுத்துவிட்டேன். உடை மாற்றிக் கொண்டு வேளானந்தல் கிளம்பினேன். இந்தக் கையை வைத்துக் கொண்டு பஸ் ஏறிப் போவது சிரமம். அரச மரத்தடி ஆட்டோ ஸ்டேண்டிற்குப் போனேன். என்னோடு ஐந்தாவது வரை படித்த சங்கர் அங்கிருந்தான். என்னைப் பார்த்து

"இன்னா வாத்தி"என சிரித்தான்.

"வேளானந்தல் போய்ட்டு வரலாமா அமுதாக்கா வூட்டுக்காரர் செத்துட்டார் டா"என்றான்.

அவன் பரபரப்பானான்.

"அய்யோ எப்ப?"என்றான்.

நேத்து எனச் சொல்லி முடிப்பதற்குள் ஆட்டோவைக் கிளப்பி இருந்தான். ஏறி அமர்ந்து கொண்டேன். வேட்டவலம் சாலையில் ஆட்டோ விரைந்தது. சங்கர் மெதுவாகக் கேட்டான்.

"கைல ன்னா கட்டு? "

"கீழ வூண்டண்டா"

"குட்ச்சிட்டு வண்டில இருந்து வூண்டியா? இன்னாபா ரொம்ப குடிக்கறன்னு கேள்விபட்டேன்."

  ம்ம். ஆமாடா."

" உனுக்கு இன்னா கொற? கவுர்மெண்ட் வேல. கண்ணுக்கு லெட்சணமா பொண்டாட்டி. சொந்த வூடு. அப்புறம் இன்னாடா?

"ஒண்ணும் இல்லடா. ஏதோ கிறுக்கு. வுடு. "

"ம்ம். எல்லாம் அப்படித்தான் பேசிக்கிறாங்க. நீ சின்ன வயசுல இருந்தே பட்ச்சுகினே இருப்ப. அதான் இப்படி. "

"எப்படி?"

"ஹாங் லூசாயிட்ட இல்ல அத சொன்னேன்."

 எனக்கு சிரிப்பு வந்தது. ஃப்ரியா வுட்றா டேய் என்றேன் 

"சரி சரி கைல ஏதாவது வச்சிருக்கியா?"

"  என்னது?"

"இல்லடா நீ எப்பவும் சரக்கும் கையுமாதான் இருப்பன்னு சொல்லிகிட்டாங்க. சாவுக்கு வேற போறம் அதான்"என இளித்தான்.

 ரெயில்வே கேட்டை வண்டி தாண்டி இருந்தது.

"கைல இல்லடா போற வழில வாங்கிக்கலாம்."

நல்லவேளையாக கடை எதுவும் திறந்திருக்கவில்லை. அப்புறம் பாத்துக்கலாம்டா நீ ஓட்டு என்றேன். வேளானந்தலுக்குள் வண்டி நுழைந்தது. மிகச் சிறிய கிராமம். சாவு வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமம் எதுவுமில்லை. சாவு மேளம் உக்கிரமாய் இருந்தது. பாட்டுக்கார லட்சுமி உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தாள். பத்துப் பதினைந்து பெண்கள் முதுகை சேர்த்தணைத்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர். அமுதாக்கா பிணத்தின் தலை மாட்டில் உட்கார்ந்திருந்தாள். பெயருக்கு கூட அவள் அழுததாய் தோன்றவில்லை. எங்களை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. வாங்கி வந்திருந்த மாலையை பிணத்தின் கழுத்தில் போட்டேன்.

அமுதாக்கா எழுந்து வந்து வா என்றாள். அம்மாவுக்கு முடில என்றேன். நீ வந்ததே பெரிசு என புன்னகைக்க முயன்றாள். மேளம் அடிப்பவர்களிடம் போய் பத்து ரூபாய் கொடுத்தேன். பறை உக்கிரமாய் ஒலிக்க ஆரம்பித்தது. பாடை கட்டும் ஏற்பாடுகளை யார் பார்க்கிறார்கள் என விசாரித்தேன். ஒருவர் அதற்கான முயற்சியில் இருந்தார். அவரிடம் இருபது ரூபாய் தாளொன்றை நீட்டினேன்.

அவர் பூ வோணும் சார் கொஞ்சம் தென்னங்கீத்து வேணும் என்றார்.

சங்கரை அழைத்து இருநூறு ரூபாய் கொடுத்தேன். அவனுக்கு கோட்டர் வாங்கிக் கொண்டு பூ வாங்கி வரச் சொன்னேன். இளிப்பாய் நகன்றான்.

அந்த ஓட்டு வீட்டிற்குள் போய் கத்தியைத் தேடி எடுத்துக் கொண்டு தோப்பிற்குப் போனேன். மரம் ஏறத் தெறிஞ்சவங்க யாராவது இருக்கீங்களா என்றதற்கு இரண்டு இளைஞர்கள் முன் வந்தனர். போய் தென்னங் கீற்றுகளை வெட்டி வந்தோம். பாடை தயாரானது. சங்கர் பூக்கூடையை கொண்டு வந்து கொடுத்து விட்டு ஆட்டோவில் போய் படுத்துக் கொண்டான்.

பிணம் கிளம்பியது. கழியின் முன் பாகத்தைத் தாங்கிக் கொண்டு சுடுகாடு போனோம். குழி தயாராக இருந்தது இறக்கி வைத்துவிட்டு சடங்குகளை கவனித்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். அமுதாக்கா வீட்டை நீரால் கழுவி இருந்தாள். அங்கிருந்த சிறு திண்ணையில் அமர்ந்து கொண்டேன். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. உடன் யாருமே இல்லை. எல்லோருமே கிளம்பிப் போயிருந்தார்கள். சங்கரிடம் மேலும் ஒரு நூறு ரூபாய் தாளைத் தந்து போய்விடச் சொன்னேன். அம்மாவிடம் நாளை வருவதாய் சொல்லச் சொன்னேன். அதற்குள் அமுதாக்கா குளித்திருந்தாள். என்னையும் குளிக்கச் சொன்னாள். அணிந்திருந்த உடையோடு போய் தலைக்கு நீரூற்றிக் கொண்டேன். ஒரு புது வேட்டியை எடுத்து வைத்திருந்தாள். கட்டிக் கொண்டு வெறும் உடம்போடு வாசலில் அமர்ந்தேன். அமுதாக்கா யாரையோ அழைத்து பால் வாங்கி வரச் சொன்னாள். ஏழு மணி வாக்கில் ஒரு சில்வர் டம்பளரில் டீ வந்தது . களைத்திருந்தேன். டீயை அமிர்தமாய் குடித்தேன்.

அமுதாக்காவும் ஒரு புதுப்புடைவையை அணிந்து கொண்டு உலை வைத்திருந்தாள். இருள் அடர்ந்து வந்தது. எந்தப் பிடிமானமும் இல்லாமல் இவள் எப்படி இத்தனை வருடம் வாழ்ந்தாள் என்கிற எண்ணம் வந்து போனது. எட்டு மணி வாக்கில் சுடச்சுட சாதத்தையும் குழம்பையும் எடுத்து வந்து வாசலில் வைத்தாள். அவளையும் சாப்பிடச் சொன்னேன். சேர்ந்து சாப்பிட்டோம். சாவு வீட்டின் காமம் துலக்கமாய் என்னுடலில் ஏறியது. குண்டு பல்பு வெளிச்சத்தில் அமுதா ஒளிர்ந்தாள். வெளியே பாய் கொண்டு வந்து போடச் சொன்னேன். அவள் மறுத்து உள்ளே வந்து படுக்கச் சொன்னாள். ஒரு புதுப் பாயை அந்தச் சிறுவீட்டின் நடுவில் விரித்து தலையணைகளைப் போட்டாள். சாவு வீட்டுப் பூ வாசம் இன்னும் மீதமிருந்தது. உடலளவிலும் மனதளவிலும் நான் நசுங்கி இருந்தேன்.

வாசல் கதவைத் தாழிட்டுவிட்டு,  தன் புடவையைக் களைந்து விட்டு என்னருகில் வந்து படுத்துக் கொண்டாள். நான் மிக மெதுவாய் மிக ஆழமாய் அவள் உதடுகளில் முத்தினேன். அவ்வளவு தவிப்போடும் அவ்வளவு ஆசையோடும் என்னை ஏந்திக் கொண்டாள். அதுவரை எனக்குப் பழகிய உடல்கள் யாவும் உடலின் பழக்கங்களைப் போலவே இல்லை. அத்தனை புத்தம் புதிதாய் ஒரு கதவு திறந்தது. உடலின் மாய வெளி எங்கள் இருவருக்குமாய் திறந்து கொண்டது. அத்தனை துக்கங்களையும் அதுவரைக்குமான இழப்புகளையும் நாங்கள் பறிமாறிக் கொண்டோம். ஒரு தேவ ரகசியம் உடைந்து எங்களை எங்களுக்கே புதிதாய் அறிமுகப் படுத்தியிருந்தது. என் எல்லா பாவங்களும் அவள் உதட்டு நீரில் கரைந்தன. நான் மேலும் மேலும் எழுந்தேன். கரைந்தேன். அவளுடலில் தஞ்சமடைந்தேன். வறண்டு போன அவளின் உணர்வுகளனைத்தும் துளிர்த்தன. ஆழ்ந்த கலவிக்குப் பிறகு எங்களின் வெற்றுடல்கள் ஓய்ந்தன.

அதிகாலையில் கூரையின் மீது மழைத்துளி விழுந்த சப்தம்தான் என்னை எழுப்பியது. அப்படி ஒரு உறக்கம். என் வாழ்நாள் முழுக்கத் தூங்கியிராத உறக்கம். பால்யத்திற்குப் பிறகு அவ்வளவு ஆழமாய் போதையில்லாது உறங்கியிருக்கிறேன்.  படுத்த வாக்கிலேயே மஞ்சள் வெளிச்சத்தில் அமுதாவின் முகம் பார்த்தேன். அவள் அசையாமல் தூங்கிக் கொண்டிருந்தாள். யுகங்களாய் தீர்ந்திரா அலைவுறல்களின் முடிவு அவள் முகத்தில் துலக்கமாய் தெரிந்தது. இனி எழவே போவதில்லை என்பது போல் உறங்கிக் கொண்டிருந்தாள். நான் அதைக் கலைக்காது அந்த வீட்டின் மிகப் பழைய வாயில்  கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தேன். மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. இருள் விலகியிருக்கவில்லை. இடுப்பில் இருந்த வேட்டியையும் அவிழ்த்தெறிந்து விட்டு மழை முற்றத்தில் போய் நின்றேன். உடல் சிலிர்த்து சிலிர்த்து அடங்கியது. நானொரு புதுப் பிறப்பெடுத்தேன்.

- மேலும்

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து ஒன்பது

$
0
0
சாமி பூக்கடையைச் சுற்றிச் சுற்றி வந்தான். வழக்கமாய் காலை ஏழு மணிக்கெல்லாம் துர்க்கா வந்து கடையைத் திறந்துவிடுவாள். இன்றோ மணி ஒன்பதாகப் போகிறது. இதுவரை அவளைக் காணோம். இன்னிக்கு என்னாச்சின்னு தெரியலயே என முனகிக் கொண்டான். வீட்டிற்குப் போய் பார்க்கலாம் என நடக்க ஆரம்பித்தான். ரமணாசிரம நூலகத்தை ஒட்டியுள்ள இறக்கமான சாலை  நடக்க ஏதுவாக இருந்தது. இந்தச் சாலையில் மட்டும் இன்னும் மரங்கள் இருக்கின்றன. காலை வெயில் தெரியாத அளவிற்கு மரங்கள் அச்சாலையை மூடியிருந்தன.  மயிலின் அகவலோசை அந்த அமைதியை அவ்வப்போது கிழித்துக் கொண்டிருந்தது.  தாமரை நகர் வேலைக்குச் செல்லும் மனிதர்களால் அடர்ந்திருந்தது. இருசக்கர வாகனங்களின் ஓசை சாலையை நிறைத்தது. வெயில் முகத்தில் வந்து இறங்க சாமி மிக சோர்வாய் உணர்ந்தான்.

நேற்று சாயந்திரம்  ரவியின் வீட்டிலிருந்து மிதமாய் இறங்கினான். நடந்து நடந்து மலை சுற்றும் பாதையிலிருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்காய் வந்தான்.  அங்கு எந்தக் காலத்திலும் காற்று அவ்வளவு குளுமையாய் இருக்கும். கிளை விரித்துப் படர்ந்திருந்த  கல்யாண முருங்கை மரத்தடியில் துண்டை விரித்துப் படுத்துவிட்டான். சாமி இந்த நகரை நடந்து நடந்தே தேய்த்தான். அவனால் அரை மணி நேரம் ஒரு இடத்தில் இருக்க முடியாது. கிட்டத்தட்ட உயிருக்குப் பயந்துதான் திருவண்ணாமலைக்கு வந்தான். அன்று அதிகாலை சங்கராபுரத்திலிருந்து இவர்களைச் சுமந்து வந்த லாரி தேனிமலையில் இறக்கிவிட்டது. அவன் ஆயா வீடு நினைவிற்கு வரவே துர்க்காவுடன் முதலில் அங்குதான் போனான்.அங்கு அவனை உட்காரச் சொல்லக் கூட யாருமில்லை. துர்க்கா அதை எதிர்பார்க்கவும் இல்லை. அவளாக அக்கம் பக்கம் விசாரித்து காலியாக இருந்த ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தாள். கழுத்தில் போட்டிருந்த தாலி மட்டும்தான் தங்கம். அதை யோசிக்காமல் போய் விற்றுவந்தாள். இந்த வேலைதான் என்றில்லாமல் எல்லா வேலையையும் செய்தாள். ஒரு கடை வைத்து உட்கார்ந்த பிறகுதான் வாழ்வு நிமிர்ந்தது. சாமி அப்போதும் ஊரைச் சுற்றி வந்தான். இதோ இன்றளவும் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

முகத்திலறையும் சூரியனை ஒரு கையால் மறைத்துக் கொள்ள முயன்றபடியே வேக வேகமாய் நடந்து வீட்டை நெருங்கினான்.  கதவு சாத்தியிருந்தது. வாசல் கூட்டவில்லை. வெளியூர் எங்காவது போய்விட்டாளா என யோசனையாய் அருகில் வந்தவன் கதவில் பூட்டு இல்லை என்பதை கவனித்தான். துர்க்கா துர்க்கா என அழைத்தபடியே கதவை வேகமாய் தட்டினான். உள்ளே அவள் வரேன் என மெல்ல முனகும் ஓசை கேட்டது.

“இன்னா ஒடம்பு கிடம்பு சரியில்லயா, கதவ தெற மே”

 கதவு திறந்தது

துர்க்கா சிவந்த விழிகளுடன் கதவைத் திறந்துவிட்டு மீண்டும் போய் படுத்துக் கொண்டாள்.

”என்னா ஒடம்புக்கு?”

”ஒண்ணுல்ல. அந்த மாடத்துல அம்பது ரூபா இருக்கு எடுத்துட்டு போ ”  எனச் சொல்லிவிட்டு திரும்பி படுத்துக் கொண்டாள்.

சாமி ஒரு கணம் அவமானத்தில் கூசினான். பின்பு சகஜநிலைக்குத் திரும்பி விளக்கு மாடத்தில் இருந்த ஐம்பது ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியேறினான். முதன் முறையாய் அவள் மேல் பரிவு எழுந்தது. தன்னை நினைத்துக் குறுகினான்.  அதற்குள் தண்டராம்பட்டு சாலையைத் தொட்டு விட்டிருந்தான்.  சிற்றுண்டிக் கடை ஒன்றைப் பார்த்து நின்றான். உள்ளே நுழைந்து பத்து இட்லிகளையும் நான்கு வடைகளையும் கட்டிக் கொண்டான். வீட்டிற்குத் திரும்பி நடந்தான். வீட்டின் கதவு திறந்திருந்தது. துர்க்கா எழுந்துவிட்டிருந்தாள். இவன் திரும்பியதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

சாமி இட்லிப் பொட்டலத்தை நீட்டினான். துர்க்கா எதுவும் பேசாமல் வாங்கி அதைப் பிரித்து ஒரு வட்டிலில் ஐந்து இட்லிகளையும் இரண்டு வடைகளையும் போட்டு அவனிடம் நீட்டினாள்.  அவளும் கீழே  உட்கார்ந்து கொண்டு அந்த இலையிலேயே சாம்பார் ஊற்றி சாப்பிட ஆரம்பித்தாள். நேற்று மதியமும் இரவும் அவள் சாப்பிட்டிருக்கவில்லை.  இருவரும் எதுவும் பேசாமல் உண்டார்கள். சாப்பிட்டதும் சாமி எழுந்து கொண்டான். கட இன்னிக்கு தெறக்கலயா என மட்டும் கேட்டான். துர்க்கா இல்லை என தலையசைத்தாள்.

அப்ப ரெஸ்ட் எடு எனச் சொல்லியபடி வெளியேறினான்.  நடக்கையில்  ஏதோ ஒரு நல்லதைச் செய்ததைப் போன்ற உணர்வு அவனிற்குள் தோன்றி மறைந்தது.

அவன் போனதும் துர்க்கா கதவை அடைத்தாள். பாயை விரித்துப் போட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள்.  இப்படி ஒரு துக்க உணர்வை அவள் வாழ்நாள் முழுக்க அனுபவித்ததில்லை. தன்னை திடமானவளாக தைரியமானவளாகத்தான் நினைத்துக் கொள்வாள். அதன் படி நடந்தும் கொள்வாள். நேற்று  அகத்திய மாமுனியை ஆட்டோவில் ஏற்றிவிட்ட பிறகு ஏனோ அவள் மனம் அதற்கு முன்பில்லாத பாரத்தை உணர்ந்தது. நினைவு முழுக்க அவரோடு நடந்த முதல் காட்டுக் கலவியே நிறைந்திருந்தது. ஒன்றன் பின் ஒன்றாய்  இதேப் பாயில் நிகழ்ந்த கலவிகளையும் நினைத்துக் கொண்டது. எவ்வளவு ஆழமான உறவது. மாமுனி அத்தனை பரிசுத்தமானவராக இருந்தார். அவரோடு முழுமையாய் முயங்கினாள். முழுமையாய் வாழ்ந்தாள். பத்து நாட்கள் இருக்குமா? தான் இழந்த எல்லாமும் தனக்குத் திரும்பி வந்து விட்டதாய் உணர்ந்தாள்.

இந்த நொடி வரை சாமிநாதனை அவள் மன்னிக்கவில்லை. அவனோடு படுக்கவும் இல்லை. அந்தத் தெருவின் எல்லா காமக் கண்களையும் அவள் அசாதாரணமாகக் கடந்தாள். அவளுக்கு யாரைப் பிடித்திருந்ததோ அவர்களோடு கூடினாள். ஆனாலும் அவர்களை தூரத்திலியே வைத்திருந்தாள். மாமுனியைத்தான் முதன் முறையாய் வீட்டிற்குள் அனுமதித்தாள். அவரின் அமைதியும் களங்கமின்மையும் அவளிற்குள்  உறைந்திருந்த ஒரு மென்மையை கண்டறிந்தது. காதலுணர்வு என்பதை முதன் முறையாய் உணர்ந்தாள். அதில் மூழ்கியும் திளைத்தாள். பத்தே நாட்களில் எல்லாம் போனது. துர்க்காவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பெருங்குரலில் உடைந்து அழுதாள். சூரிய வெப்பம் ஓடுகளில் இறங்கி அவ்வீட்டைத் தகிக்கச் செய்தது. உயிர் வாழ்வதின் மீது அவளுக்கு முதன்முறையாய் அலுப்பு தோன்றியது. அப்படியே உறங்கிப் போனாள்.

0

அங்கை கண்விழித்தபோது நேரம் உச்சியைக் கடந்திருந்தது. யாரும் அவளை எழுப்பவில்லை. நேற்று முழுக்கத் தூங்கியிருக்கிறாள். முந்தின நாள் பின்னிரவில் வீட்டிற்கு வந்து படுத்ததுதான். அப்படி ஒரு தூக்கம். நேற்று மதியம் விழிப்பு வந்ததும் எழுந்து போய் குளித்துவிட்டு லேசாய் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிட்டாள். இரவு முழுக்கத் தூங்கி இதோ இன்றையப் பகல் முழுக்கத் தூங்கியும் சோர்வும் அசதியும் அவளை விட்டு நீங்கவில்லை.  வீட்டில், அமைதி இருளைப் போல நிரம்பி இருந்தது. உடல் வலி தாங்க முடியாததாய் இருந்தது. சிரமப்பட்டு எழுந்து போய் குளித்தாள். குளிர் நீர் பட்டதும் மனம் சற்று சாந்தமானது. வெகு நேரம் குளித்தாள். முந்தா நாள் நிகழ்ந்த சம்பவங்கள் யாவும் மீண்டும் மனதில் வந்து உட்கார்ந்து கொண்டு தலையை அழுத்தின. அங்கைக்கு ஏனோ மீண்டும் சமுத்திர ஏரிக்கரைக்குப் போக வேண்டும் போலிருந்தது. அவளும் சங்கமேஸ்வரனும் கலவிய மரத்தடியைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. குளியலறையில் இருந்து வெளியே வந்தாள். உடையணிந்து கொண்டாள். வாசல் கதவு மூடியிருந்தது. அப்பா வேலைக்குப் போய்விட்டிருப்பார். தம்பி பள்ளிக்கூடத்திற்கு. அம்மா கடைக்கு ஏதாவது போயிருக்கலாம். வந்ததும் சொல்லிவிட்டுப் போகலாமா என யோசித்தாள். ஆனால் அதுவரை காத்திருக்க முடியாது. அங்கை உள்ளே போய் தம்பியின் நோட்டிலிருந்து ஒரு தாளை கிழித்தாள். கோவிலுக்குப் போகிறேன் என எழுதி கதவிடுக்கில் வைத்துவிட்டு கதவை மூடிவிட்டு கிளம்பினாள்.

உச்சி வெயில் மண்டையில் இறங்கியது. நேற்று மதியம் லேசாய் சாப்பிட்டிருந்ததோடு சரி. வயிறு எரிந்தது. பசியிலும் சோர்விலும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. மயங்கி விழுந்துவிடுவோமோ எனப் பயந்தாள். மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தாள். சமையலறையில் சாதம்,  ஈயக் குண்டானிலிருந்து அகலக் கிண்ணத்தில் கஞ்சி வடிந்து கொண்டிருந்தது. நிமிர்த்தினாள். சூடு ஆறியிருந்தது. அம்மா நேரத்திலேயே போய் இருக்க வேண்டும். கையினாலேயே சாதத்தை எடுத்து வடிந்திருந்த கஞ்சிப் பாத்திரத்தில் போட்டு கரைத்துக் குடித்தாள். காலி வயிறு சப்தம் எழுப்பியது. நிதானமாய் குடித்துவிட்டு சாதத்தைக் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு முன்பு போலவே வெளியே வந்தாள். தகிக்கும் வெயிலை அவள் பொருட்படுத்தவில்லை பத்தடி நடந்ததும்தான் செருப்பு போடாமல் வந்ததை தார்ச்சாலை நினைவுபடுத்தியது. திரும்பி வீட்டிற்குப் போக அலுப்பாக இருந்தது. சாவப் போகும்போது செருப்பெதுக்கு என வாய்விட்டு சொல்லிக் கொண்டாள். உண்மையாகவேவா சாகப் போகிறோம் என மனதிற்குள் கேட்டுக் கொண்டாள். திடீரென சாவின் மீது ஆசை வந்தது. செத்துதான் போனால் என்ன?  ஒரு வேளை சங்கமேஸ்வரனும் அங்கிருப்பானோ? நேற்றுப் போனவன் இன்று வரும் என்னை ஆசையாய் கட்டிக் கொள்வானில்லையா திடீரென அவள் மனம் துள்ளியது. தானும் இதே சாலையில் வேகமாய் வரும் ஒரு வாகனத்தின் முன்பு விழுந்து செத்து விடலாம் என முடிவு செய்தாள். ஆனால் ஆனால் அதற்கு முன்பு அந்த இடத்தை ஒரு முறை பார்த்து விட வேண்டும். அங்கை சமுத்திர ஏரிக்கரையை நோக்கி நடந்தாள்.

0

துர்க்கா மூச்சிற்காக ஏங்கினாள். அவ்வளவு பெரிய நீர்ப்பரப்பு மற்ற ஆண்களைப் போலவே அத்தனை ஆசையுடன் அவளை விழுங்கப் பார்த்தது. கால்களை உதறி உதறி நீரின் மேற்பரபரப்பிற்கு வந்து மீனைப் போல வாயைத் திறந்து காற்றிற்கு ஏங்கினாள். ஆனால் நொடிக்கும் குறைவாய் அவள் உடலை நீர் உள்ளே இழுத்தது. தண்ணீரை மேலும் குடித்தாள். உடல் வீங்க வீங்க மேலே வரும் வழிகளனைத்தும் அடைத்துக் கொண்டன. கடைசி சுவாசத்திற்கான வாய்ப்பு அறுபட்டபோது துர்க்காவிற்கு விழிப்பு வந்தது. அலறி எழுந்தாள். வியர்வையில் குளித்திருந்தாள். அணிந்திருந்த ஜாக்கெட் முழுவதும் வியர்வையால் நனைந்திருந்தது.  அறை தகித்துக் கொண்டிருந்தது. எழுந்து போய் அடைந்திருந்த கதவுகளைத் திறந்தாள். துண்டை எடுத்து முகத்தை துடைத்தாள். அணிந்திருந்த உடைகளை கழட்டிப் போட்டு துண்டைக் கட்டிக் கொண்டு பின் வாசலுக்குப் போய் குளித்தாள்.

என்ன மாதிரியான கனவிது. அந்த நீர்ப்பரப்பு அவ்வளவு பெரிதாய் இருந்தது. அதை எங்கேயோ பார்த்திருக்கிறோம். யோசிக்க யோசிக்க அது சமுத்திர ஏரி என்பது அவள் நினைவிற்கு வந்தது.  ஒரு அடர்ந்த மழைக்காலத்தில் அவள் அங்கு போயிருக்கிறாள். அந்தப் பரந்த நீர்பரப்பை லேசான பயத்தோடு பார்த்து வந்திருக்கிறாள். பூக்கடை வைத்தபிறகு அவள் உலகம் சுருங்கிப் போனது. கடையையும் வீட்டையும் தாண்டி எங்கும் போவது கிடையாது.  ஏனோ இன்று அவளுக்கு அங்கே போக வேண்டுமெனத் தோன்றியது. குளித்து விட்டு வந்ததும் உடையணிந்து கொண்டாள்.  தலைவார பொறுமையில்லாமல் கூந்தலை உதறி பெரிய கொண்டை போட்டுக் கொண்டாள். சாந்து பொட்டை மட்டும் வைத்துக் கொண்டு வெளியில் வந்தாள். கதவை சாத்தி எரவாணத்தில் சொருகி வைத்திருந்த செருப்பை இழுத்து கீழே போட்டு காலில் அணிந்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள். வெயில் உக்கிரமாய் இருந்தது.  பசி வயிற்றைக் கிள்ளியது பொருட்படுத்தாமல் நடக்க ஆரம்பித்தாள். தாமரை நகர் தாண்டி, அரசுக் கல்லூரிக்கு குறுக்கில் நடந்து சமுத்திர ஏரி செல்லும் சாலைக்கு வந்து சேர்ந்தாள். இடைப்படும் கிராமத்தில் நிறைய மரங்களிருந்தன. வெயிலின் உக்கிரம் தெரியவில்லை. ஏரிக்கரை அடிவாரப் பாதையில் அடர்ந்த மரங்கள் துவங்கும் இடத்திற்கு வந்ததும் அவள் மனம் சமாதானமாகியது. உயர்ந்த மரங்களின் குளுமையும் காற்றும் அவள் பசியை மட்டுப்படுத்தியது. மெதுவாய் நடக்க ஆரம்பித்தாள். கிளைகள் விரித்துப் படர்ந்திருந்த அரச மரமொன்று முதலில் வந்தது. இந்தச் சரிவில் ஏறிப்போய்  நீர்ப்பரப்பை வெயிலில் பார்க்க அலுப்பாய் இருந்தது. மரத்தடியில் கொஞ்ச நேரம் படுத்திருந்து விட்டு மாலையானதும் ஏரி மீது ஏறலாம் என்கிற நினைப்பில் அரசமரத்தடிக்காய் சென்றாள்.

அரசம் பழங்கள் மண்ணில் உதிர்ந்து கிடந்தன. ஏராளமான பறவைகளும் கிளிகளும் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. எறும்பில்லாத இடமாய் பார்த்து அமர்ந்தவள் சுற்று முற்றம் பார்த்தாள். யாரும் கண்ணிற்குத் தென்படவில்லை. தொலைவில் ஆடுகளும் மாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன. முந்தானையை அவிழ்த்து தரையில் போட்டுப் படுத்துக் கொண்டு கண் மூடினாள். அவ்வளவு நிம்மதியாக இருந்தது. தூக்கத்தில் விழ இருந்தவளை வெடித்த அழுகைக் குரலொன்று அடித்து எழுப்பியது. அரண்டு எழுந்தவள் அழுகை வந்த மரத்தின் பின்புறத்தை நோக்கி நடந்தாள். அங்கை மண்ணில் குப்புற விழுந்திருந்தாள். அவள் துக்கம் அழுகையாய் வெடித்திருந்தது. பதறிய துர்க்கா ஓடிப்போய் அவளைத் தூக்கினாள்

யார் யார் மா நீ ? ஏன் இங்க வந்து கிடக்குற என்றவளை அங்கை நிமிர்ந்து பார்த்தாள்.  துர்க்காவின் அகலப்பொட்டும் ஆகிருதியான உடலும் அவளை என்னவோ செய்ய அம்மா எனக் கதறியபடியே அணைத்துக் கொண்டாள். துர்க்கா அவளை அணைத்தபடியே மண்ணில் அமர்ந்தாள். அவளை வாரி மடியில் போட்டுக் கொண்டு முதுகை நீவினாள். அழதாடா அழாதடா எனத் தட்டினாள். அங்கை தன் வாழ்நாளில் உணர்ந்திராத வெதுவெதுப்பை சமாதானத்தை உணர்ந்தாள். எழ மனமில்லாமல் எழுந்து அமர்ந்தாள். துர்க்கா அவள் கூந்தலைக் கோதி மண்ணைத் தட்டிவிட்டு புடவையில் ஒட்டி இருந்த மண்ணையும் தட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். அங்கை மீண்டும்  அவள் மடியில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

துர்க்காவிற்கு அந்தப் பெண் மீது அளவில்லா வாஞ்சை தோன்றியது. அடிக்கடிப் பார்த்த முகமாகத்தான் இருந்தது. அவளிடம் எதுவும் கேட்கத் தோன்றவில்லை.

“உனக்கு என்னனாலும் அம்மா இருக்கண்டா.., அம்மா இருப்பண்டா எப்பவும்..”

 என்றெல்லாம் சொல்லி அவளைத் தேற்றிக் கொண்டிருந்தாள். அங்கை படாரென எழுந்தாள்.

“நான் இங்க  சாகலாம்னுதான் வந்தன்.   ஏன்னு தெரியல உங்களப் பாத்ததும் சாகிற எண்ணம் போய்டுச்சி. உங்களோடவே  வந்து இருந்துடவா?”

”வந்துடு தங்கம். சத்தியமா சொல்றேன் என்னோட வந்துடு. எனக்கும் யாருமே கெடையாது “

துர்க்காவும் உடைந்தாள். இருவரும் அணைத்துக் கொண்டார்கள்.

ஏரிச்சரிவிலிருந்து ஒரு உருவம் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. அங்கைதான் முதலில் கவனித்து யாரோ வராங்க எனச் சொல்லியபடி அணைப்பிலிருந்து விலகினாள்.

துர்க்கா திரும்பிப் பார்த்தாள். சாமிநாதன் சிவப்புத் துண்டை தலைக்கு தலைப்பாகயாய் கட்டிக் கொண்டு வெயிலில் குளித்தெழுந்து வந்து கொண்டிருந்தான்.

- மேலும்



ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் முப்பது

$
0
0

”அசதோமாஸத்கமய
தமஸோமாஜ்யோதிர்கமய
மிருத்யோர்மாஅமிர்தம்கமய ”


 ”நீ சாப்ட்டு கெளம்பிடு”

நிமிர்ந்து பார்த்தேன். அமுதா அடுப்பைப் பற்றவைத்துக் கொண்டே என்னைப் பார்க்காமல் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்தாள். ஈரக் கூந்தல் ஜாக்கெட்டின் பின்புறத்தை நனைத்திருந்தது.

எழுந்து அவள் அருகில் போனேன். அடுப்பருகில் உட்கார்ந்திருந்தவளை கைப்பிடித்து மேலே இழுத்தேன். எழுந்தவளை அணைத்துக் கொண்டு சொன்னேன்

”இன்னிக்கு காலைலதான் நான் புதுசா பொறந்த மாதிரி தோணுச்சி., விடிகாலைல பெஞ்ச மழையில என் துக்கம் எல்லாம் போய்டுச்சி., இனிமே எனக்கு எல்லாம் நீதான்.., உன்ன விட்டு எங்கயும் போவப்போறதில்ல”

”சொன்னா கேள் ரவி. எனக்கு நேத்து ஒரு ராத்திரி உன்னோட இருந்தது வாழ்நாள் முழுக்க போதும்.., நீ வாழ வேண்டிய பையன்.., கெளம்பு”

”நான் எங்க போவேன். எல்லாமும் அடைஞ்சு போச்சு. இனி எனக்கு வாழ ஒரு பிடிமானமும் இல்லங்கிறப்பதான் இது நடந்தது. இத விட மாட்டேன்”

எனப் பிடியை இறுக்கி முரட்டுத்தனமாய் அவளை முத்தமிட்டேன்.

என்னை விலக்கித் தள்ளி நின்று கொண்டாள்.

”நான் வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கை எல்லாம் பீ முத்திரத்த அள்ளி அள்ளியே போய்டுச்சி. நீ வேற புதுசா உள்ள வந்து அதே குழிக்குள்ள தள்ளாத ரவி”

”என்ன சொல்ற?”

”உனக்கு புரியலையா எனக்கு இந்த குடும்ப வாழ்க்கை வேணாம். நல்லவேளையா குழந்தைங்க எதுவும் பொறக்கல. பொறக்கற மாதிரியும் எதுவும் நடக்கல. அப்படியே நான் போய்டுறேன்”

”எங்க போவ நீ., யார் இருக்கா உனக்கு?”

”எனக்கு நான் போதும் ரவி. காரியம் முடிஞ்சதும் இந்த வீடு, இருக்கிற கொஞ்ச நெலம் எல்லாத்தையும் வித்துட்டு எங்காய்ச்சும் போய்டுவேன்”

”எங்காச்சும்னா எங்க? ஏன் இப்படி உளற்ற., உனக்கு இந்த ஊர்ல என்னோட இருக்க கூச்சமா இருக்கும்., நாம இங்க இருந்து போய்டலாம்., கீழ்பெண்ணாத்தூர்ல ஒரு வீடு எடுத்து தங்கிக்கலாம். என் ஸ்கூல் பக்கமா., நாம ரொம்ப நல்லபடியா ஒரு வாழ்க்க வாழலாம் அமுதா.., ப்ளீஸ் ”

”போதும் ரவி. போதும். எனக்கு நானா மட்டும் வாழ ஆசையா இருக்கு. சின்ன வயசுல இருந்தே ரொம்ப தூரம் ரயில்ல போகனும்னு ஆச தெரியுமா? ஆனா இதுவரைக்கும் நான் ரயில்ல கால் கூட வச்சதில்ல.”

”நான் கூட்டிப் போறேன் அமுதா. உனக்கு என்னல்லாம் பிடிக்குமோ எனக்கு என்னலாம் பிடிக்குமோ எல்லாத்தையும் சேந்து பண்ணலாம்.”

”சொன்னா புரிஞ்சிக்க ரவி. நீ போய் உம் பொண்டாட்டி கால்ல விழுந்து வீட்டுக்கு கூட்டிப் போய் நல்ல படியா வச்சுக்க. அம்மாவ பத்திரமா பாத்துக்க. பத்து நிமிசம் அப்படி உக்கார். சாப்டு கெளம்பிடு”

பதிலையும் எதிர்பார்க்காமல் அமுதா அடுப்பருகில் போய் உட்கார்ந்து கொண்டு தீயை அதிகப்படுத்தினாள்.

அவள் குரலிலிருந்த உறுதி என்னை நிலை குலைய வைத்தது. எதுவும் பேசாமல் வீட்டிலிருந்து வெளியே வந்து செருப்பைப் போட்டேன். ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கிளம்பினேன்

ரவி என்றபடி வெளியில் வந்தவளிடம்

சாவு வீட்டுக்கு வந்துட்டு சொல்லிட்டுப் போவ கூடாது என்றபடி அவளைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் நடந்தேன்.

என் வாழ்க்கை அவ்வளவுதான்  எனத் தோன்றியது. போய் மூச்சு முட்ட அந்த மூத்திர ஒயின்ஷாப்பில் குடித்து மட்டையாக வேண்டும் என்கிற வெறி வந்தது. பேருந்து நிறுத்தத்திற்கு வந்து விட்டிருந்தேன். அரை மணி நேரம் நின்றும் பேருந்து வரும் வழியைக் காணோம். ஒரு மண்பாடி லாரி என்னைக் கடந்தது. வெறி பிடித்தவன் போல அதன் பின்னே ஓடினேன். மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்ததை ஓட்டுனர் தாமதமாய் கவனித்து வண்டியை நிறுத்தினான். பாய்ந்து ஏறிக் கொண்டேன். இதயம் உடைந்துவிடுவது போல திம் திம் என அதிர்ந்தது. இன்னோரு கையயும் ஒட்ச்சுக்கணுமா என  அவன் என்னை திட்டிக் கொண்டே வண்டியைக் கிளப்பினான்.

0

அங்கை கண்  விழித்தபோது துர்க்கா தயாராய் காபி போட்டு வைத்திருந்தாள். எழுந்து பல் துலக்கிவிட்டு வந்து அந்தக் காபியைக் குடித்தாள். ஒரே ஒரு அறைதான். அதை ஒட்டினார்போல் தடுப்புச் சுவர் மட்டும் வைத்த சமையலறை. வீட்டிற்குப் பின்னால் தனியாக கழிவறையும்  குளியலறையும் இருந்தன. ஏதோ அந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்த உணர்வு அங்கைக்குத் தோன்றியது. இத்தனைக்கும் நேற்று இரவு மட்டும்தான் அங்கு தங்கியிருந்தாள். சொல்ல முடியாத பிணைப்பை எப்படி முதல் சந்திப்பிலேயே சங்கமேஸ்வரனிடம் உணர்ந்தாளோ அப்படி ஒரு பிணைப்பை துர்க்காவிடமும் கண்டாள். அவளிடம் கோவில் சிலைகளின் சாயல் இருப்பதைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். சாகப்போன தன்னை காக்க வந்த தெய்வமாக அவளை நினைத்தாள். அவள் அணைப்பு அத்தனை ஆதூரமாக இருந்தது. யாரோ அருகில் வருவதை உணர்ந்துதான் நேற்று அவள் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டாள்.

 ஏரிச் சரிவிலிருந்து இறங்கி வந்த சாமி நாதன் துர்க்காவைப் பார்த்து திகைத்தான்.

” இங்க என்ன பன்ற, ஒடம்பு சரியில்லன்னு வீட்ல படுத்திருந்த”

துர்க்கா அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு,

“ ஏரில வூந்து சாவலாம்னு வந்தேன்” எனச் சொல்லி சிரித்தாள்

அங்கை  திடுக்கிட்டு நெஜமாவா எனும்படிப் பார்த்தாள்.

”நெசந்தான் நானும் இங்க சாவலாம்னுதான் வந்தேன்”

சாமி அவளைப் பார்க்காமல்  மெதுவாய் சொன்னான்.

“நீ சாகறதுக்கு முன்னாடி என்ன கொன்னுட்டு அப்புறம் சாவு. இந்த ஈனத்தனமான வாழ்க்கை  நீ  எனக்கு போட்ட பிச்சதான”

துர்க்கா எதுவும் பேசவில்லை. அங்கைக்காய் திரும்பி

இவரு என் வூட்டுக்காரு என்றாள்.

அங்கை சாமியைப் பார்த்து புன்னகைக்க முயன்றாள். சாமி அங்கையை அப்போதுதான் சரியாகப் பார்த்தான்.

“நீ ரவி வாத்தியார் சம்சாரந்தானே?”

அங்கை மருண்டாள்.

”உன் போட்டவ வீட்ல பாத்தனே., இங்க இன்னாமா பன்ற?”

துர்க்கா இடையிட்டாள்

”யாரு ரவி?”

”அட அன்னிக்கு உன்ன பாத்து மெரண்டு ஓடினானே”

துர்க்காவிற்கு நினைவு வந்தது.

“ஓ ராம்சாமி வாத்தியார் மொவன்”

”அவனேதான்”

”அதான் எங்கயோ பாத்த மாதிரியே இருக்கேன்னு நினைச்சுட்டு இருந்தன்.., இவ்ளோ லட்சணமான பொண்டாட்டிய கூட பாத்துக்காத அவன்லாம் இன்னா மனுசன்”

”அவனுக்கு ஏதோ கிறுக்கு. ஆனா சரியாய்டுவான். சரி கெளம்புங்க போலாம். இருட்டப் போவுது”

சூரியன் மேற்கில் இறங்கியிருந்ததை இருவருமே கவனிக்கவில்லை. மறுபடியும் கொண்டுபோய் ரவி யிடம் விட்டு விடுவார்களோ என அங்கைக்குப் பயமாக இருந்தது. தயக்கமாய் எழுந்து கொண்டாள்.

துர்க்கா சாமிக்காய் திரும்பி

“நாங்க வீட்டுக்கு போறோம். நீ இவங்க வீட்டுக்கு போய் அங்கை எங்களோட இருக்குன்னு சொல்லிடு. பயப்பட வேணாம்னு பாத்து பதமா சொல்லிட்டு வா”

சாமி, அங்கையிடம் அவள் வீட்டு முகவரியை வாங்கி கொண்டான். அரசு கலைக்கல்லூரி வரை ஒன்றாய் நடந்து போனார்கள். பிறகு சாமி அங்கை வீட்டிற்காய் நடக்க ஆரம்பித்தான். இவர்கள் தேனிமலைக்காய் நடக்க ஆரம்பித்தார்கள்.  இருட்டத் துவங்கியிருந்தது. துர்க்கா கறி சாப்பிடுவியாம்மா என்றதற்கு அங்கை தலையாட்டினாள். வழியில் கோழிக்கறி வாங்கிக் கொண்டாள்.  வீட்டை அடைந்தார்கள்.

வூடு சின்னதுதான் உனக்கு புடிக்குமோ இன்னாவோ என்றபடியே துர்க்கா பூட்டைத் திறந்தாள். அங்கை அவள் தோளில் கை போட்டு அணைத்து சிரித்தாள்.

துர்க்கா பரபர வென சமையலை ஆரம்பித்தாள். அவள் எதுவும் கேட்காமலேயே அங்கை நடந்த கதை மொத்தத்தையும் சொன்னாள்.  அவளின் சிறு பிராயம் முதல் இன்று மதியம் நடந்தது வரை ஒன்றுவிடாமல் சொன்னாள். துர்க்காவிற்கு அவள் கதைகளைக் கேட்க கேட்க அழுகை முட்டியது. தன் இள நிழலாய் அவளிருந்தாள். ரகசியமாய் கண்களைத் துடைத்துக் கொண்டு. சாப்பாடு ஆய்டுச்சி சாப்டுடலாம் என்றாள்.

கறிக்குழம்பின் மணம் அந்தச் சிறுவீட்டை நிறைத்தது. அஙகையும் துர்க்காவும் தட்டு நிறைய கறியையும் சோறையும் வாரிப்போட்டுக் கொண்டு சாப்பிட்டார்கள். அவர்களின் மொத்த துக்கமும் உணவாய் தட்டிலிருந்தது. அள்ளி அள்ளி சாப்பிட்டார்கள். வயிறும் உள்ளமும் நிறைந்ததில் அங்கை,

என் வாழ்நாளில இப்படி ஒரு ருசியான சாப்பாட்ட சாப்டதில்ல என்றாள்.

துர்க்கா  சிரித்துக் கொண்டே அவளின் தட்டையும் சேர்த்து எடுத்துக் கொண்டு  பின் வாசலுக்குப் போனாள். தட்டிலிருந்த எலும்புகளை வாரி ஜீஜீஜீ என நாயைக் கூப்பிட்டு அதற்கு வைத்தாள். கையைக் கழுவிக் கொண்டு உள்ளே வந்தாள். அங்கை அதற்குள் பாயை விரித்திருந்தாள். இருவரும் படுத்துக் கொண்டார்கள். முன் கதவையும் பின் கதவையும் திறந்துவிட்டிருந்தார்கள். வெக்கை இல்லை. குளுமையாய் காற்று வீசியது.

“பக்கத்துல எங்கயோ மழ பெய்யுதுன்னு நினைக்கிறேன்” என்றாள் அங்கை.

“ம்ம் பெய்யும்”  என்றபடியே துர்க்கா உறங்கிப் போனாள்.

அங்கையும் தூக்கத்திலாழ்ந்தாள்.

காலையில் சமையல் செய்யும் ஓசைதான் அங்கையை எழுப்பியது. எழுந்து காபிக் குடித்துக் கொண்டிருக்கும்போது சாமி வந்தான். துர்க்கா அவனைப் பார்த்து

“குளிச்சிட்டு வா சாப்டுட்டு கடைய போய் தொற” என்றாள்

சாமி அவளையே பார்த்தான்.

“ஏன் அந்த சாமியாரு இல்ல?”

”அவரு வூட்டுக்கு போய்ட்டாரு”

சாமிக்கு சகலமும் புரிந்தது போலிருந்தது. வேறு எதுவும் கேட்காமல் பின் வாசலுக்குப் போய் குளித்தான். உள்ளே வந்து இட்லியையும் நேற்று மீந்திருந்த கறிக்குழம்பையும் சாப்பிட்டான். கடை சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

துர்க்கா அவனை நிறுத்திச் சொன்னாள்,

“வாடின பூவ காளியம்மன் கோவிலுக்கு கொடுத்திரு. நான் ஜோதி மார்கெட் போய்ட்டு உதிரி வாங்கிட்டு கடைக்கு வரேன்”

சாமிக்கு உள்ளூர மகிழ்ச்சி பொங்கியது. கடைசியில் அவள் தன்னை மன்னித்தே  விட்டாள். வெளியே வெயில் சுத்தமாய் இல்லை. மேகம் அடர்ந்திருந்தது. சாலையில் யாரோ பேசிக் கொண்டார்கள்.

“ரெயில்வே கேட்டுக்கு அந்தாண்டலாம் மழயாம்.., விடிகால்ல வேளனந்தலு, ஆவுரு கிட்ட லாம் ஊரப்பட்ட மழையாம்.., ”

இன்னொருத்தர் சொன்னார். ” அப்ப  இங்கயும் வரும். ”

சாமி உற்சாகமாய் நடக்க ஆரம்பித்தான்.

- மேலும்

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் முப்பத்தி ஒன்று

$
0
0
"தீதிலிருந்து நன்மைக்கு 
இருளிலிருந்து ஒளிக்கு 
இறப்பிலிருந்து பெருநிலைக்கு”







வேட்டவலம் பஸ் ஸ்டாண்டிலேயே இறங்கிக் கொண்டேன். லாரி என்னை உதிர்த்துவிட்டு பை பாஸ் ரோட்டிற்காய் திரும்பியது. இறங்கி நடக்க ஆரம்பித்தேன். கை வலிக்க ஆரம்பித்திருந்தது. பள்ளிக்குப் போகும் பிள்ளைகள் சாலையை நிறைத்திருந்தார்கள். புளிய மரத்தடி பேருந்து நிறுத்தத்தில் வழக்கம்போல ரமா தன் மகளோடு நின்று கொண்டிருந்ததை தூரத்திலேயே கவனித்து விட்டேன். அவசரமாய் திரும்பி வந்த வழியே நடக்க ஆரம்பித்தேன். அவள் என்னைப் பார்த்துவிடக் கூடாது. தலையைக் குனிந்து கொண்டே நடந்தேன். பின்னால் வண்டியின் ஹார்ன் சப்தம் கேட்டது. பல்லைக் கடித்தேன். சனியன் அவளாகத்தான் இருக்கும். திரும்பினால், அவளேதான்.

காலை ஊன்றி நின்றிருந்தாள். என்னைப் பார்த்து சிரிக்கவில்லை.

“ வண்டில வந்து உக்காரு ” என்றாள்.

நீ போ என முறைப்பாய் சொன்னேன்.

வந்து உக்கார் என அழுத்தமாய் சொன்னாள். மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போலப் போய் அமர்ந்தேன். வண்டியைக் கிளப்பினாள்.

”யாராவது பாக்கப்போறாங்க” என இரைந்தேன்.

”குடிச்சிட்டு தெருவில விழுந்து கெடக்கும்போது இந்த எண்ணம் வந்தா பரவால்லடா “

அமைதியானேன். அவள் ஒன்றும் பேசவில்லை. கோரிமேட்டுத் தெரு வழியாய் வண்டி தண்டராம்பட்டு சாலையை அடைந்தது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்  என் வீட்டின் முன்னால் வண்டியை நிறுத்தினாள். இறங்கிக் கொண்டேன்.

இனி வேட்டவலம் ரோடு வழியாய் போகவே கூடாது என நினைத்துக் கொண்டே உள்ளே போனேன்

ரமா பின்னாலேயே வந்தாள். அம்மா, ரமாவைப் பார்த்து சிரித்தாள்.

”வா ரமா, இவன எங்க புடிச்ச?” என்றாள்.

”தொர என்ன பாத்துட்டும் பாக்காத மாதிரி நைசா திரும்பிப் போனாரு இழுத்துட்டு வந்துட்டேன்”

அவளை முறைத்தேன்.

அவளே கேட்டாள்

“சாவுலாம் நல்ல படியா முடிஞ்சதா ”

”ம்ம்”

”பாவம் அந்த அக்கா, இனிமேலாச்சும் நல்லா இருக்கட்டும்”

நான் எதுவும் பேசவில்லை. அவளே தொடர்ந்தாள்.

”ரவி, நேத்துதான் அம்மா மொத்த கதையும் எனக்கு சொன்னாங்க. நீ அந்த பொண்ண டைவர்ஸ் பண்ணிடு.., ஊர் உலகத்துல பொண்ணா இல்ல, நல்லதா நாம பாப்பம்.”

எனக்கு கோபமும் ஆத்திரமும் பொங்கியது. சிரமப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

வாசலில் யாரோ கூப்பிட்டார்கள். அம்மா போனாள்.

”பூக்காரம்மா வீட்டுக்காரரா.., ஓ வாங்க வாங்க” என்றாள்.

யாரென்று எட்டிப் பார்த்தேன். சாமி

ஏனோ திடீரென நிம்மதி படர்ந்தது. கண்டிப்பாக இவனிடம் சரக்கு இருக்கும்

”வா சாமி” என்றேன்

ரமா எழுந்து நின்றாள்

அட உக்காரும்மா என்றபடியே சாமிநாதனும் உள்ளே வந்து அமர்ந்தான்.

”வாத்தி நீ கெளம்பு. வா என்னோட”.

அதற்காக காத்திருந்தேன்.

போலாம் சாமி என எழுந்து கொண்டேன்.

”போய் பட்னு கால்ல வூந்திரு”

”யார் கால்ல?”

”உம் பொண்டாட்டி கால்லதான்”

”என்ன ஒளற்ற சாமி”

”உம் பொண்டாட்டி எங்கூட்லதான்யா இருக்கா, வந்து சமாதானமா பேசி கூட்டிட்டு வந்துரு”

எனக்கு திகைப்பாய் இருந்தது.

”அவ எப்படி உங்கூட்ல?”

”நேத்து ஏரில வூந்து சாவப் போயிருக்கா.  நல்ல வேளையா வீட்லயும் நானும் அங்க இருந்தோம். பேசி கூட்டி வந்து வீட்ல வச்சிருக்கோம்”

”அவ என்ன சாவடிக்க பாக்குறா சாமி. அவளைப் போய் கூப்டு வந்து என்ன பன்றது.., சாவறதா?”

”வாத்தி, உனக்கு தெரியாதது இல்ல. ஆயிரம்  இருந்தாலும் இந்த வாழ்க்கய வாழ்ந்துதான ஆவனும்.., அதோட இல்லாம. சின்ன பொண்ணு.., உலகம் தெரியாது.., நாமதான் சொல்லித்தரணும்., ”

 சாமி பேசிக் கொண்டே போனான்.

சாமி இவ்வளவு பொறுப்பாய் பேசுபவனா என எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. அம்மா அவன் பேச்சில் கரைந்தாள்.

”நான் வரேன்., நான் வந்து அவள கூட்டிட்டு வரேன்., ரமா நீயும் வா போகலாம்.,, என எழுந்தாள்.

நான் உள்ளே போய் படுத்துவிட்டேன்.

மூவரும் வெளியே வந்தபோது சரியாய் அங்கையின் அம்மாவும் அப்பாவும்  வந்து சேர்ந்தார்கள்.

சரியான நேரத்துல வந்தீங்க என்றான் சாமி

”இருங்க வாத்தியையும் கூப்டு போய்டலாம். எல்லாத்தையும் பேசினா தீர்த்திட முடியாதா என்ன!”

உள்ளே வந்தவன் என்னை எழுப்பினான். நான் பலமாய் மறுத்துவிட்டேன்.

”அவ வர்ரதுல எனக்குப் பிரச்சின இல்ல. போய் கூட்டி வாங்க”

என திரும்பிப் படுத்துக் கொண்டேன்.

சாமி வெளியே வந்தபோது ஒரு ஆட்டோ வந்து நின்றது. துர்க்காவும் அங்கையும் அதிலிருந்து இறங்கினார்கள்.

வாசலில் இருந்த கும்பலைப் பார்த்து அங்கை தயங்கி துர்க்காவின் விரல்களைப் பிடித்துக் கொண்டாள்.

துர்க்கா  நின்றிருந்தவர்களைப் பார்த்து

“உள்ள போய் பேசலாம் ” என்றாள்

இருக்கைகள் அனைவருக்கும் போதாது. ரமா உள்ளே போய் பாய் கொண்டு வந்து தரையில் விரித்தாள்.

சாமி என்னை வந்து எழுப்பி, ஒம் பொண்டாட்டியே வந்துட்டா எனச் சொல்லிச் சிரித்தான்.

நம்ப முடியாமல் எழுந்து வெளியில் வந்தேன்.

பாயில் அங்கையும் துர்க்காவும் அமர்ந்தார்கள். மற்றவர்களையும் உட்காரச் சொன்னார்கள்.

துர்க்கா பேச ஆரம்பித்தாள்.

”நடந்தது நடந்து போச்சு. யாருக்கும் எந்த கோபதாபமும் இல்லாம இத அப்படியே முடிச்சுக்கலாம்”

அம்மா பதறினாள். முடிச்சுக்கலாம்னா?

”உங்க புள்ளைக்கு வேற பொண்ண பாருங்கம்மா”

”என்னம்மா இப்படி சொல்ற.,” என்ற அம்மாவின் குரலை மீறி

அங்கையின் அப்பா சத்தமாய் கத்தினார்.

“ நீ யாரு இத சொல்ல”

துர்க்கா அவருக்காய் திரும்பி நிதானமாய் சொன்னாள்.

“இனிமே இவளுக்கு எல்லாம் நான் தான். இவள பெத்து வளத்தீங்க அதுக்கு ஒரு கும்பிடு போட்டுக்கறேன். இனிமே இவள பத்தின கவல உங்களுக்கு வேண்டாம்.”

அங்கையின் அம்மா மெளனமாக இருந்தாள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. துர்க்காவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் இரவில் மட்டுமல்ல பகலிலும் அம்மனைப் போலவே தான் இருந்தாள்.

துர்க்கா என்னை நிமிர்ந்து பார்த்து.

“ரவி நீ யார வேணா கல்யாணம் பண்ணிக்கலாம். அதுல இவளுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லன்னு எழுதி கொடுத்திடுறோம். ஒரு பேப்பர் எட்த்தா”

”அதுக்கு அவசியம் இல்ல.., அங்கைக்கு எது சரின்னு படுதோ அதைப் பண்ணட்டும் ”

எனச் சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே போய்விட்டேன்.

அங்கை, அவள் அம்மாவைப் பார்த்துச் சொன்னாள்,

“நான் இவங்களோட கொஞ்ச நாள் இருக்கம்மா”

அங்கையின் அம்மா எழுந்து கொண்டாள்.

அவளின் அப்பா கத்த ஆரம்பித்தார்,

“ என்னா வேல பாத்துட்டு என்னா திமிரா இருக்கா பார்”  என்றபடியே அங்கையை அடிக்கப் பாய்ந்தார்.  அங்கையின் அம்மா அவரை இழுத்துக் கொண்டு வெளியேறினாள்.

ரமா தன் மகளின் பள்ளிப் பேருந்து வந்துவிடும் எனச் சொல்லியபடியே   கிளம்பினாள்.

துர்க்கா, சாமியிடம் சொன்னாள்

”நாங்க வெளியூர் போறம். அப்புறமா வருவோம். நீ வீட்டையும் கடையையும் பத்திரமா பாத்துக்க”

சாமிக்கு திகைப்பாய் இருந்தது. மறைத்துக் கொண்டே சரியென தலையாட்டினான்.

ரவியின் அம்மாவிடம் அங்கையும் துர்க்காவும் சொல்லிக் கொண்டு வெளியே வந்தார்கள். அரச மரத்தடி பேருந்து நிறுத்தத்தில் ஒரு பேருந்து புறப்படத் தயாராய் நின்று கொண்டிருந்தது.

துர்க்கா, அங்கையைப் பார்த்துக் கேட்டாள்.

“அந்த பஸ்ஸ  உன்னால புடிக்க முடியுமா.?”

அங்கை தீவிரமாய் முடியும் என்றாள்

இருவரும் பேருந்தை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள்.


-முற்றும்



உதிரி

$
0
0
இந்த விடுமுறை வழக்கத்திற்கு மாறாகத்தான் இருந்தது. சொல்லி வைத்தார்ப்போல ஒரே மாதிரியான நட்பு சந்திப்புகள், தொலைபேசி அழைப்புகள் என எதுவும் இல்லை. எப்படித் தோன்றியதோ அப்படி இருந்தேன். மரியாதை நிமித்தம், வழமை நிமித்தம் போன்ற எந்த நிமித்தங்களாலும் என் இயல்பை மாற்றிக் கொள்ளாமல் இருந்தது எனக்கே ஆச்சர்யமாகக் கூட இருந்தது. திடீர் பயணங்கள் எதிர்பாராத சந்திப்புகள் நிகழவும் வாய்ப்பாக இருந்தது. நன்றாக ஊர் சுற்றியது இன்னும் விசேஷம்.

இரமணாசிரமப் பகுதிகளில் உலவிக் கொண்டிருந்தபோது ஓரிதழ்ப்பூவின் காட்சிகள் வந்து வந்து விழுந்து கொண்டிருந்தன. ஒரு விதப் பரவச உணர்வில் திளைத்திருந்தேன். இதுதான் அந்த விபத்து நிகழும் இடம். இதுதான் துர்க்காவின் பூக்கடை . புனைவில் வந்த ஏற்கனவே இருக்கும் அந்த டீக் கடையில் ஏலக்காய் மணக்க டீக் குடித்தேன். செங்கம் சாலையில் நடந்து, வலது புறச் சந்தில் திரும்பினால் கொஞ்சம் தூர்ந்து அடையாளம் மாறிப் போயிருந்த பலாக்குளம். என் பதின்மத்தில் அக்குளம் மினுமினுக்கும். பெருமூச்சோடு கருமாரியம்மன் கோவிலுக்கு வந்தேன். புற்று மாரியம்மன் என அதன் பெயர் மாறியிருந்தது. புற்றுகள் சீரமைக்கப்பட்டு செயற்கையாக இருந்தது. அது ஒரு ஆடி வெள்ளிக்கிழமையின் காலை. தெய்வீக மணம் கமழ நடுத்தர வயதுப் பெண்கள் கோவிலில் நிரம்பியிருந்தனர். ஒரு பெண் கூழ் கொடுத்தார். இன்னொருவர் பொங்கல் உருண்டையைக் கையில் திணித்தார். அங்கையின் துர்க்காவின் மலர்ச்செல்வியின் சாயல்களில் யாருமில்லை. இரமணாசிரமத்தில் நாகலிங்கப் பூ மரங்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தேன். வாசம் இருந்தது. மரங்களில் ஓரிரு பூக்களிருந்தன. முன்பு அப்பூவின் மயக்கும் வாசம் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும். இப்போதில்லை. கருத்த இரமணர் சிலையைப் பார்த்துப் புன்னகைத்தேன். என் கதையில் அவர் வருவதை விரும்பியிருப்பாரா எனத் தெரியவில்லை. தியான அறையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பின்பு ஆசிரமக் குடியிருப்புப் பகுதிகளில் வேர்களின் பிடிப்பில் நின்றிருக்கும் ஆலமரங்களைப் பார்த்து வந்தேன்.  இந்தப் பயணம் முழுமையடைய இந்தக் காலை ஒன்று மட்டுமே போதும் என இருந்தது.

அவ்வளவுதான் அலைந்து திரிந்து இன்னும் கருத்து ஊர் திரும்பியாயிற்று. இந்தப் பாதுகாப்பான பொந்தில் வந்து ஆசுவாசத்தோடு அடைந்து கொண்டேன். நேற்று இங்கிருக்கும் வானொலியில் ஆவணப்படங்கள் குறித்துப் பேசினேன். இரவு ’கேம் ஆஃப் த்ரோனின்’ இரண்டு பகுதிகளைப் பார்த்தேன். அப்புனைவின் நினைவுகளோடு தூங்கிப் போனேன்.

இலக்கிய வாழ்வைப் பொறுத்தவரை - அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?!-  நான் நம்பி இயங்கும் தளத்தைப் பொறுத்த வரை, எந்தக் குழுவிலும் பதுங்காத, எந்த முத்திரையும் விழுந்துவிடாத, எதன் சாயல்களும் இல்லாத நானாய் இருந்துவிட்டாலே போதும் எனத்தான் தோன்றுகிறது. சில தருணங்களை அப்படிக் கடக்க முடியாதுதான் என்றாலும் இந்தத் தொலைவு என் விருப்பம்போல் இயங்க என்னை அனுமதித்திருக்கிறது. முன்பு எப்போதுமே விரும்பியிராத இத்தொலைவை இப்போது முத்தமிடுகிறேன். உதிரியாய் இருப்பதே இருப்பு. தேவதேவன் பாணியில் சொல்லப் போனால் உயிரின் சுபாவம் உதிரி.

விக்ரம் வேதா - ஈரோயிச கோராமை

$
0
0

விடுமுறையிலிருந்த இருபது நாட்களில் ஒரு திரைப்படத்தைக்  கூடப் பார்க்கவில்லை. மொத்தமாகவே ஓரிரு மணி நேரங்கள்தாம் தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்திருந்தேன். இந்த நான்கு நாட்களில் அதை நேர் செய்தேன். கேம் ஆஃப் த்ரோன் - ஏழாவது சீசனின் நான்கு பாகங்கள், ட்ராவலர்ஸ் அண்ட் மேஜிசியன்ஸ், கன்யகா டாக்கீஸ், மர்மர் ஆஃப் த ஹார்ட் எனக் கலந்து கட்டிப் பார்த்துவிட்டு கடைசியாய் நேற்று இரவு தூங்கப் போவதற்கு முன்பு விக்ரம் வேதாவைப் பார்த்தேன். முதல் காட்சியிலிருந்து கடைசிக் காட்சி வரை நிறைந்திருந்த ஈரோயிசம் பயங்கரமாய் அலுப்பூட்டியது. கதையை முன் பின்னாக சொன்ன விதமும் ஓரிரு புத்திசாலித்தனமான திருப்பங்களும் என்னை ஈர்த்தன. டிப்பிகல் விசேவை விட மாதவனைப் பிடித்திருந்தது. காதாபாத்திர உருவாக்கமும் நடிப்பும் கச்சிதம்.

மற்றபடி இதே பாணியில் சொல்லப்பட்டுவிட்ட  போலிஸ்  என்கவுண்டர் வட சென்னை தாதாக்கள் குண்டர்கள் கஞ்சா கேங்க்ஸ்டர் சரக்கு குத்துபாட்டு டமால் டுமீல் அசால்ட்பாடிலாங்க்வேஜ் தெறிமாஸ்டைலாக்குகள் பஞ்சுகள் கத்தி இரத்தம் எண்ணூர் பழையபேக்டரி செண்டிமெண்ட் புத்திசாலிபோலிஸ் படுபுத்திசாலிரவுடி வுமனை ஈக்வலாக காட்ட முயற்சித்தல் கழுத்தறுத்தல் போட்டுவிடுதல் பதினாறுகொல பதினெட்டுஎன்கவுண்டர் லட்சலட்ச பணக்கட்டுகள் ஏராளமான சாவுகள் தெரிந்தவன் சாவும்போது சோகப்படுதல் அடியாட்கள் விசுவாசம் துரோகம் பழி பழிக்குப்பழி சர்வைவல் ஆப் த ஃபிட்டஸ்ட்  நோ நல்லவன் நோ கெட்டவன் எல்லாம் நல்லவன் இல்லன்னா எல்லாம் கெட்டவன் சம்பளம் அதிகமென்பதால் ஈரோவை ஈரோவாகவே வைத்திருத்தல். மற்ற எல்லாரையும் கெட்டவர்களாக்குதல் ...கெட்டவன் நல்லவனாதல் நல்லவன் கெட்டவனாதல் நாம நல்லவன்னு நினைச்சிட்டு செய்யுறது கெட்டது....இப்படியே போய்க்கொண்டிருந்தபோது கொஞ்சம் திகிலாகி ஹலோ குடும்பமே என்னதான் சொல்ல வரீங்க என்றே திரையைப் பார்த்து கேட்கவேண்டியதாயிற்று. பத்து நிமிட டமால் டுமீல் டிஷ் டுஷ் க்குப் பிறகு படம் முடிந்ததும், உஸ்ஸ்ஸ் ஹப்பாடா என்றிருந்தது.

விஜய்க்கென அஜித்கென தனித்தனியாய் உருவாகும் ஒரே மசாலா இப்போது விஜய்சேதுபதிக்கெனவும் கோலிவுட்டில் உருவாக்கப்படுகிறது. அதே மசாலாதான் ஆனால் அசால்ட் பாடி லாங்க்வேஜ் இருக்கனும். பஞ்ச் குறைவா இருக்கனும், எப்படி இயல்பா இருக்கான் பாருய்யான்னு சொல்ல வைக்கனும். அவ்வளவுதான் படம் ஹிட்.

போரடிக்குது மிஸ்டர் விசே.


1. போலிஸ் தனிப்படை அமைச்சி வேதா கும்பல போட்டு தள்ள நெனைக்கிற அளவுக்கு அவரும் அவர் கும்பலும் என்னா பண்ணாங்கன்னு தெரியல. வட சென்னை பேக்ட்ராப்ல கெத்தா ஒருத்தன் நடக்கிற மாதிரி காம்ச்சாவே கேங்க்ஸ்டர் தானோ ?

2. சேட்டா பல வருஷமா அப்படியே தான் இருக்கார். அவர போலிஸ் என்னான்னு கூட கேக்குறதில்ல

3.ஏரியா லீட் சேட்டா- அப்புறம் ஏன் சோட்டா கஞ்சா சப்ளையர் ரவி வேதா கேங்குக்கு 20 பர்சண்ட் தரனும்?

4. பணம் திருப்பிக் கெடைச்ச பிறகு ஏன் கேங்க் வார்? சேட்டாவுக்கும் வேதாவுக்கும் கேங்க் வார் வர்ரதுக்காக சொன்ன காரணம் பயங்கர மொக்க.

5. ரவி போலிஸ வாங்குற அளவுக்கு கெத்தா? - ஒரு சீன் கூட வைக்கலியே

இப்படி அடுக்கடுக்கா படத்துல பயங்கர ஓட்டைகள். எழுத போர் அடிக்குது.  விசேவின் மாதவனின் ஈரோயிசத்தால படம் தப்பிக்குது. இதை க்வாண்டின் டரண்டினோ படத்தோடலாம் ஒப்பிட்டு ஃபேஸ்புக்கர்கள் புளகாங்கிதம் அடைஞ்சாங்களாமே? அப்படியா!


பல்ப்

$
0
0

இனிமேலாவது இலக்கிய இதழ்கள் வெளியிடும் கதைகளின் வடிவில் சிலவற்றை எழுத  வேண்டும்.  அதை அந்தந்த இதழ்களுக்கு அனுப்பி வெளியிடுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதேச் சூழலில் புழங்கும் பத்து நபர்கள் கொண்ட  இலக்கிய எழுத்தாளர் குழாமில் பதினோராவது ஆளாக இணைந்து கொள்ள வேண்டும். இவர் இந்த வழி வந்தவர். இவரே பின்நவீன யுகத்தின் புதுக் கதை சொல்லி போன்றப் புகழாரங்களை  வென்றெடுக்க வேண்டும் போன்ற ஆசைகளெல்லாம் எனக்கும் இருக்கிறதுதான் . ஆனால் எப்போதுமே இருக்கும் குரங்குப் புத்தி அதைச் செய்ய அனுமதிப்பதில்லை. அது இப்படித்தான் ப்லாக்கில் உட்கார்ந்துகொண்டு  குறுநாவலை எழுதச் சொல்கிறது. போகட்டும் இவ் விளையாட்டை கடைசியாய் இந்த ஒரே ஒரு முறை ஆடிவிட்டு நிறுத்திக் கொள்வோம்.

பல்ப். அடுத்த குறுநாவலின் தலைப்புதான்.

பல்ப் நாவலின் முடிச்சு ஐந்து வருடங்களுக்கு முன்னால் மனதில் வந்து விழுந்தது. அதே வேகத்தில் சில அத்தியாயங்களை எழுதிப் பார்த்தேன். இந்த நாவல் கீழ்கண்ட தளங்களில் இயங்குகிறது.

1. இது ஒரு நாவல் எழுதுவதைப் பற்றிய நாவல்.
2. பல பல்ப் நாவல்களின் தொகுப்பு.
3. பல்ப் நாவலாசிரியர்கள் குறித்தும் அதை எழுதுவது குறித்துமான நாவலாக இது இருக்கும்.
4. இலக்கிய எழுத்து மற்றும் எழுத்தாளர்களைப் பற்றியும் இந் நாவல் பேசுகிறது
5. இலக்கிய எழுத்து மற்றும் பல்ப் எழுத்து இரண்டையும் எதிர் எதிரே வைத்து விளையாடும் ஆட்டமாக இது இருக்கும்.
6. இந்த இரண்டு வகை எழுத்தின் போலித்தனங்களைக் குறித்துப் பேசும் நாவலாக இது இருக்கும். மேலும்  ஒட்டு மொத்த எழுத்தாளர்களின் போலித்தனங்களைக் குறித்து பேசும் நாவலாகவும் இருக்கும்.


குழப்பமாக இருக்கிறதல்லவா. சரி இப்படி வைத்துக் கொள்ளலாம். இது எழுதுபவர்களைப் பற்றிய மற்றும் எழுதுவதைப் பற்றிய நாவல்.

“அப்படியென்றால் போலிகளைப் பற்றிய போலித்தனங்களைப் பற்றிய நாவலா?”

தெரியாது. ஆனால் ஒரு உண்மை என்னவெனில் இந்நாவலுக்கு
ஆரம்பத்தில் போலி எனத் தலைப்பு வைக்கத்தான் நினைத்தேன். ஆனால் அது போளி எனவும் நம் அறிவார்ந்த சமூகத்தில் புரிந்து கொள்ளப்படும் என்பதால் பல்ப் எனும் ஆங்கிலப் பெயரையே வைத்துக் கொண்டேன். தமிழ் சினிமாவைப் போல தமிழ் நாவல்களுக்கு வரியும் கிடையாது விலக்கும் கிடையாது என்பதால் எந்த மொழியிலும் தலைப்பு வைத்துக் கொள்ளும் சுதந்திரம் எழுதுபவருக்கு இருப்பது பாக்கியம்தான் அல்லவா!

எழுத்தாளர்களைப் பற்றிய நாவல் என்பதால் பல சமகால எழுத்தாளர்களின் சாயலை இந்நாவலில் பார்க்க முடியும். அவை யாவும் கற்பனையே. உண்மையென நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நீங்களே பொறுப்பு.
Viewing all 133 articles
Browse latest View live